![]() ![]() |
| thamilvanan |
Mar 11 2005, 04:26 PM
Post
#1
|
|
Group: Members Posts: 98 Joined: 11-March 05 Member No.: 1,154 |
சரி கொஞ்சம் சிரிங்க.
சிரிக்க சிரிக்க - 2 அப்போது அதிகாலை பத்துமணி. மைக்கல் மிக வேகமாக தனது அலுவலகத்தை நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரின் மனைவியின் அவசர தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. " என்ன விசயம் " கேட்டார் மைக்கல். " நீங்கள் போற பாதை வழியாக ஒருவர் பக்கம் மாறி காரை செலுத்தி செல்வதை தற்போது ஐந்து நிமிடமாக நேரடி ஒளிபரப்பில் தொலைக்காட்சியில் காட்டிக்கொண்டிருக்கிறார்கள . எனவே அவதானமாக செல்லுங்கள்" என மனைவி கூறினார். அதனை அதுவரை செவிமடுத்த மைக்கல் "ஓ ஒரு ஆளையா இவ்வளவு நேரமா காட்டுறான்கள். இஞ்ச என்னைத்தவிர எல்லாரும் அப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறான்கள்" என்றார். தீயன்னா என்பவர் பெரிய தொழிலதிபர். அவருக்கு பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய தேவைகள் இருந்தபோதும் விமானங்களில் பயணம் செய்வதை விரும்பமாட்டார். அதற்கான காரணம் தான் சுவாரசியமானது. அவர் சர்வதேச விமான போக்குவரத்துகள் சம்பந்தமான புள்ளிவிபரம் ஒன்றே அவர் அவ்வாறு விமான பயணங்களை தவிர்த்து வேறு போக்குவரத்துகளையே பயன்படுத்துவதற்கான காரணம் ஆகும். அதாவது பத்தாயிரம் விமானங்களை எடுத்துக்கொண்டால் அதில் ஒரு விமானத்தில் குண்டுகள் இருப்பதற்கான சாத்தியம் இருக்கிறது என்பதே அப்புள்ளிவிபரம். எனவே பத்தாயிரத்தில் ஒரு விமானமாக தன்னுடைய விமானம் இருந்து விடும் என்பதே அவரது விமானப்பயணத்தவிர்ப்புக்கு காரணம். ஆனால் அன்றைய தினம் தனது அவசர கூட்டத்துக்கு விமானத்திலேயே அவர் ஆச்சரியப்படத்தக்க வகையில் வந்திருந்தார். எனவே எல்லோரும் அதற்கான காரணத்தை அறிய ஆவலாக இருந்தனர்.அதற்கு பதில் அளித்த அவர்" குறிப்பிட்ட புள்ளிவிபரப்படி ஒரு குண்டு இருப்பதற்கான சாத்தியம் 10000 இல் 1. இரண்டு குண்டுகள் இருப்பதற்கான சாத்தியம் 100000000 இல் 1. அதனால் ஒரு குண்டை நான் வரும்போதே கொண்டுவந்தேன். " (அடுத்த குண்டை வைப்பதற்கான சாத்தியம் 100000000 இல் ஒன்று அல்லவா. ஆனால்ஒரு சந்தேகம்.கணிதப்புள்ளிமான்களே இது கணித ரீதியாக சரியா?) தமிழ்ச்சங்கமம் |
| Eswar |
Mar 11 2005, 07:32 PM
Post
#2
|
|
Group: Members Posts: 558 Joined: 24-November 04 From: இமயத்தில் ஒரு பகுதி Member No.: 817 |
புள்ளிவிபரம் என்பது சராசரியாக வருவது. முதல் 10000 இல் 2 விமானங்களில் குண்டு உள்ள சாத்தியக்கூறும் அடுத்த 10000 இல் குண்டுகளே இல்லாத சாத்தியமும் உள்ளது. இதை தயவுசெய்து தீயன்னாவுக்கு அறியத்தரவும்.
