Aggregator

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 1 week ago
எனக்கும் புதிதாகத் தான் இருக்கிறது. தேடிப் பார்க்கிறேன். ஆனால், இந்தத் திரியில் பல தவறான தகவல்களைப் பரப்பித் தான் இந்தக் கொலைகளை மிகப் பிரயத்தனப் பட்டு நியாயப் படுத்த வேண்டியிருக்கிற நிலையை அவதானிக்கிறேன். உதாரணமாக யோகேஸ்வரன் கொலை: கொலை நடந்த காலப் பகுதியில் செய்திப் பத்திரிகை வாசித்தோருக்குபுரிந்த தகவல், யோகேஸ்வரன் தான் அமிர், சிவசிதம்பரம் ஆகியோரை புலிகளின் ஆயுதக் குழு சந்திக்க ஏற்பாடு செய்தார். வந்தவர்களை பரிசோதிக்காமல் உள்ளே விடும் படி கோரியதும் அவரே. உள்ளே வந்து பேசிக் கொண்டிருந்தவர்கள் அமிரைச் சுட்ட போது குறுக்கே சென்று தடுக்க முயன்ற யோகேஸ்வரனும் சுடப் பட்டார். ஆனால் இப்ப புதுக் கதை என்னவென்றால் யோகேஸ்வரன் "1000 பேரைக் தந்தால் ஈழம் எடுத்துத் தாறன்" என்றி விட்டு, பின்னர் அரசோடு சேர்ந்தியங்கமையால் சுடப் பட்டார். இப்படிப் பல திரித்த கதைகள், அவற்றை நம்பவும் ஆட்கள் 😂 ! நல்ல வேளையாக எங்களிடம் இப்ப ஆயுத தாரிகள் இல்லை. இருந்திருந்தால், என்னையும் உங்களையும் கூட "வேள்விக்கு" கொண்டு போக ஆட்கள் வந்திருப்பர்!

தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

1 month 1 week ago
செய்தியில் இருப்பதை வாசித்தாலே தேர்தல் கடன் பத்திர முறை 2018 இல் இருந்து தான் நடைமுறையில் இருக்கிறதென விளங்கும். மேலதிக தகவல் பி.பி.சி யில்: இது வரை 160 பில்லியன் இந்திய ரூபாய்களுக்கு கடன் பத்திரங்கள் மூலம் பரிமாற்றம் நடந்திருக்கிறது. இதில் 57% பி.ஜே.பிக்கு, வெறும் 10% தான் எதிர் கட்சியான காங்கிரசுக்கு போயிருக்கிறது. பிடிக்காத காங்கிரசையும், திமுகவையும் தாக்க வேண்டுமென்பதற்காக பிழையான தரவுகள் மூலம் மிக முயற்சி செய்து மிளகாய் அரைக்கிறார் பெருமாள்😂!

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 1 week ago
நன்றி ஜஸ்ரின். நில உச்சவரம்பு சட்டம் இன ரீதியான அடக்கு முறை சட்டம் என்று முதல் தடவையாக இந்த திரியில் கேள்விப்படுகிறேன். அது சம்பந்தமான தரவுகள் உண்டா?

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 1 week ago
@vasee இலங்கையில் இனவாத அரசுகள் தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகளை முன்னெடுத்தது அனைவரும் அறிந்த விடயமே. அதற்கு எதிராக தான் போராட்டமே ஆரம்பிக்கப்பட்டது. அதை எவரும் இங்கு மறுக்கவில்லை. அப்படி இருக்கும் போது தேவையில்லாமல் அது பற்றி பேசுவது ஏன்? ஆயுதப் போராட்டத்தை நடத்திய அனைத்து அமைப்புகளாலும் நிகழ்த்தப்பட்ட பல அரசியல் படுகொலைகள் அனைத்துலக ரீதியில் பிரச்சாரப் படுத்தப்பட்டு எவ்வாறு அது எமது போராட்டத்தின் பின்னடைவுக்கும் இறுதியில் பேரழிவுக்கும் காரணமாக அமைந்தது என்பதை பற்றியே இங்கு என்னால் உரையாடப்பட்டது. இதை வெளிப்படையாக கூறுபவர்கள் எப்படி இலங்கை அரசுக்கு உடந்தையாக இருப்பார்கள்? சும்மா வேண்டுமென்றே அடுத்தவர் மீது எழுந்த மானமாக பழி போடுவது தர்ககரீதியான விவாதமாக அமையாது என்பது உங்களுக்கு தெரியாதா? வேண்டுமென்றே இந்த விடயத்தை திசை திருப்புவதற்காக நில உச்சவரம்பு சட்டத்தை கூட துணைக்கு அழைத்திருக்கின்றீர்கள். நில உச்ச வரம்பு சட்டம் இன அடிப்படையில் அமைந்ததாக புதிதாக கதை கட்டுகின்றீர்கள். நில உச்சவரம்பு சட்டம் தமிழ் மக்களுக்கு எதிரானது என்று எந்த தமிழ் தலைமையும் கூறவும் இல்லை அதற்கெதிராக போராட்டமும் மேற்கொள்ளவில்லை. இன ரீதியிலான தரப்படுத்தலே தமிழர்களுக்கு எதிரானது. அது கூட 1977 ல் ஐதேக அரசால் மாவட்ட அடிப்படையில் மாற்றப்பட்டபோது பின் தங்கிய தமிழ் பிரதேச மாணவர்கள் பலனடைந்தார்கள். அப்போது யாழ்பபாண மாணவர்கள் இங்கு படித்துவிட்டு பரீட்சையை வன்னி சென று தோற்றியதன் மூலம் வன்னி தமிழ் மாணவர்களின் வாய்ப்புகளை தட்டி பறித்த செயல்கள் குறித்துப் பேச மாட்டீர்கள். தர்ககரீதியான விவாதம் என்பது அடுத்தவர்மீது பழி போட்டு அவரை துரோகியாக்கி வெற்றி கொள்வதல்ல. புரிந்து கொள்ளுங்கள்.

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 1 week ago
நீங்கள் இதை சொல்கிறீர்களா? உங்கள் வண்டவாளங்கள் தண்டவாளமேறி ரொம்ப நாளாச்சே! நெற்கதிர் வளரவேண்டுமென்றால் களைகள் அழிக்கப்பட அல்லது அகற்றப்பட வேண்டியவையே!!

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 1 week ago
வணக்கம் வசி, பல இடங்களில் நீங்கள் குறிப்பிடும் உதாரணங்கள், கருத்துக்கள் சம்பந்தமில்லாமல் இருக்கின்றன. இங்கே curve-fitting பற்றிக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். எதிர்காலத்தை கணிக்கும் மொடலிங் செய்வதற்கான curve-fitting இற்கும், நடந்த சம்பவங்களின் சரி, பிழை, நிகழந்து விட்ட விளைவுகள் பற்றிப் பேசும் இந்த திரிக்கும் என்ன சம்பந்தம்? பல ஆயுதம் தரிக்காத மனிதர்கள் "ம்" என்றதும் சுட்டுக் கொல்லப் பட்ட நிலை பற்றிப் பேசுகிறோம். அந்த கொலைகளால் தமிழர்களின் போராட்டத்திற்கு ஏற்பட்ட ஒரு நன்மையும் எனக்குத் தெரியவில்லை (இல்லை, போராட்டம் 2009 இல் பெரும் உயிரழிவோடு முடிந்தமை தான் அந்த நன்மை என்று யாரும் வாதிட்டால் என்னிடம் பதில் இல்லை😎!). காரண காரியத் (cause and effect) தொடர்பை கண்ணால் கண்ட பின்னும், ஏன் curve-fitting உதாரணம்? ஒரு கருப்பொருள் உங்கள் மூளையில் தோன்றி விட்டது என்பதற்காக பொருத்தமில்லாத இடங்களில் திணித்து விடுகிறீர்களோ என்று தோன்றுகிறது!

