Reply to comment

பாலாஞ்சலி

aaa1.jpg

மேலை அணைகளிலே கிழிந்து
வரண்ட காவேரியாய்  
ஈழத் தமிழர் மனம் அழிய
பாலா அண்ணா உன்னை
இயமன் சிறைப் பிடித்தானே

பகைவர் நடுவினிலே
எங்கள் பயணம் முடியவில்லை
காட்டு வழி முன்னே
இருள் பாம்பாய் நெளிகிறதே
அணைந்தது கைவிளக்கு
இனி நாம் ற்றுப் படுவதெங்கே.

ஒரேஒரு நெல்லோடும் கனவோடும்
விடுதலைப் பயிர் வளர்த்தாய் இன்று
மரகத வயலாகி உலகெல்லாம்
பொற்க்கதிர் சரிய வைத்தாய்
போய்வா எம் மண்ணின்
சமாதானப் பூங் குயிலே
நாம் உன் முட்டைகளை அடைகாப்போம்

தலைமுறைகள் கடந்து செல்கிறது
எங்கள் காலம்
வழி நெடுக மூத்த தியாகிகளின் சமாதிகளை
அடையாளம் வைத்தபடி.
காலக் குடுவை மணல்
உதிர முன்னே விண்ணில்
ஈழ மணிக்கொடி உயரும் அண்ணே

- வ.ஐ.ச.ஜெயபாலன்

Reply

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.