-------------------- பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைந்தால்
சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு ! |
| shiyam |
Apr 1 2005, 02:39 PM
Post
#3
|
|
Group: Members Posts: 1,320 Joined: 1-July 04 From: france Member No.: 454 |
ஒரு படிப்பறிவற்ற பட்டிக்காட்டு கிராமத்திற்கு குடும்ப கட்டுப்பாட்டு மற்றும் எயட்ஸ் விழிப்புணர்வு அதிகாரிகள் போய் அங்குள்ள மக்களை அழைத்து அவர்களிற்கு விளக்கமளித்துவிட்டு பெட்டி பெட்டியாக பாதுகாப்பு உறைகளை கொடுத்து விட்டு ஒரு அதிகாரி ஒருபாதுகாப்பு உறையொன்றை எடுத்து அதை தனது கையின் பெரு விரலில் போட்டுகாட்டி ஆண்களே இனி நீங்கள் மனைவிமாருடன் உறவு கொள்ளும்போது இப்படி போட்டு கொண்டு உறவு கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு போய் விட்டனர்.சில வருடங்களின் பின்னர் அந்த கிராமத்திற்கு வந்த அதிகாரிகள் தாங்கள் இவ்வளவு பாதுகாப்பு உறைகள் கொடுத்தும் எந்த மாற்றமும் இல்லாததை பார்த்து ஏமாந்து போய் அங்த கிராம தலைவனை கூப்பிட்டு நாங்கள் சொன்னபடி யாரும் செய்யவில்லையா என கேட்டனர்.அதற்கு அவன் ஐயா நாங்கள் எந்த தவறும் விடவில்லை நீங்கள் காட்டியது போலவே எல்லோரும் கை பெருவிரலில் போட்டுகொண்டுதான் உறவு கொண்டோம் என்றான் அதிகாரிகள் தலையிலடித்து கொண்டனர்.(எங்கோபடித்தது)
-------------------- மன்னிப்புகேட்க தெரிந்தவன்மனிதன்; மன்னிக்;கதெரிந்தவன் மகாத்மா
|
| thamilvanan |
Apr 1 2005, 03:58 PM
Post
#4
|
|
Group: Members Posts: 98 Joined: 11-March 05 Member No.: 1,154 |
|
| Danklas |
Apr 1 2005, 04:08 PM
Post
#5
|
|
Group: Members Posts: 3,477 Joined: 1-December 04 From: சோமாலியா வயது: 40 Member No.: 848 |
ÍôÀ÷÷÷÷.... ¿ýÈ¢ ¾Á¢úÅ¡½ý..
¬É¡ø þò¾¡Ä¢ÂÅ¢¼ §¸ÅÄõ ¿õÁ¼ þÄí¨¸... :mrgreen: -------------------- ![]() ![]() ![]() |
| tamilini |
Apr 1 2005, 04:15 PM
Post
#6
|
|
Group: Members Posts: 10,535 Joined: 10-February 04 From: நிலையற்ற உலகில் நிரந்தரமற்றமுகவp Member No.: 296 |
நல்லாய் இருக்கு..
-------------------- வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும்.
வண்ணத்தமிழ் வணக்கங்களுடன் தமிழினி.......! |
| Danklas |
Apr 1 2005, 04:18 PM
Post
#7
|
|
Group: Members Posts: 3,477 Joined: 1-December 04 From: சோமாலியா வயது: 40 Member No.: 848 |
http://ihatetreehuggers.tripod.com/Binloser.htm þ¨¾ ´Õ측ø À¡Õí¸û.. ¿õÁ¼ §¾¡Šò À¢ýÄ¡¼ý.. :wink:
-------------------- ![]() ![]() ![]() |
| வியாசன் |
Apr 1 2005, 04:29 PM
Post
#8
|
![]() Group: Members Posts: 1,215 Joined: 3-January 05 Member No.: 943 |
இரண்டும் நன்றாக இருக்கிறது நன்றிகள்.