மறைக்கப்பட்ட சந்திப்பு

1 month 1 week ago
Published By: VISHNU 19 FEB, 2024 | 01:12 AM ஹரிகரன் அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட் நிர்வாகி சமந்தா பவர், கடந்த 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன், ஒரு மெய்நிகர் கலந்துரையாடலை நடத்தியிருந்தார். இது தொடர்பாக உடனடியாகவே யு.எஸ்.எய்ட் இனால் ஒரு செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது. அந்த கலந்துரையாடல் தொடர்பாக ஜனாதிபதி செயலகம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அனைத்துலக அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகம், (யு.எஸ்.எய்ட்), இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருகின்ற ஒரு அமைப்பு. 1956 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 2 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியிருப்பதாக 2022 ஆம் ஆண்டு செம்டெம்பர் மாதம் யு.எஸ்.எய்ட் வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறியிருந்தது. யு.எஸ்.எய்ட் நிர்வாகியான சமந்தா பவர், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் காலத்தில், தேசிய பாதுகாப்பு சபையில் அவரது ஆலோசகராக பணியாற்றியவர். மனித உரிமை விவகாரங்களில் அக்கறையும் இறுக்கமான போக்கையும் கொண்டவர். ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதுவராகவும், சமந்தா பவர் பணியாற்றியிருந்தார். ஜோ பைடன், ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவரை யு.எஸ்.எய்ட் நிர்வாகியாக நியமித்திருக்கிறார். இலங்கையில் போர்க்காலத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக, ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானங்களுக்குப் பின்னால், முக்கிய பங்காற்றியவர் இவர். பல முறை இலங்கைக்கும் வந்து சென்றிருக்கிறார். மக்கள் போராட்டங்களினால், கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பின்னர், கடந்த செம்டெம்பர் நடுப்பகுதியில் சமந்தா பவர் இலங்கைக்கு வந்திருந்தார். பொருளாதார நெருக்கடியின் உச்ச கட்டத்தில் இருந்த இலங்கைக்கு அவர் வருவதற்கு முன்னரே 60 மில்லியன் டொலர்கள் உதவித் திட்டத்தை அறிவித்திருந்தார். இலங்கைக்கு வந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன், பேச்சுக்களை நடத்திய பின்னர் - அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 65 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கும் அவர் முன் வந்தார். இலங்கையில் ஜனநாயகம், மனித உரிமைகள், நல்லாட்சி போன்ற விடயங்களில் அமெரிக்கா அதிக அக்கறையுடன் செயற்படுகிறது. அவ்வாறான நோக்கத்தை அடைவதற்கான ஒரு கருவியாக, சமந்தா பவர் செயற்பட்டு வருகிறார். அவருக்கும் மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் நெருங்கிய நட்புறவு காணப்பட்டது. ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட அவர் நெருக்கமான தொடர்புகளை வைத்திருக்கிறார். இவ்வாறான ஒருவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுக்களை நடத்திய பின்னர், அதுகுறித்து அவரது அலுவலகத்தினால் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தரப்பில் இருந்து, இதுவரையில் அந்த உரையாடல் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒவ்வொரு நாளும் பலருடன் பேசுவார், தொடர்பு கொள்வார். எல்லா உரையாடல்களும் செய்திக் குறிப்புகளாக வெளியிடப்படுவதில்லை. சமந்தா பவருடனான உரையாடலும் அவ்வாறு உதறித் தள்ளக் கூடிய ஒன்றா? நிச்சயமாக இல்லை. சமந்தா பவர் உலகின் மிக வலிமையான நாட்டின், சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவனத்தின் தலைமை நிர்வாகி. இலங்கை விவகாரத்தில் கூடுதல் அக்கறையும் கவனமும் செலுத்துபவர். இலங்கைத் தலைவர்கள் பலரை தனிப்பட்ட முறையில் நன்றாக அறிந்தவர் தொடர்புகளை பேணி வருபவர். அவ்வாறான ஒருவருடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடத்திய மெய்நிகர் சந்திப்பை புறக்கணித்து ஒதுக்க முடியாது. ஆனால், ஜனாதிபதி செயலகம் இது பற்றி மூச்சு கூட விடவில்லை. அதற்குக் காரணம், இல்லாமல் இல்லை. ஏனென்றால், ரணில் விக்கிரமசிங்கவிடம், சுக நலம் விசாரிப்பதற்காக சமந்தா பவர் அந்த சந்திப்பை மேற்கொள்ளவில்லை. இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகள், அரசாங்கத்தின் நடவடிக்கை போன்றவற்றின் மீதான, அமெரிக்க அரசாங்கத்தின் கரிசனைகளை வெளிப்படுத்தும் விதத்தில் தான், இந்த மெய் நிகர் சந்திப்பு இடம்பெற்றிருக்கிறது. இந்த சந்திப்பின் போது சமந்தா பவர் வெளிப்படுத்திய கருத்துக்கள், இலங்கை அரசாங்கத்துக்கு குறிப்பாக ஜனாதிபதிக்கு உவப்பானவை. அதனால்தான் இவ்வாறான ஒரு சந்திப்பு இடம் பெற்றதாகவே ஜனாதிபதி செயலகம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. யு.எஸ்.எய்ட் தலைமையகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், “இன்று (13) இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன், நிர்வாகி சமந்தா பவர் உரையாடினார். அவர்கள் இலங்கையின் பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் பற்றி கலந்துரையாடினர். மேலும் கடினமான பொருளாதார சவால்களை எதிர்கொள்வதில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு யு.எஸ்.எய்ட் அர்ப்பணிப்புடன் இருப்பதாக சமந்தா பவர் வெளிப்படுத்தினார். சமந்தா பவர் மற்றும் ஜனாதிபதி விக்கிரமசிங்க ஆகியோர் ஜனநாயக ஆட்சியின் முக்கியத்துவம் மற்றும் சட்டமியற்றும் செயல்முறை குறித்து கலந்துரையாடினர். இதன்போது, கருத்து மற்றும் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்துக்கு அமெரிக்காவின் வலுவான ஆதரவை வெளிப்படுத்தினார். கருத்துச் சுதந்திரம் மற்றும் இலங்கையின் துடிப்பான டிஜிட்டல் பொருளாதாரத்தில் முதலீடு போன்றவற்றில், நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் சாத்தியமான தாக்கம் பற்றிய கவலைகளை நிவர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தினார்.” என்று கூறப்பட்டிருந்தது. மேன்போக்காக பார்த்தால், இந்த அறிக்கையில் பெரிதாக எந்த விடயமும் இருப்பதாக கண்டறிய முடியாது. ஆனால் இது முக்கியமானது. இதற்குள் இரண்டு விடயங்கள் பொதிந்து கிடக்கின்றன. ஒன்று - வெளிப்படையாகவே கூறப்பட்டிருக்கின்ற, நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பான அமெரிக்காவின் கரிசனை. இன்னொன்று - ஜனநாயக ஆட்சி முறை மற்றும் சட்டம் இயற்றும் செயல்முறை தொடர்பான அமெரிக்காவின் கவலை. நிகழ்நிலை காப்புச் சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றுவதற்கு முன்னரே, அதிலுள்ள சில விடயங்கள் குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டிருந்தது. இதுதொடர்பாக அமெரிக்க தூதுவரும் பகிரங்கமாக பதிவுகளை இட்டிருந்தார். அரசாங்க தரப்பினருடனான சந்திப்புகளின் போதும், கூறியிருந்தார். ஆனாலும் அரசாங்கம் அந்தச் சட்டத்தை விடாப்பிடியாக கொண்டு வந்து நிறைவேற்றி விட்டது. பாராளுமன்றத்தில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரும், அமெரிக்க தூதுவர் ஜூலி சங், இது, கருத்து சுதந்திரத்தை பாதிக்க கூடிய விடயங்களை உள்ளடக்கி இருப்பதாகவும், வளர்ந்து வரும் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார முதலீடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்திருந்தார். அப்போது, அரசாங்கம் அது பற்றி கண்டு கொள்ளவில்லை. சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தினால், பெரும்பாலும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட டிஜிட்டல் பொருளாதார முதலீட்டாளர்கள் இலங்கையில் தங்களின் முதலீடுகளை தவிர்க்கின்ற நிலை உருவாகும் என்று அமெரிக்கா எச்சரித்திருந்தது. சமந்தா பவரும் கூட இந்த எச்சரிக்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வெளியிட்டு இருக்கிறார். அறிக்கையில் இந்த விடயம் மிக நாசூக்காக கையாளப்பட்டிருக்கிறது. அதுதான் இராஜதந்திர அணுகுமுறை. இறுக்கமான விடயங்களை கூட, இராஜதந்திர மொழிநடையில், இலகுவானதாக, நாசுக்காக எடுத்துக் கூறலாம். அதனை சரியாகப் புரிந்து கொள்வது தான் முக்கியம். சமந்தா பவரின் பணியகம் வெளியிட்ட அறிக்கையும் அவ்வாறான ஒன்று தான். உலகளாவிய ரீதியில் டிஜிட்டல் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. அவ்வாறான ஒரு பொருளாதார முதலீட்டு வாய்ப்பை இலங்கை இழக்கின்ற நிலைக்கு இந்த சட்டம் காரணமாகப் போகிறது என்பதே அமெரிக்காவின் எச்சரிக்கை. அடுத்து, இந்த சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றிய முறையையும் அமெரிக்கா ஏற்றுக்கொள்ளவில்லை. குறிப்பாக உயர்நீதிமன்றத்தினால் இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு கையாளப்பட வேண்டிய மற்றும் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் பலவும், இந்த சட்டத்தில் இடம்பெறவில்லை. இது ஒரு சட்டத்தை உருவாக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக பாராளுமன்றத்துக்கு ஆலோசனை கூறுகின்ற உயர்நீதிமன்றத்தின் வகிபாகத்தை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. இலங்கை மனித உரிமை ஆணைக்குழு இது குறித்து கடுமையான அதிருப்தியை வெளியிட்டிருந்தது. இதனை முன்னிறுத்தி பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஒரு அடிப்படை உரிமை மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். நீதித்துறைக்கும் சட்டவாக்கத்துறைக்கும் இடையில் பேணப்பட வேண்டிய சமநிலையில் குழப்பத்தை உருவாக்கும் - தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் வகையில், இந்த சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இது அமெரிக்காவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ள முக்கியமான ஒரு விடயம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளூராட்சி தேர்தலை தடுப்பதற்கு கையாண்ட வழிமுறை போல, உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைகளை புறக்கணிப்பதற்கும் இவ்வாறான ஒரு உத்தியை கையாளுகிறாரா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் தான், ஜனநாயக ஆட்சி முறை தொடர்பாகவும் சட்டம் இயற்றும் செயல்முறை தொடர்பாகவும் கலந்துரையாட வேண்டிய சூழல் சமந்தா பவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதேபோன்று, சமகாலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு முயற்சிக்கிறார் என்றும், அதற்காக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிக்கின்ற முயற்சியில் இறங்கப் போகிறார் என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. உள்ளூராட்சித் தேர்தலைப் போன்று. ஜனாதிபதி தேர்தலையும் தடுப்பதற்கு அவர் எந்த வழிமுறைகளையும் கையாளக் கூடும் என்ற கருத்து பரவலாக காணப்படுகிறது. என்னதான், ரணில் விக்கிரமசிங்க அமெரிக்க சார்பாளராக இருந்தாலும், குறுக்கு வழியில் அவர் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துக் கொண்டு, பதவியில் நீடித்திருப்பதை அமெரிக்கா விரும்பாது. இலங்கையில் ஜனநாயகம், மனித உரிமைகள், நல்லாட்சி போன்றவற்றை அமெரிக்கா வலியுறுத்துவதற்கு முக்கிய காரணமே, அவற்றின் சமநிலையில் ஏற்படும் தாக்கம் - இலங்கையினதும், பிராந்தியத்தினதும் பாதுகாப்பில் தாக்கம் செலுத்தும் என்பதற்காகத் தான். எனவே, ரணில் விக்கிரமசிங்கவை சரியான பாதைக்கு கொண்டு வருவதற்கு, அமெரிக்கா முயற்சிக்கிறது. அந்த வேலையே அனுபவசாலியான சமந்தா பவரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த சந்திப்பு தொடர்பாக அரச தரப்பு காட்டுகின்ற மௌனம், கொடுக்கப்பட்ட அந்த வேலையை சமந்தா பவர் சரியாகச் செய்திருக்கிறார் என்பதைத் தான் உணர்த்துகிறது. https://www.virakesari.lk/article/176710

