வரலாற்றோடு வாழ்ந்தவன்
Submitted by admin on Tue, 27/05/2008 - 20:51.
ஈழத்தமிழரின் வரலாற்றை எழுதிய
வன்னிச் சிங்கம் ஒன்று கண்ணை மூடிக் கொண்டது
முடியாது என்ற சொல்லுக்கு முற்றுப் புள்ளி வைத்தவனே
சொல்லுக்கும் செயலுக்கும்
வடிவம் எழுதிய வரலாற்று வீரனே
என்னத்தை நான் எழுத
அடங்காத புலி உனக்கு
தமிழன் பெருங் காடே கவி எழுதும்
தமிழ் ஈழப் பெரும் கனவை
உன் மூச்சுக்குள்ளே சுமந்தபடி
முடிவைத் தேடி திரிந்தவன் நீ
எதிரி அவன் வீயுகத்தையே
தைரியமாய் உடைத்தவன் நீ
பத்தி வந்த பகை நெருப்பை
ஒத்தக்காலாலே சத்தமின்றி நூத்தவன் நீ
போரியலின் தத்துவத்தை
புரிய வைத்த புரட்சி வீரா
உன்னையா இழந்தோம்
எம் மண்ணையல்லவா இழந்தோம்
பாண்டவரின் களத்தினிலே
நீண்ட பகை முடித்தவனே
அருச்சுனனின் சேனையிலே
அபிமன்யுவா போய்விட்டான்
ஆ புத்திரனே
தர்மத்தின் விரோதிகளை
எங்கள் மண்ணுக்குள்ளே புதைத்தவனே
உன்னையா இழந்தோம்
உன் பாதம் பட்ட பாதையெல்லாம்
வீரத்தின் விளைச்சல் கண்டோம்
எங்கள் மண் எழுதும் வரலாற்றில்
நெப்போலியன் நீ என்று
எப்போதும் நினைவு கொள்வோம்
மண்ணிற்குள் புதைக்காதீர்
இந்த மாமனிதனின் வித்துடலை
எங்கள் மனங்களிலே விதைத்துவிட்டோம்
இந்த மாவீரன் சரித்திரத்தை.
நோர்வேயிலிருந்து பா. உதயகுமார்
Recent comments
39 weeks 6 days ago
40 weeks 3 days ago
48 weeks 3 days ago
49 weeks 6 days ago
1 year 18 weeks ago
1 year 47 weeks ago
2 years 24 weeks ago
2 years 37 weeks ago
2 years 37 weeks ago
2 years 37 weeks ago