Aggregator
வேற்றுக்கிரகத்துக்கு செல்ல உயிரை மாய்த்துக்கொண்ட மூவர்... - கேரளாவை உலுக்கிய பிளாக் மேஜிக் மரணம்!
வேற்றுக்கிரகத்துக்கு செல்ல உயிரை மாய்த்துக்கொண்ட மூவர்... - கேரளாவை உலுக்கிய பிளாக் மேஜிக் மரணம்!
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
சிவப்புக்கல்
IMG_5866.jpeg
IMG_6094.jpeg
IMG_6227.jpeg
IMG_6260.jpeg
IMG_6332.jpeg
IMG_6443.jpeg
ஜூலியன் அசஞ்சேயிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை கைவிட தயாராகின்றது அமெரிக்கா?
ஜூலியன் அசஞ்சேயிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை கைவிட தயாராகின்றது அமெரிக்கா?
Published By: RAJEEBAN 11 APR, 2024 | 11:37 AM
விக்கிலீக்ஸ் இணை ஸ்தாபகர் ஜூலியன் அசஞ்சேயிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை கைவிடவேண்டும் என்ற அவுஸ்திரேலியாவின் வேண்டுகோளை பரிசீலித்துவருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இரகசிய தகவல்களை அம்பலப்படுத்தியமைக்காக விக்கிலீக்ஸ் இணை ஸ்தாபகருக்கு எதிராக வழக்கு தொடர்வது குறித்து அமெரிக்கா கடந்த ஒரு தசாப்தகாலமாக தீவிரகவனம் செலுத்திவருகின்றது.
பிரிட்டனின் சிறையிலிருந்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதை எதிர்நோக்கியுள்ள அவுஸ்திரேலிய பிரஜையான ஜூலியன் அசஞ்சேயிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துவதை கைவிடவேண்டும் என அவுஸ்திரேலியாதொடர்ந்து வேண்டுகோள் விடுத்துவருகின்றது.
இந்த நிலையில் இதுகுறித்த கேள்வி;க்கு பதில் அளித்துள்ள ஜோ பைடன் அவுஸ்திரேலியாவின் வேண்டுகோளை பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
பைடன் நிர்வாகம் ஜூலியன் அசஞ்சேயை விசாரணைக்கு உட்படுத்துவதை கைவிட தயாராகின்றது என்பதற்கான அறிகுறிகள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன எனினும் இது ஜனாதிபதி தேர்தலில் பைடனிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
ஜூலியன் அசஞ்சே இரகசிய ஆவணங்களை தவறாக கையாண்டதை ஏற்றுக்கொண்டால் அவர் முன்கூட்டியே விடுதலை செய்யப்படலாம் என வோல்ஸ்ரீட் ஜேர்னல் சில நாட்களிற்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தது.
ஜூலியன் அசஞ்சே பிரிட்டன் சிறையில் அடைக்கப்பட்டு ஐந்து வருடங்களாகின்றமை குறிப்பிடத்தக்கது.
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
தமிழ் மக்களிற்கான உங்கள் தீர்வுகள் என்ன? - ஜனாதிபதி வேட்பாளர்களிற்கு விக்னேஸ்வரன் வேண்டுகோள்
தமிழ் மக்களிற்கான உங்கள் தீர்வுகள் என்ன? - ஜனாதிபதி வேட்பாளர்களிற்கு விக்னேஸ்வரன் வேண்டுகோள்
Published By: RAJEEBAN 11 APR, 2024 | 12:04 PM
பெரும்பான்மையினத்தை சேர்ந்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளிற்கான தங்களின் தீர்வுகளை வெளிநாட்டு இராஜதந்திரிகள் முன்னிலையில் வெளிப்படுத்தவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மை கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமிழ் மக்களின் ஆதரவை பெறவிரும்பினால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளிற்கான தங்களின் தீர்வுகளை வெளிநாட்டு இராஜதந்திரிகள் முன்னிலையில் வெளிப்படுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மையினத்தை சேர்ந்த வேட்பாளர்கள் தமிழ் மக்களின் ஆதரவை பெறவிரும்பினால் தங்களிடம் தமிழ் மக்களின் பிரச்சினைகளிற்கு உள்ள தீர்வு என்னவென்பதை தெரிவிக்கவேண்டும் என வி;க்னேஸ்வரன் மோர்னிங்கிற்கு தெரிவித்துள்ளார்.