அங்கிள் கூட இருந்தே பின்லாடனுக்கு குழிபறிக்கிறீர்கள் -------------------- [img][/img] |
| tamilini |
Apr 1 2005, 06:00 PM
Post
#9
|
|
Group: Members Posts: 10,535 Joined: 10-February 04 From: நிலையற்ற உலகில் நிரந்தரமற்றமுகவp Member No.: 296 |
பாவம் பின்லேடன். விழுந்தாப்பிறகு தான் ஓ ஓ என்றார். அனுபவம் காணாது. :wink:
-------------------- வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும்.
வண்ணத்தமிழ் வணக்கங்களுடன் தமிழினி.......! |
| kavithan |
Apr 5 2005, 05:01 AM
Post
#10
|
|
Group: Members Posts: 6,145 Joined: 8-June 04 From: கனடா Member No.: 414 |
நன்றி எல்லாம் நன்றாக இருகின்றது
-------------------- [b][size=18]கவிதன்
|
| thamilvanan |
Apr 6 2005, 06:48 PM
Post
#11
|
|
Group: Members Posts: 98 Joined: 11-March 05 Member No.: 1,154 |
ஒரு கடையில் அதிமுக்கியமான வியாபாரம் நடந்துகொண்டிருந்தது. என்னவென்று யோசிக்கறீங்களா? அதுதான் மூளை வியாபாரம். அங்கு டொக்ரர், இஞ்சினியர் தொடக்கம் சாதாரண எங்களைப்போன்றவர்களின் மூளைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு ரகத்தினரின் மூளைகளும் வெவ்வேறு விலைகளை கொண்டிருந்தன. அது எதிர்பார்க்க கூடியதுதானே.
டொக்ரரின் மூளை ஒரு கிலோ - 7000 டொலர்கள், இஞ்சினியரின் மூளை ஒரு கிலோ - 7500 டொலர், வங்கி மனேஜரின் மூளை ஒரு கிலோ - 6000 டொலர் என இப்படியே பட்டியல் நீண்டுகொண்டு சென்றது. ஆனால் பெரியளவில் வித்தியாசம் இல்லை. ஒன்றின் விலை மட்டும் கோபுரமாய். அரசியல்வாதியின் மூளையின் விலைதான் அது. அரசியல்வாதியின் மூளையின் விலை - 15000 டொலர்கள் என்றது. ஏன் இப்படி? எல்லோரும் அறிந்துகொள்ள ஆவலில் வியாபாரியை கேட்டனர். " சாதாரணமாக, மற்றவங்கட மூளையை எடுக்கிறது போல, அரசியல்வாதியின் மூளை ஒரு கிலோ எடுக்கிறதுன்னா இலேசான காரியம் இல்லீங்க. இரண்டு மூண்டு மடங்கு கூட தலைவெட்ட வேண்டி இருக்கு." என்றார். |
| sinnappu |
Apr 6 2005, 09:16 PM
Post
#12
|
|
Group: Members Posts: 3,483 Joined: 20-November 04 From: ஆனைக்கோட்டை க.கொ Member No.: 800 |
¬ðÎ Ó¨Ç À¢È£ ¿õÁ¼ Ìò¾¢Âýà Áñ¨¼ì¨¸ þÕìÌ ¬¨Çô§À¡ð¼¡ø ±Îì¸Ä¡õ :wink: :wink: :wink: :wink: :wink: :wink:
-------------------- [b]கள்ளடிப்போர் வாழ்வார்
|
| kavithan |
Apr 7 2005, 12:03 AM
Post
#13
|
|
Group: Members Posts: 6,145 Joined: 8-June 04 From: கனடா Member No.: 414 |
