
http://naathamnews.com/?p=4828
சீனாவினைச் சுற்றிவளைக்கும் நோக்கம் கொண்ட அமெரிக்காவின் ஆசிய-பசுபிக் பிராந்திய பாதுகாப்பு பொறிமுறையின் ஒர் அங்கமாக ஒஸ்திரேலியாவின் வடபகுதி துறைமுகமான டார்வினை அமெரிக்காவின் ஒரு தொகுதி கடற்படையினர் சென்றடைந்துள்ளனர்.
ஒஸ்திரேலியாவுக்கு அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா கடந்த ஆண்டு மேற்கொண்ட பயணத்தின்போது ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் வழியே தற்போது அமெரிக்கப் படைகள் ஒஸ்றேலியாவில் கால்பதித்துள்ளனர்.
2500 வான்-கடல் சிறப்பு அதிரடிப்படையினர் ஒஸ்றேலியாவில் முகமாமிடவுள்ள நிலையில் இதன் முதற்கட்டமாக 200 போ இன்று ஒஸ்றேலியாவினைச் சென்றடைந்துள்ளனர்.
ஒஸ்திரேலியாவுக்கான அமெரிக்கத் தூதர் ஜெப்ரி ப்ளீச், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியையும் நிலைத்தன்மையையும் உருவாக்க அமெரிக்கா தொடர்ந்து பாடுபடும் என தெரிவித்துள்ளதோடு , சர்வதேச கடல்வழி வர்த்தகத்தில் முக்கியப் பங்காற்றும் இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் மற்றும் திமோர் கடற்பரப்பை எளிதில் எட்டக் கூடியவகையில் டார்வின் துறைமுகம் அமைந்திருப்பது சிறப்புக்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எமது கடற்படையினர் இப்பிராந்தியத்தில் எங்கும் பயிற்சி பெறுவதற்கு எமக்குக் கிடைத்திருக்கக் கூடிய அற்புதமான வாய்ப்பு என அமெரிக்காவின் பசிபிக் பிராந்திய கடற்படை தளபதி டுயானே திசென் தெரிவித்துள்ளார்.
வியட்நாம் போருக்குப் பிறகு இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கா மேற்கொண்டிருக்கும் மிகப்பெரிய முதலாவது ராணுவ நடவடிக்கை இதுவென அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.



















