பரந்தன் முல்லைத்தீவு வீதி நீளம் இடம்பெயர்ந்து ஓடுபவர்களால் நிறைந்து இருந்தது. கண் கூசியபடி எழும் சூரியக் கதிர்கள் அன்றைய தினத்தை மழையின்றிய தினமாகப் பிரகடனம் செய்தது.
தலைக் கேசத்தை ஒரு கையால் கோதியவாறு, கழுத்திலே தொங்கவிடப்பட்டிருந்த கைக் கட்டின் வேதனையை மறந்து அழுத முகத்துடன் தாயின் வரவுக்காக ஏங்கிக் காத்திருந்தாள் வசந்தியின் மகள்.வசதி வாய்ப்பான குடும்பத்தைச் சேர்ந்தவள் தான் வசந்தி, கம்பீரமான அழகான கணனையும் ஆசைக்கு ஒரு மகனையும் ஒரு மகளையும் கொண்ட இனிமையான குடும்பம், சொற்ப காலத்திற்குள் அழகான நவீன வீட்டை நிர்மாணித்து வசந்தியின் மீதுள்ள காதலினால் அவ் வீட்டுக்கு "வசந்த மாளிகை" என நாமமும் சூட்டினான் வசந்தியின் கணவன் வரதன்.பாடசாலையில் ஒன்றாகப் படித்த காலத்தில் இருந்து இருவருக்கும் ஏற்பட்ட நட்பு இறுதியில் காதலாகி களியாணத்தில் முடிந்தது, உற்றார் உறவினர்கள், நண்பர்கள், ஊரவர்கள், தெரிந்தவர்கள் எல்லோரும் அழைக்கப்பட்டு சிறந்த பாதிரியார்களின் அசீர்வாதத்துடன் பிரமாண்டமாக நடைபெற்றது தான் வரதன் வசந்தி திருமணம். திருமணத்துக்கு வருபவர்களை மகிழ்ச்சிபடுத்துவதற்காக இன்னிசைக் கச்சேரியும் உண்ணுவதற்கு சுவையான சிறந்த சிற்றுண்டி மற்றும் உணவுகளெல்லாம் நினைக்கும் போது இப்போதும் நாவூறுகிறது.
என் அம்மா சொல்வதையெல்லாம் நான் செய்யாவிட்டாலும் என் பெரியம்மா சொல்வதை நான் ஒருபோதும் செய்யமால் விட்டது கிடையாது. பெரியம்மாதான் எனது பாட்டனார் குடும்பத்தில் மூத்தவர். பெரியம்மாவிற்குப் பின்னர் மாமாக்கள் மூவர் பிறந்த போதும் பாட்டனாருக்குப் பிறகு பெரியம்மாதான் குடும்பத்திலே ஒரு தலைவன் மாதிரி செயல்பட்டார்.
பெரியம்மா வீடும் எங்கள் வீடும் அடுத்தடுத்த காணிகளுக்குள் அமைந்திருந்தபோதிலும் எனக்கென்னவோ பெரியம்மா வீடுதான் எங்கள் வீடுபோல் இருந்தது. என் அம்மா சிறிது முன்கோபக்காரி. வந்தோரை வரவேற்று உபசரிப்பதிலும், அவர்கள் முகம் கோணாமல் நடப்பதிலும் பாட்டனாரைப்போல் என் அம்மாவை விட பெரியம்மாதான் கெட்டிக்காரி.
அமுதா தனது மகள் வேணியைத் தொலைபேசியில் அழைத்தபோது நெடுநேரமாகியும் அழைப்பிற்கு வராதது என்னவோ போலிருந்தது. ஒருநாளும் இப்படி தாமதமாகி வந்து தொலைபேசியை எடுத்ததில்லை. வேணி அன்று வேலைக்குப் போகாமல் தனது வீட்டிலேதான் இருக்கின்றாள் என்பது அவளது தாய் அமுதாவிற்குத் தெரியும். அதனால்தான் அவளுக்கு மனம் பதைபதைத்தது. இடையிடையே விட்டு விட்டு மூன்று தடவைகள் அழைத்த பின்னர்தான் வேணி வந்து தொலைபேசியை எடுத்தாள்.
தமாரா விழித்துக் கொண்ட போது அவளோடு சேர்ந்து சோகமும் விழித்துக் கொண்டது. அவளால் தன்னுள்ளே படிந்து விட்ட சோகத்தின் சுமையை எந்த வழியிலும் இறக்க முடியாதிருந்தது. மனசு மிகவும் பாராமாக இருந்தது. பக்கத்துப் படுக்கையைப் பார்த்தாள். அது வெறுமையாகவே இருந்தது. இன்றோடு மூன்று மாதம். காந்தன் அவளை விட்டுச் சென்று மூன்று மாதங்கள் சென்று விட்டன. அவளால் எதையுமே ஜீரணிக்க முடியவில்லை.