அப்ப டண்ணின்ரை மூளை விலை என்கிறியள்
-------------------- [b][size=18]கவிதன்
|
| Danklas |
Apr 7 2005, 01:30 AM
Post
#14
|
|
Group: Members Posts: 3,477 Joined: 1-December 04 From: சோமாலியா வயது: 40 Member No.: 848 |
[quote=sinnappu]¬ðÎ Ó¨Ç À¢È£ ¿õÁ¼ Ìò¾¢Âýà Áñ¨¼ì¨¸ þÕìÌ ¬¨Çô§À¡ð¼¡ø ±Îì¸Ä¡õ :wink: :wink: :wink: :wink: :wink: :wink:[/quote]
«Ð ²ý ¬òà ÍÅ¢…¢Ä þÕì¸¢È ¾Á¢ú ¬ð¸û ±ø§Ä¡Õ§Á ±¨¾ ¯¾¡Ã½òÐìÌ ±Îò¾¡Öõ "¬Î" ±ñ¼ Å¡÷ò¨¾ æÍ ÀñÏáí¸û?? :evil: :oops: «¨¾Å¢¼ ÍÅ¢…¤ìÌ ´ÕÓ¨È ¸ðº¢ ºõÀó¾Á¡¸ §À¡¸§ÅñÊ þÕó¾Ð «ô§À¡Ð ´Õ ¸¡ðº¢¨Â ¸ñ§¼ý.. Å£¾¢Â¢ø 2,3 ¾Á¢ú ¬ì¸û ¦ºýÚ¦¸¡ñÎ þÕó¾¡÷¸û «ô§À¡Ð ±¾¢§Ã Åó¾ 4,5 ÍŢР¦ÀÊÂû «Å÷¸¨Ç ÌÈŠÀñ½¢Å¢ðÎ ´Õ º×ñ¨¼ ÌÎò¾¡÷¸û «¾ÅÐ "§Á §Á ±ñÎ" ¬Î ¸ò¾¢ÈÁ¡¾¢Ã¢,, ¸Ä¸ÄôÀ¡¸ ¾Á¢Æ¢ø ¸¨¾òÐ즸¡ñÎÅó¾ «ó¾ ¾Á¢ú ¬ì¸û «ó¾ Å¡÷ò¨¾¨Â §¸ð¼×¼ý ¸ôº¢ô.. :roll: :? -------------------- ![]() ![]() ![]() |
| sompery |
Apr 7 2005, 02:29 PM
Post
#15
|
|
Group: Members Posts: 61 Joined: 28-February 05 Member No.: 1,131 |
இறைச்சி வகைகளை விற்கும் கடைப்பகுதிக்கு ஒருவர் சென்றார் ஒரு கடையின் வாசலில் அங்கே விற்கப்படும் இறைச்சி வகைகளின் விலைப்பட்டியல் போடப்பட்டிருந்தது அதனை வாசித்து பார்த்தார் அதில் ஒரு கிலோ ஆட்டு மூளை 100 ருபா . 1கிலோ மாட்டு மூளை 80 ரூபா 1 கிலோ மனித மூளை 1000 ருபா என எழுதப்பட்டிருந்தது
சென்றவருக்கு அந்த விலைப்பட்டியலை பார்த்து ஆச்சரியம் அருகே இருந்த கடைக்காரரிடம் இது பற்றி விசாரித்தார் ஐயா உங்களஇ விலைப்பட்டியலில் ஆட்டு மூளை 100 ரூபா மாட்டு மூளை 80ரூபா என்று போட்டிருக்கின்றீர்களே மனித மூளைக்கு மட்டும் 1000 ரூபா போட்டு வைத்திருக்கின்றீர்களே ..ஏனஇ மனித மூளைக்கு மட்டும் இவ்வளவு விலை என கேட்டார் அதற்கு கடைக்காரர் சொன்னார் ஐயா ஒரு ஆட்டினஇ தலையை வெட்டினால் 500 கிராம் மூளையை எடுக்கலாம் ஒரு மாட்டின் தலையை வெட்டினால் 1 கிலோ மூளை எடுக்கலாம் ஆனால் 500 மனிதர்களின் தலையை வைட்டினால் தான் 1கிலோ மூளையை எடுக்க முடியும்.அதனால் தான் இந்த விலை என்றார் கடைக்காரர் -------------------- நீ வெறும் வீணைதான் நான் விரும்புவது உனக்குள் ஒளிந்திருக்கும் ராகங்களை.
|
| vasisutha |
Apr 9 2005, 02:45 AM
Post
#16
|
![]() Group: Members Posts: 3,707 Joined: 21-April 03 From: UK Member No.: 14 |
தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக நேரடி ஒளிபரப்பு... 'கப்ஸா உங்கள் சாய்ஸ்'!