மறைக்கப்பட்ட சந்திப்பு

1 month 1 week ago

Published By: VISHNU   19 FEB, 2024 | 01:12 AM

image

ஹரிகரன்

அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட் நிர்வாகி சமந்தா பவர், கடந்த 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன், ஒரு மெய்நிகர் கலந்துரையாடலை நடத்தியிருந்தார். இது தொடர்பாக உடனடியாகவே யு.எஸ்.எய்ட் இனால் ஒரு செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது. அந்த கலந்துரையாடல் தொடர்பாக ஜனாதிபதி செயலகம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

அனைத்துலக அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகம், (யு.எஸ்.எய்ட்), இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருகின்ற ஒரு அமைப்பு.

1956 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 2 பில்லியன் டொலர்களை  இலங்கைக்கு வழங்கியிருப்பதாக 2022 ஆம் ஆண்டு செம்டெம்பர் மாதம் யு.எஸ்.எய்ட் வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறியிருந்தது.

யு.எஸ்.எய்ட் நிர்வாகியான சமந்தா பவர், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் காலத்தில், தேசிய பாதுகாப்பு சபையில் அவரது ஆலோசகராக பணியாற்றியவர். மனித உரிமை விவகாரங்களில் அக்கறையும் இறுக்கமான போக்கையும் கொண்டவர்.  ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதுவராகவும், சமந்தா பவர் பணியாற்றியிருந்தார்.

ஜோ பைடன், ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவரை யு.எஸ்.எய்ட் நிர்வாகியாக நியமித்திருக்கிறார்.

இலங்கையில் போர்க்காலத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக, ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானங்களுக்குப் பின்னால், முக்கிய பங்காற்றியவர் இவர்.

பல முறை இலங்கைக்கும் வந்து சென்றிருக்கிறார். மக்கள் போராட்டங்களினால், கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பின்னர், கடந்த செம்டெம்பர் நடுப்பகுதியில் சமந்தா பவர் இலங்கைக்கு வந்திருந்தார்.

பொருளாதார நெருக்கடியின் உச்ச கட்டத்தில் இருந்த இலங்கைக்கு அவர் வருவதற்கு முன்னரே 60 மில்லியன் டொலர்கள் உதவித் திட்டத்தை அறிவித்திருந்தார்.

