Help - Search - Members - Calendar
Full Version: ஐந்து அப்பாவி பொதுமக்கள் படையினரால் படுகொலை
யாழ் கருத்துக்களம் > தகவற் களம் > செய்திகள் : தமிழீழம்
narathar
சர்வதேசமே சிறிலங்கா அரசின் படுகொலைப் பயங்கரவாததிற்கு உனது பதில் என்ன?

user posted image

user posted image
Five civilians shot and killed by SLA soldiers in Puthur East, Jaffna

[TamilNet, April 19, 2006 03:11 GMT]
Sri Lanka Army (SLA) soldiers shot and killed five Tamil civilians Tuesday night close to an SLA 51-1 Division camp located at Vatharavathai, 13 km north-east of Jaffna. The SLA soldiers took the five civilians, a Municipal Council official, an electrical mechanic, a farmer and two auto-rikshaw drivers, inside the army camp and later brought them out to an open terrain and gunned them down, villagers said. A terror-campaign, let loose on the civilians in the area by the soldiers attached to the SLA camp after the villagers spoiled a rape attempt in the village, triggered a series of Claymore attacks in Jaffna last October. Tension prevails in Puthur area.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=17821
Thala
ஊரில் இருக்கும் ஆம்பிளை பொம்பிளை எல்லாம் போய் இயக்கத்தில சேரச்சொல்லி சொல்லுறான் போல கிடக்கு...... மக்கள் அவர்களை பாதுகாத்துக் கொள்ள அதுதான் சரியானவளி.... இல்லாவிட்டால் வன்னியில் போய் தங்க வேண்டியதுதான்...!
Sivakolunthu
அரச பயங்கரவாதத்திற்கு உயிர்களை இழந்த அப்பாவிப் பொதுமக்களிற்கு கண்ணீர் வணக்கங்கள்.:cry:
அருவி
புத்தூரில் ஐந்து அப்பாவி பொதுமக்கள் படையினரால் படுகொலை
- பாண்டியன் - Wednesday, 19 April 2006 10:13

யாழ். புத்தூர் வாதரவத்தைப் பகுதியில் நேற்றிரவு சிறீலங்கா படையின ரால் ஐந்து அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு ள்ளனர். மாநாகரசபை அதிகாரி, மின்உபகரண திருத்துனர், விவசாயி மற்றும்
இரு முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் ஆகியோரே படையினரால் படு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு சுகவீனமுற்றிருந்த உறவினர் ஒருவரை அவரது வீட்டில் விட்டுவிட்டு முச்சக்கர வண்டியில் சென்ற நால்வர் இரவு 10.30 மணியளவில் படையினரால் மறிக்கப்பட்டு 51-1 படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இவர்களை காணாததால் அப்பகுதியால் தேடிச் சென்ற மற்றொரு முச்சக்கர வண்டியின் ஓட்டுனரும் படையினரால் மறிக்கப்பட்டு படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர் இவர்கள் ஐவரையும் படைமுகாமிற்கு அருகேயுள்ள தரவை வெளிப் பகுதிக்கு அழைத்துச் சென்ற படையினர் அவர்களை ஓடுமாறு பணித்துள்ளனர். இதனையடுத்து ஓடிய ஐவர் மீதும் பின்னே நின்ற இராணுவத்தினர் சரமாரியாக துப்பாக்கிச் பிரயோகம் செய்துள்ளனர். படையினரின் துப்பாக்கிச் சூட்டினால் சம்பவ இடத்திலேயே ஐவரும் உயிரிழந்துள்ளனர்.



மாநகரசபை அதிகாரி கந்தசாமி கௌரிபாலன்(32), முச்சக்கர வண்டி ஓட்டுனர் பாலசுப்பிரணியம் கண்ணதாசன்(27), மின்உபகர திருத்துனர் செல்லப்பபு கமலதாசன்(25), விவசாயி மகாதேவன் கிசோர் குமார்(20) ஆகியோரும் அவர்களை காணாது தேடிச் சென்ற முச்சக்கர வண்டி ஓட்டுனர் தங்கராசா ரவீந்திரன் ஆகியோரே படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் மூவரின் சடலங்கள் ஒரே இடத்திலும் மற்றைய இருவரின் சடலங்கள் 200 மீற்றர் தூரத்திலும் கிடந்துள்ளன.

படையினரின் இந்த வெறிச்செயலால் புத்தூர் பகுதி மக்கள் கடுமையான ஆத்திரத்திற்கு உள்ளாகியுள்ளனர். அப்பகுதியில் கடுமையான பதற்றம் நிலவுகிறது.