தாங்;கள் ஆட்சிக்கு வந்ததும் தமிழ் மக்களின் பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கு என்ன செய்வார்கள் என்பதை தெரிவிக்கின்ற துணிவு எவருக்காவது இருந்தால் நாங்கள் அந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது குறித்து சிந்திப்போம் என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எனினும் அவர்கள் மேடையில் எதனையாவது தெரிவித்துவிட்டு பின்னர் அந்த வாக்குறுதியை கைவிடலாம் என்பதால் அவர்கள் தங்கள் வாக்குறுதிகளை எழுத்துமூலம் தெரிவிக்கவேண்டும் அமெரிக்க பிரிட்டன் போன்ற நாடுகளின் வெளிநாட்டு இராஜதந்திரிகள் முன்னிலையில் அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை எழுத்துமூலம்தரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர்கள் பல வாக்குறுதிகளை கடந்தகாலங்களில் வழங்கியிருந்த போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளிற்கு அவர்கள் எவரும் முற்போக்கான தீர்வை முன்வைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ள விக்னேஸ்வரன் 2000 ம் ஆண்டு அரசமைப்பு மாற்றங்கள் ஊடாக தீர்வை முன்வைப்பதற்கு அவ்வேளை ஜனாதிபதியாக பதவிவகித்த சந்திரிகா குமாரதுங்க மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டியுள்ளார்.
அவர்கள் அதனை செய்வோம் இதனை செய்வோம் என தெரிவிக்கின்றார்கள் ஆனால் இறுதியில் ஒன்றும் செய்யமாட்;டார்கள் என குறிப்பிட்டுள்ள விக்னேஸ்வரன் பெரும்பான்மையினத்தை சேர்ந்த ஒரு தலைவர் எதனையாவது வழங்க முயற்சித்தால் ஏனையவர்கள் அதற்கு எதிராக செயற்படுவார்கள் அதனை சீர் குலைப்பதற்கு அவர்கள் அனைத்தையும் செய்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் அதிகமாக எதனையும் கேட்கவில்லை தற்போதும் யாராவது அனுராதபுரத்தை கடந்து வவுனியா சென்றால் தமிழில் பேசுவார்கள் அவர்களே உண்மையான தமிழர்கள் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் நாங்கள் தமிழ்பேசும் பகுதிகளை அங்கீகரிக்குமாறே கேட்டுக்கொள்கின்றோம் இதன் மூலம் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவின் சுற்றுலாத்துறையை முன்னேற்ற விசேட நிதி - அமைச்சர் டக்ளஸ்
நெடுந்தீவின் சுற்றுலாத்துறையை முன்னேற்ற விசேட நிதி - அமைச்சர் டக்ளஸ்
நெடுந்தீவு பிரதேசத்தில் சுற்றுலாத்துறையை விருத்தி செய்தல் மற்றும் பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளன.
நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (10) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே குறித்த விடயங்கள் தொடர்பாக பேசப்பட்டன.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.
அதேபோன்று பிரதேசத்தின் முன்னேற்றத்துக்கு அத்தியாவசியமான கடல் போக்குவரத்து, வீதிப் போக்குவரத்து, விவசாயம், கடற்றொழில், கால்நடை அபிவிருத்தி, நீர்பாசனம் உட்பட பல்வேறு விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டன.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நெடுந்தீவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று நிலைமைகளையும் மக்களின் எதிர்பார்ப்புக்களையும் அறிந்துகொண்டதாகவும், ஜனாதிபதியுடன் கலந்துரையாடி நெடுந்தீவுக்கான விசேட நிதி ஒதுக்கீட்டினை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் கூறியுள்ளார்.