இலங்கைக்கு வந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன், பேச்சுக்களை நடத்திய பின்னர் - அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 65 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கும் அவர் முன் வந்தார்.

இலங்கையில் ஜனநாயகம், மனித உரிமைகள், நல்லாட்சி போன்ற விடயங்களில் அமெரிக்கா அதிக அக்கறையுடன் செயற்படுகிறது.

அவ்வாறான நோக்கத்தை அடைவதற்கான ஒரு கருவியாக, சமந்தா பவர் செயற்பட்டு வருகிறார். அவருக்கும் மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் நெருங்கிய நட்புறவு காணப்பட்டது.

ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட அவர் நெருக்கமான தொடர்புகளை வைத்திருக்கிறார். இவ்வாறான ஒருவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுக்களை நடத்திய பின்னர், அதுகுறித்து அவரது அலுவலகத்தினால் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆனால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தரப்பில் இருந்து, இதுவரையில் அந்த உரையாடல் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒவ்வொரு நாளும் பலருடன் பேசுவார், தொடர்பு கொள்வார். எல்லா உரையாடல்களும் செய்திக் குறிப்புகளாக வெளியிடப்படுவதில்லை. சமந்தா பவருடனான உரையாடலும் அவ்வாறு உதறித் தள்ளக் கூடிய ஒன்றா? 

நிச்சயமாக இல்லை. சமந்தா பவர் உலகின் மிக வலிமையான நாட்டின், சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவனத்தின் தலைமை நிர்வாகி. இலங்கை விவகாரத்தில் கூடுதல் அக்கறையும் கவனமும் செலுத்துபவர்.

இலங்கைத் தலைவர்கள் பலரை தனிப்பட்ட முறையில் நன்றாக அறிந்தவர் தொடர்புகளை பேணி வருபவர். அவ்வாறான ஒருவருடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடத்திய மெய்நிகர் சந்திப்பை புறக்கணித்து ஒதுக்க முடியாது.

ஆனால், ஜனாதிபதி செயலகம் இது பற்றி மூச்சு கூட விடவில்லை. அதற்குக் காரணம், இல்லாமல் இல்லை.

ஏனென்றால், ரணில் விக்கிரமசிங்கவிடம், சுக நலம் விசாரிப்பதற்காக சமந்தா பவர் அந்த சந்திப்பை மேற்கொள்ளவில்லை.

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகள், அரசாங்கத்தின் நடவடிக்கை போன்றவற்றின் மீதான, அமெரிக்க அரசாங்கத்தின் கரிசனைகளை வெளிப்படுத்தும் விதத்தில் தான், இந்த மெய் நிகர்  சந்திப்பு இடம்பெற்றிருக்கிறது.

இந்த சந்திப்பின் போது சமந்தா பவர் வெளிப்படுத்திய கருத்துக்கள், இலங்கை அரசாங்கத்துக்கு குறிப்பாக ஜனாதிபதிக்கு உவப்பானவை. அதனால்தான் இவ்வாறான ஒரு சந்திப்பு இடம் பெற்றதாகவே ஜனாதிபதி செயலகம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

யு.எஸ்.எய்ட் தலைமையகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், “இன்று (13) இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன், நிர்வாகி சமந்தா பவர் உரையாடினார்.

அவர்கள் இலங்கையின் பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் பற்றி கலந்துரையாடினர். மேலும் கடினமான பொருளாதார சவால்களை எதிர்கொள்வதில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு யு.எஸ்.எய்ட்  அர்ப்பணிப்புடன் இருப்பதாக சமந்தா பவர் வெளிப்படுத்தினார்.

சமந்தா பவர் மற்றும் ஜனாதிபதி விக்கிரமசிங்க ஆகியோர் ஜனநாயக ஆட்சியின் முக்கியத்துவம் மற்றும்  சட்டமியற்றும் செயல்முறை குறித்து கலந்துரையாடினர்.

இதன்போது, கருத்து மற்றும் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்துக்கு  அமெரிக்காவின்  வலுவான ஆதரவை வெளிப்படுத்தினார்.

கருத்துச் சுதந்திரம் மற்றும் இலங்கையின் துடிப்பான டிஜிட்டல் பொருளாதாரத்தில் முதலீடு போன்றவற்றில், நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் சாத்தியமான தாக்கம் பற்றிய கவலைகளை நிவர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தினார்.”  என்று கூறப்பட்டிருந்தது.

மேன்போக்காக பார்த்தால், இந்த அறிக்கையில் பெரிதாக எந்த விடயமும் இருப்பதாக கண்டறிய முடியாது.

ஆனால் இது முக்கியமானது. இதற்குள் இரண்டு விடயங்கள் பொதிந்து கிடக்கின்றன.

ஒன்று - வெளிப்படையாகவே கூறப்பட்டிருக்கின்ற, நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பான அமெரிக்காவின் கரிசனை.

இன்னொன்று -  ஜனநாயக ஆட்சி முறை மற்றும் சட்டம் இயற்றும் செயல்முறை தொடர்பான அமெரிக்காவின் கவலை.

நிகழ்நிலை காப்புச் சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றுவதற்கு முன்னரே, அதிலுள்ள சில விடயங்கள் குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டிருந்தது.

இதுதொடர்பாக அமெரிக்க தூதுவரும் பகிரங்கமாக பதிவுகளை இட்டிருந்தார். அரசாங்க தரப்பினருடனான சந்திப்புகளின் போதும், கூறியிருந்தார்.

ஆனாலும் அரசாங்கம் அந்தச் சட்டத்தை விடாப்பிடியாக கொண்டு வந்து நிறைவேற்றி விட்டது.

பாராளுமன்றத்தில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரும், அமெரிக்க தூதுவர் ஜூலி சங், இது,  கருத்து சுதந்திரத்தை பாதிக்க கூடிய விடயங்களை உள்ளடக்கி இருப்பதாகவும், வளர்ந்து வரும் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார முதலீடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்திருந்தார்.

அப்போது, அரசாங்கம் அது பற்றி கண்டு கொள்ளவில்லை.

சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தினால், பெரும்பாலும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட டிஜிட்டல் பொருளாதார முதலீட்டாளர்கள் இலங்கையில் தங்களின் முதலீடுகளை தவிர்க்கின்ற நிலை உருவாகும் என்று அமெரிக்கா எச்சரித்திருந்தது.

சமந்தா பவரும் கூட இந்த எச்சரிக்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வெளியிட்டு இருக்கிறார். அறிக்கையில் இந்த விடயம் மிக நாசூக்காக கையாளப்பட்டிருக்கிறது. அதுதான் இராஜதந்திர அணுகுமுறை.

இறுக்கமான விடயங்களை கூட, இராஜதந்திர மொழிநடையில்,  இலகுவானதாக, நாசுக்காக எடுத்துக் கூறலாம். அதனை சரியாகப் புரிந்து கொள்வது தான் முக்கியம்.

சமந்தா பவரின் பணியகம் வெளியிட்ட அறிக்கையும் அவ்வாறான ஒன்று தான். உலகளாவிய ரீதியில் டிஜிட்டல் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. 

அவ்வாறான ஒரு பொருளாதார முதலீட்டு வாய்ப்பை இலங்கை இழக்கின்ற நிலைக்கு இந்த சட்டம் காரணமாகப் போகிறது என்பதே அமெரிக்காவின் எச்சரிக்கை.

அடுத்து, இந்த சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றிய முறையையும் அமெரிக்கா ஏற்றுக்கொள்ளவில்லை.