காலைப்பொழுதுக்கே உரிய அவசரத்துடன் ஜேர்மனியின் கிராமங்களில் ஒன்றான அச் சிறு கிராமத்து வீதி இயங்கிக் கொண்டிருந்தது. கோடை என்றாலும் குளிர்ச்சியான காலை. பச்சையாய், பசுமையாய் மரங்களும், பூக்களுமாய் ஜேர்மனி அழகாகத்தான் இருந்தது. சிக்னலுக்காக காரில் காத்துக் கொண்டிருந்த உமாவின் மனது மட்டும் அந்தக் காலைக்குச் சிறிதும் பொருந்தாது புழுங்கிக் கொண்டிருந்தது. கோபத்தில் தகித்தது என்று கூடச் சொல்லலாம்.
அதிகாலை நான்கு மணியாகிவிட்டது. எழும்ப மனம் இல்லாமல் படுத்துக்கொண்டே இருந்தாள் சந்தியா. உடம்பு முழுவதும் ஒரே அசதியாய் இருந்தது அவளுக்கு. படுத்தபடியே ஒவ்வொன்றாக நினைத்துப்பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஊரின் நினைப்புக்கள் அவள் கண்முன்னே நிழற்படங்களாக விரிந்து கொண்டிருந்தது. அவள் ஓடியாடி விளையாடி மகிழ்ந்த ஊர் இப்படி நிலைகுலைந்து போய் இருந்ததை தொலைக்காட்சியில் கண்டபோது துடித்துப்போனாள். அந்த மண்ணை அள்ளி தன் கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டும் போன்றதோர் துடிப்பு அவளுள் எற்படுத்தியிருந்தது.
நடுரோட்டில் நின்றவள் என்னைக் கண்டதும் ஓடி வந்து கையைப் பிடித்தாள். தனது கணவனை ஜெயிலில் இருந்து விடுவித்துத் தரும்படி மன்றாடினாள். அவள் யாரென்பதையே அவளைக் கேட்டுத்தான் தெரிந்து கொண்டேன். அடையாளமே தெரியாமல் உரு மாறிப் போயிருந்தாள். உதடுகள் வெடித்துக் காய்ந்து கருமை பேர்ந்திருந்தன. கண்கள் சோபை இழந்து சோகத்துக்குச் சொந்தமாகியிருந்தன. கன்னங்கள் ஒட்டி உலர்ந்திருந்தன. பன்னிரண்டு வருடங்களின் முன் நான் சந்தித்த மதுதான் இவளென்பதை என்னால் நம்ப முடியாமல் இருந்தது.
காந்தனின் தீடிர் மறைவு வீட்டிலுள்ள அனைவரையும் ஓருகணம் கலங்க வைத்தக்கொண்டிருந்தது. வீடே மயான அமைதியாகயிருந்தது. அவரது வீட்டிற்கு முன்பின் பார்த்திராத பலர் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களின் ஆறுதல் வார்த்தைகள் மனதுக்கு இதமாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனநிலையில் காந்தனின் மனைவி கோகிலா இருக்கவில்லை. காந்தன் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி அடுக்கடுக்காக மொழிந்து கொண்டிருந்தார்கள். வாழ்கின்றபோது எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்கின்ற உலகம்... இறந்த பிறகு அவை பெரும்பாலும் நல்லவையாகவே இருக்கும் இது கண்கூடாக கண்டு கொண்டிருக்கும் நிஜங்கள்.
கல்லூரி முடிந்து நான் தங்கியிருக்கும் என் அறைக்குள் நுழைந்த போது என் மேசையில் ஒரு துண்டு காகிதம் என் கண்ணில் படும் படியாக வைக்கப்பட்டிருந்தது.
எப்போதும் நான் கல்லூரி முடிந்து வரும் போது சென்னையில் நான் தங்கியிருந்த வீட்டு வராந்தாவில் யாராவது இருப்பது சாதாரணமான ஒரு நிகழ்வாக இருக்கும்.
ஆனால் கடந்த காலங்கள் போல யாரும் இப்போது என் கண்ணில் தெரிய இருப்பதில்லை.
இவையெல்லாம் எனக்கு ஓர் அபூர்வ நிகழ்வாகவே பட்டது.
Recent comments
2 years 4 weeks ago
2 years 4 weeks ago
2 years 12 weeks ago
2 years 14 weeks ago
2 years 34 weeks ago
3 years 11 weeks ago
3 years 41 weeks ago
4 years 1 week ago
4 years 1 week ago
4 years 1 week ago