இதோ நிகழ்ச்சி ஆரம்பம்...
கலைஞர்: ''ஹலோ! ஹாய்... வணக்கம்... வெல்கம்! உடன்பிறப்பே உனக்கு என் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! 'கண்ணம்மா' பார்த்து ரசித்திருப்பாய், 'மண்ணின் மைந்தன்' கண்டு மலைத்திருப்பாய். உன்னை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடிக்க இதோ இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்தவும் வந்துவிட்டேன். நானும் சகோதரி ஜெயலலிதாவும் சேர்ந்து தேனினும் இனிய பாடல்களை உன் காதுகளில் ஊற்றப்போகிறோம். தமிழினமே தயாரா?'' ஜெயலலிதா (குறுக்கிட்டு): ''நமஸ்தே ஃப்ரம் இட்ஸ் மீ ஜெயலலிதா! எங்களுக்கு ஓட்டுப் போட்ட உங்களுக்கு பாட்டுப் போடுறோம்... ஓகே, நிகழ்ச்சிக்குப் போலாமா? முதல் 'காலர்' யாருனு பார்க்கலாம். ஹலோ டூப் டி.வி... கப்ஸா உங்கள் சாய்ஸ். யார் பேசறீங்க?'' எதிர்முனை: ''சம்போ... சிவசம்போ. நான் ரஜினி பேசறேன்ங்க. அஷ்ட லட்சுமியும் உங்ககிட்டே இருக்கு. அதனால நீங்க தைரிய லட்சுமி. கலைக் குடும்பத்துக்கு இஷ்ட லட்சுமி. ஐ மீன் மதர்!'' கலைஞர் (கடுப்பாகி): ''என்ன ரஜினி தம்பி. பக்கத்தில் நானும் இருக்கேன். என்னை ஞாபகமிருக்கா?'' ரஜினி (ஜெர்க்காகி): ''அய்யா, நீங்க பெரியவங்க. நாங்க சின்னவங்க. உங்க ஆசி வேணும். அப்டி இப்டினு கைடு பண்ணணும். சந்திரமுகி பாருங்கய்யா, உஷ்ஷ்... சிவ சிவா!'' ஜெயலலிதா: ''ஓகே ரஜினி! உங்க கிட்டே ஒரு கேள்வி. நதி நீர் இணைப்புன்னா என்னனு ஞாபகம் இருக்கா?'' ரஜினி (பதற்றமாகி): ''வாட்டர் பிராப்ளம்... வாட் பிராப்ளம்..? சந்திரமுகி ரிலீஸ் சம்போ சிவசம்போ! எனக்கு என் மருமகன் தனுஷ் நடிச்ச 'தேவதையைக் கண்டேன்' படத்திலே இருந்து ஒரு பாட்டு போடுங்க! இந்தப்பாட்டை தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா அரசியல் தலைவருங்களுக்கும் டெடிகேட் பண்றேன்!'' ஜெயலலிதா: ''ஓ '' என்றதும் உங்க அப்பாவைப் பார்த்தாலும் பயம் பாட்டு அதே டியூனில் வரிகள் மட்டும் மாறி வருகிறது 'போயஸ் அம்மாவைப் பார்த்தாலும் பயம் கலைஞர் அய்யாவைப் பார்த்தாலும் பயம் ராமதாஸ் அண்ணனைப் பார்த்தாலும் பயம் எனக்கு நல்லா ஓடுமா புதுப் படம்?' கலைஞர்: ''சூப்பர் தம்பிக்காகப் போட்ட அந்த சூப்பர் பாடலை எல்லோரும்கேட்டீங்க...'' என்று சொல்லும்போதே, அடுத்த அழைப்பாளர்... கலைஞர்: ''வணக்கம். யார் பேசுவது..?'' எதிர்முனை: ''நான் ஜெயலட்சுமி பேசறேன். அன்னிக்கு வீட்ல நான் டி.