குறிப்பாக உயர்நீதிமன்றத்தினால் இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு கையாளப்பட வேண்டிய  மற்றும் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் பலவும், இந்த சட்டத்தில் இடம்பெறவில்லை.

இது ஒரு சட்டத்தை உருவாக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக பாராளுமன்றத்துக்கு ஆலோசனை கூறுகின்ற உயர்நீதிமன்றத்தின் வகிபாகத்தை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழு இது குறித்து கடுமையான அதிருப்தியை வெளியிட்டிருந்தது.

இதனை முன்னிறுத்தி பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஒரு அடிப்படை உரிமை மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்.

நீதித்துறைக்கும் சட்டவாக்கத்துறைக்கும் இடையில் பேணப்பட வேண்டிய சமநிலையில் குழப்பத்தை உருவாக்கும் - தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் வகையில், இந்த சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இது அமெரிக்காவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ள முக்கியமான ஒரு விடயம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளூராட்சி தேர்தலை தடுப்பதற்கு கையாண்ட வழிமுறை போல, உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைகளை புறக்கணிப்பதற்கும் இவ்வாறான ஒரு உத்தியை கையாளுகிறாரா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அதனால் தான், ஜனநாயக ஆட்சி முறை தொடர்பாகவும் சட்டம் இயற்றும் செயல்முறை தொடர்பாகவும் கலந்துரையாட வேண்டிய சூழல் சமந்தா பவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

அதேபோன்று, சமகாலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி தேர்தலை  பிற்போடுவதற்கு முயற்சிக்கிறார் என்றும், அதற்காக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிக்கின்ற முயற்சியில் இறங்கப் போகிறார் என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

உள்ளூராட்சித் தேர்தலைப் போன்று. ஜனாதிபதி தேர்தலையும் தடுப்பதற்கு அவர் எந்த வழிமுறைகளையும் கையாளக் கூடும் என்ற கருத்து பரவலாக காணப்படுகிறது.

என்னதான், ரணில் விக்கிரமசிங்க அமெரிக்க சார்பாளராக இருந்தாலும், குறுக்கு வழியில் அவர் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துக் கொண்டு, பதவியில் நீடித்திருப்பதை அமெரிக்கா விரும்பாது.

இலங்கையில் ஜனநாயகம், மனித உரிமைகள், நல்லாட்சி போன்றவற்றை அமெரிக்கா வலியுறுத்துவதற்கு முக்கிய காரணமே, அவற்றின் சமநிலையில் ஏற்படும் தாக்கம் - இலங்கையினதும், பிராந்தியத்தினதும் பாதுகாப்பில் தாக்கம் செலுத்தும் என்பதற்காகத் தான்.

எனவே, ரணில் விக்கிரமசிங்கவை சரியான பாதைக்கு கொண்டு வருவதற்கு, அமெரிக்கா முயற்சிக்கிறது. அந்த வேலையே அனுபவசாலியான சமந்தா பவரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த சந்திப்பு தொடர்பாக அரச தரப்பு காட்டுகின்ற மௌனம், கொடுக்கப்பட்ட அந்த வேலையை சமந்தா பவர் சரியாகச் செய்திருக்கிறார் என்பதைத் தான் உணர்த்துகிறது.

https://www.virakesari.lk/article/176710

முன்னாள் மனைவியைக் கொன்ற நபருக்கு 45 ஆண்டுக்குப் பிறகு தண்டனை - எப்படி தெரியுமா?