தகவல் மூலம்
சங்கதி
செய்தி இணைப்பு
வினித்
யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஒரு மக்கள் போராட்டம் வெடிக்கும் போல் இருக்கிறது :cry:


ஆனால் ஒன்று மட்டும் வடிவா தெரிகிறது யுத்தம் முலம் தீர்வு கிடைக்கும்மாயின் வடகிழக்கில் உள்ள மற்ற இனத்தவ்ரின் இருப்பு கேள்வி குறிதான் tongue.gif tongue.gif tongue.gif
Subiththiran
உதெல்லாம் வெளிநாடுகள் குடுக்கிற தைரியம்தான். வெளிநாடுகள் புலிகளை கண்டிக்க அரசுக்கும் தெம்பேறுது. புலிகளை மட்டுமே கண்டிக்கிற நாடுகளுக்கு உதொண்டும் கண்ணுக்கு தெரியேல்ல.
kurukaalapoovan
வினித் நீங்கள் கூறுவது தவறு. யுத்தம் மூலம் தீர்வு என்னபது தெரிந்த ஒன்று ஆனால் மற்ற இனத்தவரின் இருப்பு கேள்விக்குறியாகாது.

யுத்த காலத்தில் அவர்கள் வெளியேற வேண்டி வரலாம். இது தற்காலிகமானது.

தமிழர் தாயக பிரதேசத்தில் இருந்து சிங்களப்படைகள் பலத்த தோல்வியோடு வெளியேறும் பொழுது தென்னிலங்கையில் தமிழரின் இருப்பும் கேள்விக் குறியாகும்.
Mathuran
உலகம் எண்டு சொல்லி பூச்சாண்டி காட்டுறதுகள விட்டிட்டு, இனவாதிகளை இனங்கண்டு அளிப்பதே மேல்.
மின்னல்
இன்னும் எத்தனை எத்தனையோ தெரியாது...

இதற்கு முடிவு கட்டவேண்டியர்கள் தொடர்ந்து பொறுமை காப்பது ஏனோ என்பதுதான் புரியவில்லை.

அவர்களின் பொறுமையின் எல்லை... சில நாட்களா? சில வாரங்களா? அல்லது ஒரிரு மாதங்களா?

அவர்களின் பொறுமை விரைவில் கலைந்து விடுதலைக்கான பயணம் தொடங்குமென நம்புவோம்.
வினித்
[quote=kurukaalapoovan]வினித் நீங்கள் கூறுவது தவறு. யுத்தம் மூலம் தீர்வு என்னபது தெரிந்த ஒன்று ஆனால் மற்ற இனத்தவரின் இருப்பு கேள்விக்குறியாகாது.

யுத்த காலத்தில் அவர்கள் வெளியேற வேண்டி வரலாம். இது தற்காலிகமானது.

தமிழர் தாயக பிரதேசத்தில் இருந்து சிங்களப்படைகள் பலத்த தோல்வியோடு வெளியேறும் பொழுது தென்னிலங்கையில் தமிழரின் இருப்பும் கேள்விக் குறியாகும்.[/quote]


கட்டாயம் தென்னிலங்கையில் இருக்கும் தமிழர்கள் உடுத்த உடுபுடன் தான் வர வேண்டி வரலாம் அதில் எனக்கும் மாற்று கருத்து இல்லை அதே சமையம் வடகிழக்கில் இருக்கும் சிங்களவரின் இருப்பும் சில சம்பவங்கள் விடுதலைப்புலிகலையும் மிறி நடந்து ஏறும் என எதிர்பாக்கலாம்!
Subiththiran
[quote=Mathuran]உலகம் எண்டு சொல்லி பூச்சாண்டி காட்டுறதுகள விட்டிட்டு, இனவாதிகளை இனங்கண்டு அளிப்பதே மேல்.[/quote]

உந்த உலகத்தாலதான் இன்றுவரைக்கும் பொறுமை காக்கிறார்கள் இல்லையேல் அவர்கள் எப்பவோ காலி.
Subiththiran
[quote=வினித்][quote=kurukaalapoovan]வினித் நீங்கள் கூறுவது தவறு. யுத்தம் மூலம் தீர்வு என்னபது தெரிந்த ஒன்று ஆனால் மற்ற இனத்தவரின் இருப்பு கேள்விக்குறியாகாது.

யுத்த காலத்தில் அவர்கள் வெளியேற வேண்டி வரலாம். இது தற்காலிகமானது.

தமிழர் தாயக பிரதேசத்தில் இருந்து சிங்களப்படைகள் பலத்த தோல்வியோடு வெளியேறும் பொழுது தென்னிலங்கையில் தமிழரின் இருப்பும் கேள்விக் குறியாகும்.[/quote]


கட்டாயம் தென்னிலங்கையில் இருக்கும் தமிழர்கள் உடுத்த உடுபுடன் தான் வர வேண்டி வரலாம் அதில் எனக்கும் மாற்று கருத்து இல்லை அதே சமையம் வடகிழக்கில் இருக்கும் சிங்களவரின் இருப்பும் சில சம்பவங்கள் விடுதலைப்புலிகலையும் மிறி நடந்து ஏறும் என எதிர்பாக்கலாம்![/quote]

சிங்களவர் வடக்கில் வசிக்கிறார்களா?
:roll: :roll:
வினித்
[quote]சிங்களவர் வடக்கில் வசிக்கிறார்களா?[/quote]ம்


பெரிச இல்லாட்டிலும் மன்னார் ,வவுனியாவில் இருப்பர்கள் தானே?
This is a "lo-fi" version of our main content. To view the full version with more information, formatting and images, please click here.
Invision Power Board © 2001-2010 Invision Power Services, Inc.