வி. பார்த்துட்டிருந்தேனா... இளங்கோவன் போன் பண்ணி மெரட்டுனாரு. அதுக்கடுத்தது ஏட்டு கண்ணன் போன் பண்ணி வீட்டுக்கு வரவாÕனு கேட்டாரு. வேண்டாம்னு சொல்லி வெச்சதும் மலைச்சாமிகிட்டே இருந்து போனு. அந்த நேரம் பார்த்து, வக்கீல் அழகர்சாமி உள்ளே நுழைஞ்சான். ஆங்... இங்கே தொடரும்...'' கலைஞர்: ''ஐயகோ... போதும் ஜெயலட்சுமி, போதும். உங்களுக்காக காற்றிலே வருகிறது 'காதல்'படத்தில் இருந்து ஒரு பாடல்.இதை கல்லீரல் கெட்டுப்போன காவல் துறைக்கு டெடிகேட் செய்கிறோம்'' என்றதும் பாடல் ஒலிக்கிறது. 'தொட்டுத் தொட்டு என்னை எம்.எல்.எம். களிமண்ணை சி.பி.ஐ\யில் யார் சேர்த்ததோ? தொட்டுத் தொட்டு என்னை பப்ளிமாஸ் பெண்ணை பாப்புலராய் யார் செய்ததோ?' ஜெயலலிதா: ''ஜெயலட்சுமிக்காக ஒரு கருத்துள்ள பாட்டைக் கேட்டோம். அடுத்ததா லைன்ல யார்னு பார்ப்போம்'' சொல்லும் போதே போன் அழைக்கிறது. எடுத்தால், எதிர்முனை: ''மதுரையிலிருந்து விஜயகாந்த். கூடிய சீக்கிரமே கோட்டையிலிருந்து விஜயகாந்த்'' என்ற குரல் கேட்கிறது. ஜெ (மெதுவாக): ''வி.சி.டி\யை தடை பண்ணினப்பவே இந்த விஜயகாந்த்தையும் தடை பண்ணி இருக்கணும். (சத்தமாக) ஹலோ விஜயகாந்த்... வெல்கம் டு அரசியல். கூடிய சீக்கிரமே நீங்க 'பெரிய இடத்துக்குப்' போகணும். அதுக்கு என்னால முடிஞ்ச உதவியைக் கண்டிப்பாசெய்வேன்.'' விஜயகாந்த்: ''தமிளன்னு சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடானு நான் சொன்னா நெட்டுக்குத்தா நிக்கறதுக்கு என் ரசிகருங்க 27 லட்சம் பேர் இருக்காங்க. அதுல ஆம்பளைங்க 15 லட்சத்து 19 ஆயிரம், பொம்பளைங்க 9 லட்சத்து 8 ஆயிரம் பேருங்க, குழந்தைங்க...'' ஜெ: ''ஹலோ மிஸ்டர் இன்டர்நெட்ல ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைக்கிறதுக்கு பொதுத் தேர்தல் ஒண்ணும் மீனாட்சி அம்மன் கோயில் இல்லை. ஓகே, ஓகே... உங்களுக்காக 'ஆட்டோகிராஃப்' படத்திலயிருந்து ஒரு பாட்டு வருது. இந்தப் பாட்டை உங்க டெபாஸிட்டுக்கு டெடிகேட் பண்றோம்'' என்றதும் பாடல் வருகிறது, 'மனசுக்குள்ளே அரசியல் ஆசை வந்துச்சோ வந்துச்சோ... மதுரையிலே மாநாடு நடத்தச் சொல்லுச்சோ சொல்லுச்சோ கரை வேட்டி கட்ட ஆசை வந்துச்சோ வந்துச்சோ கட்சி ஆரம்பிக்க பட்சி சொல்லுச்சோ சொல்லுச்சோ அட போலீஸ் வேஷம் போரடிச்சி சி.எம். வேஷம் கட்டச் சொல்லி செவந்த கண்ணில் கனவு வந்துச்சோ'' பாடல் முடியும்போதே, அடுத்த அழைப்பாளர் லைனில்! ஜெ: ''ஹலோ திஸ் இஸ் டூப் டி.