1 month 1 week ago
முன்னாள் மனைவியை கொன்ற நபரை 45 ஆண்டுக்குப் பிறகு காட்டிக் கொடுத்த விந்தணு - எப்படி தெரியுமா? பட மூலாதாரம்,NEWSLINE MEDIA படக்குறிப்பு, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பிரெண்டா பேஜ், தன் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற ஒரு வருடத்தில் கொலை செய்யப்பட்டார். கட்டுரை தகவல் எழுதியவர், ரெபேக்கா கர்ரான், கென் பேங்க்ஸ் பதவி, பிபிசி ஸ்காட்லாந்து 19 பிப்ரவரி 2024, 06:58 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்காட்லாந்தில் தனது முன்னாள் மனைவியை கொன்று 45 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரை கைது செய்த துப்பறியும் நபர் ஒருவரின் வார்த்தைகளில் கூற வேண்டும் என்றால், கைது செய்யப்பட்ட நபர் தன்னைத் தானே புத்திசாலி என நினைத்துக்கொண்டிருந்துள்ளார். ஸ்காட்லாந்தின் வட-கிழக்கு மாநிலமான அபெர்டீனைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் ஹாரிசன். இவர், 32 வயதான தனது மனைவி பிரெண்டா பேஜிடம் இருந்து விவாகரத்து பெற்று ஒரு ஆண்டுக்கு பிறகு, 1978 ஆம் ஆண்டு தன் மனைவியை கொலை செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்தவர்களில் ஒருவரான ஜேம்ஸ் காலண்டர், பிரெண்டா பேஜின் கொலை குற்றவாளியை எப்படி கண்டுபிடித்தனர் என்பதை விளக்கினார். “அவர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துகொண்டதாக நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், விசாரணையில், அவரையே அறியாமல், அவர் அதனை ஒப்புக்கொண்டார்,” என்றார் ஜேம்ஸ். பிரெண்டா பேஜ் இறந்து 45 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் கைது செய்யப்பட்டு, குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. படக்குறிப்பு, பிரெண்டா பேஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த அதிகாரி ஜேம்ஸ் காலண்டர், குற்றவாளி தன்னை ஒரு புத்திசாலி என நினைத்துக்கொண்டிருந்ததாகக் கூறினார். கொலை நடந்து 30 ஆண்டுகளுக்கு பின் மறு விசாரணை இந்தக் கொலைக் குற்றத்தை மையமாகக் கொண்டு, பிபிசியின் ஆவணப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தி கில்லிங் ஆஃப் டாக்டர் பிரெண்டா பேஜ் என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த ஆவணப்படம், 2020இல் ஹாரிசன் கைது செய்யப்படும் காட்சிகளுடன் தொடங்குகிறது. ஆவணப்படத்தை தயாரித்தது. 2020 இல் ஹாரிசன் கைது செய்யப்பட்ட காட்சிகளுடன் ஆவணப்படம் தொடங்குகிறது. ஆரம்பக்காட்சியில், ஹாரிசனை போலீஸ் தேடி வரும்போது, ‘அவர் இங்கே கொல்லப்படவில்லை,’ எனக் கூறுவது கேட்கிறது. மரபியல் நிபுணரான டாக்டர் பிரெண்டா பேஜ், ஜூலை 14, 1978 அன்று தனது படுக்கையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரை அவரது முன்னாள் கணவர் ஹாரிசன் கொலை செய்திருக்கக்கூடும் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. கொலை நடந்த சில மணி நேரங்களிலேயே அவரை போலீசாரும் கைது செய்தனர். ஆனால், அந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்தபோதும், அவர் தான் கொலை செய்தார் என்பதற்கான எந்த ஆதரமும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இந்தக் கொலைக்கான ஆதரங்களை, ஸ்காட்லாந்து போலீசாரும், ஊடகங்களும் தொடர்ந்து தேடி வந்தன. ஆனால், நீண்ட காலத்திற்கு கொலை தொடர்பாக எந்த ஆதரமும் கிடைக்கவில்லை. அதன் பிறகு இந்த வழக்கை, கிடப்பில் போட்டனர். பின், 32 ஆண்டுகளுக்குப் பிறகு, 2015-இல் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க போலீசாருக்கு உத்தரவு வந்தது. பட மூலாதாரம்,PAGE FAMILY படக்குறிப்பு, பிரெண்ட பேஜ் கொலை வழக்கில், எந்த ஆதரமும் கிடைக்காத நிலையில், வழக்கு கிடப்பில் போடப்பட்டது. மறுவிசாரணையில் சிக்கிய புதிய ஆதாரம் வழக்கை மீண்டும் விசாரித்த போலீசார், பிரெண்டா பேஜின் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தடயங்களை சேகரித்திருந்தனர். அப்போது, ஒரு போர்வையில் விந்துக் கறை காணப்பட்டது. அந்த விந்து, ஹாரிசனின் டிஎன்ஏ,வுடன் ஒப்பிடப்பட்டது. ஆய்வின் முடிவில், போர்வையில் காணப்பட்ட விந்துவும், ஹாரிசனின் டிஎன்ஏ,வும் ஒத்துப்போனது. ஆனால், அதற்கு முன் நடந்த விசாரணையில், தான் பிரெண்டாவுடன் உடலுறவு கொள்ளவில்லை என ஹாரிசன் கூறியிருந்தார். ஆனால், அந்த விந்து அவருடையது தான் என்பதற்கு வலுவான ஆதாரம் இருப்பதாக போலீசார் முடிவு செய்தனர். அதேபோல, பிரெண்டாவின் அடுக்குமாடி குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்ட சில உடைந்த ஓவியங்களும், ஹாரிசனின் காரில் கண்டெடுக்கப்பட்டது. கொலை நடந்த மூன்று தசாப்தத்திற்கு பிறகு, மார்ச் 27, 2020 அன்று ஹாரிசனை மீண்டும் கைது செய்து, விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், ஹாரிசன், தொடர்ந்து தனக்கும் தனது முன்னாள் மனைவின் கொலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என வாதிட்டு வந்தார். ஆனால், ஆதாரங்கள் வலுவாக இருந்ததால், அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இறுதியாக, மார்ச் 2023 இல், 10 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடந்தது. அந்த விசாரணைக்கு பின், ஹாரிசன் தான் அவரது முன்னாள் மனைவி பிரெண்டா பேஜை கொலை செய்தார் என நிரூபிக்கப்பட்டது. அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரிவிட்டது. சிறையில் அடைக்கப்பட்ட ஹாரிசன், 20 ஆண்டுகளுக்குப் பிறகு தான் பரோலுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்த வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி காலண்டர், வழக்கு குறித்து பிபிசியிடம் பேசினார். அப்போது அவர், ஹாரிசன் அவரது முன்னாள் மனைவி பிரெண்டா பேஜ் கொலை வழக்கில் 45 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என எதிர்பார்க்கவில்லை. “அவரத அதீத புத்திசாலித்தனமே அவர் வீழ்ச்சிக்கு காரணம் என்று நினைக்கிறேன். ஏனென்றால், 45 ஆண்டுகளுக்குப் பிறகு அவரை கைது செய்வார்கள் என அவர் நினைக்கவில்லை,”என்றார் காலண்டர். மேலும், வழக்கு விசாரணையின்போது, அவரே குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், அவரே வழக்கில் சிக்கிக்கொண்டதாகவும் காலண்டர் பிபிசியிடம் கூறினார். "வீடியோ கேமராக்களுக்கு முன்னால் போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய விதத்தை நீங்கள் பார்த்தால், அவரே குற்றத்தை ஒப்புக்கொள்வது உங்களுக்கு புரியும். அவரேதான் இந்த வழக்கில் சிக்கினார்,”என்றார். தான் எல்லோரையும் விட புத்திசாலி என்றும், வழக்கில் இருந்து எளிதில் தப்பிக்க முடியும் என்றும் அவர் தன்னை நம்பியிருந்ததாக காலண்டர் கூறினார். படக்குறிப்பு, திருமணம் நடந்த மூன்று ஆண்டுகளில் தனது மனைவியை விவாகரத்து செய்த ஹாரிசன், விவாகரத்து நடந்த ஒரே ஆண்டில் அவரை கொலையும் செய்துள்ளார். ஹாரிசன் மற்றும் பிரெண்டாவின் வாழ்க்கை ஹாரிசன் மற்றும் பிரெண்டா பேஜ், 1972 இல் திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும், தனது திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இல்லை என்று பிரெண்டா தனது நெருங்கிய நண்பர்களிடம் கூறி வந்தார். தன்னுடைய கணவனைக் கண்டால், பயமாக இருப்பதாகவும் சொல்லிக்கொண்டே இருந்துள்ளார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் பிரிந்தனர். பிரெண்டா பேஜ், அடுக்குமாடி குடியிருப்பில் சொந்தமாக ஒரு வீடு வாங்கினார். விவாகரத்துக்குப் பிறகும் ஹாரிசன், பிரெண்டாவை தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்ததாக பிரெண்டா பேஜின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். அவர் மற்ற ஆண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக ஹாரிசன் சந்தேகிப்பதாக பிரெண்டா தங்களிடம் கூறியதாக பிரெண்டாவின் குடும்ப உறுப்பினர்கள் கூறினர். பிரெண்டாவின் 59 வயதான மருமகன் கிறிஸ் லிங், வழக்கு விசாரணையின்போது, தினமும் நீதிமன்றத்தில் ஆஜரானார். "நீதிமன்றத்திற்கு வருவது மிகவும் விசித்திரமான உணர்வு. எனது அத்தையைக் கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் பல ஆண்டுகளாக எங்களுடனே இருந்தார். அவர் எங்கள் கண் முன்னே தான் இருந்தார்," என லிங் பிபிசியிடம் கூறினார். டிஎன்ஏ தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் காரணமாக, குற்றம் சாட்டப்பட்டவர்களை தற்போது அடையாளம் காண முடிந்ததற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த வழக்கின் விசாரணைக்காக, 40 ஆண்டுகளில் 4 ஆயிரம் சாட்சிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மூன்று ஆயிரம் பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. வழக்கு விசாரணைக்கு பிறகு சுமார் 500 வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. https://www.bbc.com/tamil/articles/cq57pn33q4xo

முன்னாள் மனைவியைக் கொன்ற நபருக்கு 45 ஆண்டுக்குப் பிறகு தண்டனை - எப்படி தெரியுமா?

1 month 1 week ago
முன்னாள் மனைவியை கொன்ற நபரை 45 ஆண்டுக்குப் பிறகு காட்டிக் கொடுத்த விந்தணு - எப்படி தெரியுமா?
பிரெண்டா பேஜ் மற்றும் அவரது கணவர்

பட மூலாதாரம்,NEWSLINE MEDIA

படக்குறிப்பு,

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பிரெண்டா பேஜ், தன் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற ஒரு வருடத்தில் கொலை செய்யப்பட்டார்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரெபேக்கா கர்ரான், கென் பேங்க்ஸ்
  • பதவி, பிபிசி ஸ்காட்லாந்து
  • 19 பிப்ரவரி 2024, 06:58 GMT
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஸ்காட்லாந்தில் தனது முன்னாள் மனைவியை கொன்று 45 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவரை கைது செய்த துப்பறியும் நபர் ஒருவரின் வார்த்தைகளில் கூற வேண்டும் என்றால், கைது செய்யப்பட்ட நபர் தன்னைத் தானே புத்திசாலி என நினைத்துக்கொண்டிருந்துள்ளார்.

ஸ்காட்லாந்தின் வட-கிழக்கு மாநிலமான அபெர்டீனைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் ஹாரிசன். இவர், 32 வயதான தனது மனைவி பிரெண்டா பேஜிடம் இருந்து விவாகரத்து பெற்று ஒரு ஆண்டுக்கு பிறகு, 1978 ஆம் ஆண்டு தன் மனைவியை கொலை செய்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்தவர்களில் ஒருவரான ஜேம்ஸ் காலண்டர், பிரெண்டா பேஜின் கொலை குற்றவாளியை எப்படி கண்டுபிடித்தனர் என்பதை விளக்கினார்.

“அவர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துகொண்டதாக நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், விசாரணையில், அவரையே அறியாமல், அவர் அதனை ஒப்புக்கொண்டார்,” என்றார் ஜேம்ஸ்.

பிரெண்டா பேஜ் இறந்து 45 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் கைது செய்யப்பட்டு, குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

விசாரணை அதிகாரி ஜேம்ஸ் காலண்டர்,
படக்குறிப்பு,

பிரெண்டா பேஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த அதிகாரி ஜேம்ஸ் காலண்டர், குற்றவாளி தன்னை ஒரு புத்திசாலி என நினைத்துக்கொண்டிருந்ததாகக் கூறினார்.

கொலை நடந்து 30 ஆண்டுகளுக்கு பின் மறு விசாரணை

இந்தக் கொலைக் குற்றத்தை மையமாகக் கொண்டு, பிபிசியின் ஆவணப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தி கில்லிங் ஆஃப் டாக்டர் பிரெண்டா பேஜ் என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த ஆவணப்படம், 2020இல் ஹாரிசன் கைது செய்யப்படும் காட்சிகளுடன் தொடங்குகிறது.

ஆவணப்படத்தை தயாரித்தது. 2020 இல் ஹாரிசன் கைது செய்யப்பட்ட காட்சிகளுடன் ஆவணப்படம் தொடங்குகிறது. ஆரம்பக்காட்சியில், ஹாரிசனை போலீஸ் தேடி வரும்போது, ‘அவர் இங்கே கொல்லப்படவில்லை,’ எனக் கூறுவது கேட்கிறது.

மரபியல் நிபுணரான டாக்டர் பிரெண்டா பேஜ், ஜூலை 14, 1978 அன்று தனது படுக்கையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

அவரை அவரது முன்னாள் கணவர் ஹாரிசன் கொலை செய்திருக்கக்கூடும் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. கொலை நடந்த சில மணி நேரங்களிலேயே அவரை போலீசாரும் கைது செய்தனர்.

ஆனால், அந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்தபோதும், அவர் தான் கொலை செய்தார் என்பதற்கான எந்த ஆதரமும் போலீசாருக்கு கிடைக்கவில்லை.

இந்தக் கொலைக்கான ஆதரங்களை, ஸ்காட்லாந்து போலீசாரும், ஊடகங்களும் தொடர்ந்து தேடி வந்தன. ஆனால், நீண்ட காலத்திற்கு கொலை தொடர்பாக எந்த ஆதரமும் கிடைக்கவில்லை.

அதன் பிறகு இந்த வழக்கை, கிடப்பில் போட்டனர். பின், 32 ஆண்டுகளுக்குப் பிறகு, 2015-இல் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க போலீசாருக்கு உத்தரவு வந்தது.

 
கொலை செய்யப்பட்ட மருத்துவர் பிரெண்டா பேஜ்

பட மூலாதாரம்,PAGE FAMILY

படக்குறிப்பு,

பிரெண்ட பேஜ் கொலை வழக்கில், எந்த ஆதரமும் கிடைக்காத நிலையில், வழக்கு கிடப்பில் போடப்பட்டது.

மறுவிசாரணையில் சிக்கிய புதிய ஆதாரம்

வழக்கை மீண்டும் விசாரித்த போலீசார், பிரெண்டா பேஜின் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தடயங்களை சேகரித்திருந்தனர். அப்போது, ஒரு போர்வையில் விந்துக் கறை காணப்பட்டது. அந்த விந்து, ஹாரிசனின் டிஎன்ஏ,வுடன் ஒப்பிடப்பட்டது.

ஆய்வின் முடிவில், போர்வையில் காணப்பட்ட விந்துவும், ஹாரிசனின் டிஎன்ஏ,வும் ஒத்துப்போனது. ஆனால், அதற்கு முன் நடந்த விசாரணையில், தான் பிரெண்டாவுடன் உடலுறவு கொள்ளவில்லை என ஹாரிசன் கூறியிருந்தார்.

ஆனால், அந்த விந்து அவருடையது தான் என்பதற்கு வலுவான ஆதாரம் இருப்பதாக போலீசார் முடிவு செய்தனர். அதேபோல, பிரெண்டாவின் அடுக்குமாடி குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்ட சில உடைந்த ஓவியங்களும், ஹாரிசனின் காரில் கண்டெடுக்கப்பட்டது.

கொலை நடந்த மூன்று தசாப்தத்திற்கு பிறகு, மார்ச் 27, 2020 அன்று ஹாரிசனை மீண்டும் கைது செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.

ஆனால், ஹாரிசன், தொடர்ந்து தனக்கும் தனது முன்னாள் மனைவின் கொலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என வாதிட்டு வந்தார். ஆனால், ஆதாரங்கள் வலுவாக இருந்ததால், அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இறுதியாக, மார்ச் 2023 இல், 10 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடந்தது. அந்த விசாரணைக்கு பின், ஹாரிசன் தான் அவரது முன்னாள் மனைவி பிரெண்டா பேஜை கொலை செய்தார் என நிரூபிக்கப்பட்டது. அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரிவிட்டது. சிறையில் அடைக்கப்பட்ட ஹாரிசன், 20 ஆண்டுகளுக்குப் பிறகு தான் பரோலுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்த வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி காலண்டர், வழக்கு குறித்து பிபிசியிடம் பேசினார். அப்போது அவர், ஹாரிசன் அவரது முன்னாள் மனைவி பிரெண்டா பேஜ் கொலை வழக்கில் 45 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என எதிர்பார்க்கவில்லை.

“அவரத அதீத புத்திசாலித்தனமே அவர் வீழ்ச்சிக்கு காரணம் என்று நினைக்கிறேன். ஏனென்றால், 45 ஆண்டுகளுக்குப் பிறகு அவரை கைது செய்வார்கள் என அவர் நினைக்கவில்லை,”என்றார் காலண்டர்.

மேலும், வழக்கு விசாரணையின்போது, அவரே குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், அவரே வழக்கில் சிக்கிக்கொண்டதாகவும் காலண்டர் பிபிசியிடம் கூறினார்.

"வீடியோ கேமராக்களுக்கு முன்னால் போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய விதத்தை நீங்கள் பார்த்தால், அவரே குற்றத்தை ஒப்புக்கொள்வது உங்களுக்கு புரியும். அவரேதான் இந்த வழக்கில் சிக்கினார்,”என்றார்.

தான் எல்லோரையும் விட புத்திசாலி என்றும், வழக்கில் இருந்து எளிதில் தப்பிக்க முடியும் என்றும் அவர் தன்னை நம்பியிருந்ததாக காலண்டர் கூறினார்.

 
ஹாரிசன்
படக்குறிப்பு,

திருமணம் நடந்த மூன்று ஆண்டுகளில் தனது மனைவியை விவாகரத்து செய்த ஹாரிசன், விவாகரத்து நடந்த ஒரே ஆண்டில் அவரை கொலையும் செய்துள்ளார்.