வி... கப்ஸா யுவர் சாய்ஸ்...'' ''அம்முனையில் அன்பு அண்ணன் கலைஞர். இம்முனையில் தங்கத் தம்பி தைலாபுரம் தம்பி ராமதாஸ்'' என்கிறது எதிர்முனை. கலைஞர்: ''தம்பீ... என் அன்புத் தும்பீ. மொழிப் போருக்கு வாளோடு புறப்பட்டுவிட்டாய். இதோ உங்களுக்காக 'அட்டகாசம்' படத்திலிருந்து அட்டகாசமான பாடல் வருகிறது. இதை உங்கள் சார்பாக கமலுக்கும் ரஜினிக்கும் டெடிகேட் பண்ணுகிறோம்.'' ''உனக்கென்ன உனக்கென்ன நான் பேர் மாத்தச் சொன்னால் உனக்கென்ன நான் படப்பொட்டி தூக்கினால் உனக்கென்ன தம்பி திருமாவோடு சேர்ந்தால் உனக்கென்ன அன்புமணியை மந்திரி ஆக்கினால் உனக்கென்ன உனக்கென்ன உனக்கென்ன'' ஜெ: ''ஆமா உனக்கென்ன...உனக்கென்ன? என்னைப் பார்த்து அமைச்சர்கள் ஆடினா உனக்கென்ன? நான் காம்பியர் ஆனா உனக்கென்னன்னுட்டு? ஓகே இப்ப நெக்ஸ்ட் காலர் யாருனு பார்க்கலாம்...'' போன் சிணுங்க... எடுத்தால் ஒரு சோகமான குரல், ''யம்மா யம்மா... நான்தாம்மா சுதாகரன் பேசறேன்'' என்கிறது. ஜெ: ''சுதாகரனா... யாரு, கிழக்கே போகும் ரயில் படத்தில் 'மாஞ்சோலைக் கிளிதானோ''னு பாடுவாரே அந்த சுதாகரனா?'' எதிர்முனை (அலறி): ''அய்யய்யோ! யம்மா, நான் மாஜி வளர்ப்பு மகன் சுதாகரன். கோர்ட்டு கேஸ§னுஅலைஞ்சி கால் பழுத்துருச்சும்மா... ம்ம்ம்...'' என அழ ஆரம்பிக்கிறார். கலைஞர்: ''கலங்காதே தம்பீ! உனக்காக ஒரு சொத்துப் பாட்டு ச்சீ குத்துப் பாட்டு. இது திருப்பாச்சி ஸ்பெஷல்!'' என்றதும் பாடல் ஆரம்பிக் கிறது. 'வெள்ளசொள்ள கோட்டு போட்டு நக நட்டு மாட்டிக்கிட்டு குவி சொத்தைய்யா ஸ்டேட்டுவிட்டு ஸ்டேட்டுவிட்டு கோர்ட்டுவிட்டு கோர்ட்டுவிட்டு அலை முத்தைய்யா வாடா... வாடா... வாடா... வாடா... வளர்த்த கடாவே.... போடா... போடா.... போடா.... போடா... திரும்ப வராதே...' கலைஞர்: ''அடடா! தமிழர் புத்தாண்டும் அதுவுமாக மிகவும் பரபரப்பான பாட்டு நிகழ்ச்சியை உங்களுக்காக வழங்கிக்கொண்டு இருப்பவர்கள்...'' ஜெ: ''அண்ணன் கலைஞர்...'' கலைஞர்: ''தங்கச்சி ஜெயலலிதா... இதோ அடுத்த அழைப்பாளர்...'' ''யாரடா பேசுவது தம்பி'' எதிர்முனை: ''பேசறது விஜய டி.ஆரு, அதை கேட்க நீ யாரு? ஸ்டாலினுக்குதான் அங்கே பவரு, மத்தவங்க எல்லாம் நகரு, டெலிபோன்ல போடு சாங்கு, சிம்புவுக்கு சேருது சூப்பர் கேங்கு, ஏய்... ஊய்...'' அதைக் கேட்டு போனை சைலண்டாக ஜெ கையில் கொடுக்கிறார் கலைஞர். ஜெ: ''உங்ககிட்டே ஒரு கொஸ்டின். சமீபத்துல கட்சி ஆரம்பிக்கிறேன்னு சொன்ன நடிகரு யாரு?'' விஜய.டி.ஆர்: ''சொல்றேம்மா... வெவரமா சொல்றேன். அவரு சங்கத்துக்குதான் கேப்டன். நான் சங்கத்தமிழுக்கே டாப் டென். அரசியல் இல்லை வெங்காய பஜ்ஜி, எல்லாரும் ஆரம்பிக்க முடியாது புதுக் கட்சி...'' ஜெ: ''ஓகே... ஓகே... உங்களுக்காக ஒரு சூப்பரான பாட்டு.'' 'நடிச்சி நடிச்சி வந்தான் வீராசாமிடோய் அடிச்சி அடிச்சி வந்தான் அடுக்கு மொழிடோய் சிம்புவுக்கே டஃப் ஃபைட்டைக் குடுத்துப்புட்டாண்டோய் அரசியல்ல அடுத்து என்ன முழிச்சிப்புட்டாண்டோய்' கலைஞர்: ''இந்த இனிய தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சியிலே உங்களையெல்லாம் சந்தித்து சிந்தித்து பல பாடல்களைப் போட்டதிலே... அப்போது திரும்பவும் போன் அடிக்க எடுத்தால் மீண்டும் விஜய டி.ஆர், ''அருவாள புடிக்கணும் சாணை, பாதியிலேயே கட் பண்ணிட்டீங்க போனை, இது திட்டமிட்ட சதி, விளையாடுது விதி, கலைஞரு அய்யா, ஜெயா அம்மா, விடமாட்டேன் சும்மா...'' விஜய டி.ஆர் ஆக்ரோஷமாகப் பேசும்போதே நிகழ்ச்சி நிறைவுபெறுகிறது. நன்றி விகடன். -------------------- Vasi ![]() |
| Mathan |
Apr 9 2005, 02:58 AM
Post
#17
|
![]() Group: Members Posts: 8,739 Joined: 29-January 04 From: லண்டன் Member No.: 279 |
[quote]'போயஸ் அம்மாவைப் பார்த்தாலும் பயம்
கலைஞர் அய்யாவைப் பார்த்தாலும் பயம் ராமதாஸ் அண்ணனைப் பார்த்தாலும் பயம் எனக்கு நல்லா ஓடுமா புதுப் படம்?' [/quote] ரஜனியின் உண்மையான மனநிலையை இந்த பாடல் சொல்கின்றது -------------------- Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
|
| tamilini |
Apr 9 2005, 11:03 AM
Post
#18
|
|
Group: Members Posts: 10,535 Joined: 10-February 04 From: நிலையற்ற உலகில் நிரந்தரமற்றமுகவp Member No.: 296 |
எப்படி இருந்தவங்களை இப்படி ஆக்கிட்டாங்க.. :wink:
-------------------- வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும்.
வண்ணத்தமிழ் வணக்கங்களுடன் தமிழினி.......! |
| tamilini |
Apr 9 2005, 11:06 AM
Post
#19
|
|
Group: Members Posts: 10,535 Joined: 10-February 04 From: நிலையற்ற உலகில் நிரந்தரமற்றமுகவp Member No.: 296 |
எப்படி இருந்தவங்களை இப்படி ஆக்கிட்டாங்க.. :wink:
-------------------- வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும்.
வண்ணத்தமிழ் வணக்கங்களுடன் தமிழினி.......! |
| KULAKADDAN |
Apr 9 2005, 11:14 AM
Post
#20
|
|
Group: Members Posts: 3,340 Joined: 30-November 04 Member No.: 845 |
என்னத்த சொல்ல
-------------------- ![]() |
![]() ![]() |
| Lo-Fi Version | Time is now: 19th June 2013 - 03:22 AM |