ஹாரிசன் மற்றும் பிரெண்டாவின் வாழ்க்கை

ஹாரிசன் மற்றும் பிரெண்டா பேஜ், 1972 இல் திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும், தனது திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இல்லை என்று பிரெண்டா தனது நெருங்கிய நண்பர்களிடம் கூறி வந்தார். தன்னுடைய கணவனைக் கண்டால், பயமாக இருப்பதாகவும் சொல்லிக்கொண்டே இருந்துள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் பிரிந்தனர். பிரெண்டா பேஜ், அடுக்குமாடி குடியிருப்பில் சொந்தமாக ஒரு வீடு வாங்கினார்.

விவாகரத்துக்குப் பிறகும் ஹாரிசன், பிரெண்டாவை தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்ததாக பிரெண்டா பேஜின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். அவர் மற்ற ஆண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக ஹாரிசன் சந்தேகிப்பதாக பிரெண்டா தங்களிடம் கூறியதாக பிரெண்டாவின் குடும்ப உறுப்பினர்கள் கூறினர்.

பிரெண்டாவின் 59 வயதான மருமகன் கிறிஸ் லிங், வழக்கு விசாரணையின்போது, தினமும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

"நீதிமன்றத்திற்கு வருவது மிகவும் விசித்திரமான உணர்வு. எனது அத்தையைக் கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் பல ஆண்டுகளாக எங்களுடனே இருந்தார். அவர் எங்கள் கண் முன்னே தான் இருந்தார்," என லிங் பிபிசியிடம் கூறினார்.

டிஎன்ஏ தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் காரணமாக, குற்றம் சாட்டப்பட்டவர்களை தற்போது அடையாளம் காண முடிந்ததற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்த வழக்கின் விசாரணைக்காக, 40 ஆண்டுகளில் 4 ஆயிரம் சாட்சிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மூன்று ஆயிரம் பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. வழக்கு விசாரணைக்கு பிறகு சுமார் 500 வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.

https://www.bbc.com/tamil/articles/cq57pn33q4xo

2024-25ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்

1 month 1 week ago
தமிழ்நாடு பட்ஜெட்: கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் உள்பட 10 முக்கிய அம்சங்கள்
தமிழ்நாடு பட்ஜெட்

பட மூலாதாரம்,TN GOVT

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 19 பிப்ரவரி 2024, 09:46 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தமிழ்நாடு அரசின் 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவால் தாக்கல் செய்யப்பட்டது. தி.மு.க. அரசின் இதற்கு முந்தைய 3 நிதி நிலை அறிக்கைகளை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த நிதிநிலை அறிக்கையை தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த முதல் நிதி நிலை அறிக்கை இது.

இந்த நிதிநிலை அறிக்கையை காலை பத்து மணியளவில் தாக்கல் செய்தார் தங்கம் தென்னரசு. அறிக்கையின் துவக்கப் பகுதியில், இதற்கு முன்பாக இருந்த அரசுகள் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்களை நிதியமைச்சர் பட்டியலிட்டார்.

நிதி நெருக்கடி, இயற்கைப் பேரிடர், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படும் மத்திய அரசு ஆகியவற்றுக்கு நடுவில் இந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதாக நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சமூக நீதி, கடைக்கோடி தமிழர் நலன், உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், மகளிர் நலன்காக்கும் சமத்துவப் பாதை, பசுமை வழிப் பயணம், தாய்த்தமிழும் பண்பாடும் ஆகிய ஏழு அம்சங்களை மனதில் வைத்து இந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தமிழ்நாடு பட்ஜெட்டின் முக்கிய 10 அம்சங்கள்
  • உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம் பெண்களின் உயர்கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால் இத்திட்டத்தை விரிவுப்படுத்துவதாக அரசு அறிவித்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திட , தமிழ் புதல்வன் என்ற திட்டம் செயல்படுத்தப்படும். ஆறு முதல் 12 வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்படும். இதில் 3,00,000 மாணவர்கள் பயனடையாவர்கள். இதற்கு ரூ. 360 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழே வசிப்பவர்களின் விகிதம் 2.2 சதவீதமாக உள்ளது. மிகவும் வறிய நிலையில் உள்ள ஐந்து லட்சம் குடும்பங்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை ஒருங்கிணைந்து வழங்கி, அவர்கள் வறுமையிலிருந்து மீட்டெடுக்கப்படுவார்கள். முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் என இது அழைக்கப்படும்.
  • காலை உணவுத் திட்டம் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-5ஆம் வகுப்புவரை விரிவுபடுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்திற்காக இந்த ஆண்டு 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்காக இந்த ஆண்டு 13,720 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். பெண்களின் இலவசப் பயணத் திட்டத்திற்காக இந்த ஆண்டு ரூ. 3,050 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மகளிர் இலவச பேருந்து திட்டம் மலைப்பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
  • இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் 25 இந்திய, உலக மொழிகளில் மொழிபெயர்க்க 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு. உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ்நூல்களை உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் இடம்பெறச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதற்கு இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
 
தமிழ்நாடு பட்ஜெட்

பட மூலாதாரம்,TN GOVT

6. 2030ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்க்ரீட் வீடுகள் கட்டித்தரப்படும். 24-25 ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும். சொந்த மனைகள் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை ஒதுக்கீடு செய்யப்படும். கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

7. உயர்கல்வியை தொடர விரும்பும் மூன்றாம் பாலினத்தவரின் கல்விக்கட்டணம் மற்றும் விடுதி கட்டணத்தை அரசே ஏற்கும். வரும் நிதியாண்டில் இந்த திட்டத்துக்கு 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

8. மதுரையில் 26,500 சதுர அடி பரப்பளவில் தொழில் புத்தாக்க மையம் 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். மதுரை, திருச்சியில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தஞ்சாவூர், சேலம், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் புதிய தொழிற்பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கோவை விளாங்குறிச்சியில் 1,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20,00,000 சதுர அடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா (ஐ.டி. பார்க்) அமைக்கப்படும்.

9. 2024-25ல் கீழடி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை, திருமலாபுரம், சென்னானூர் உள்ளிடட் எட்டு இடங்களில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படும். மஸ்தி, பாலூர், முசிறி உள்ளிட்ட பகுதிகளிலும் அகழாய்வு மேற்கொள்ளப்படும். இந்த அகழாய்வுப் பணிகளுக்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கீழடி அகழாய்வு பணிகளில் வெளிவந்த செங்கல்கட்டுமானம், கிணறு, பிற கட்டுமானங்களை அனைவரும் பார்க்கும் வகையில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும். இதற்காக 17 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

10. கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களைத் தொடங்குவதற்கான விரிவான அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் துவங்கப்படும். சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயிலை நீடிக்க திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்படும். சென்னை பூந்தமல்லி முதல் கோடம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடம் அடுத்த ஆண்டு டிசம்பரில் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்.

 
தமிழ்நாடு பட்ஜெட்

பட மூலாதாரம்,TN GOVT

இவை தவிர இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில் தமிழ் மொழி மற்றும் தமிழர் மரபு சார்ந்த முக்கிய அம்சங்கள் :

தமிழின் அரிய நூல்களை மின்நூலாக மாற்றும் பணிக்கு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழர்களின் மரபணுத் தொன்மை, வேளாண்மை, இடப்பெயர்வு ஆகியவற்றை ஆய்ந்தறிய காமராசர் பல்கலைக்கழகத்தில் செயல்படும் மரபியல் துறையில் தொல்மரபணுவியல் ஆய்வகத்திற்கு 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். சிந்துவெளி நூற்றாண்டு பன்னாட்டு கருத்தரங்கம் சென்னையில் நடத்தப்படும்.

சென்னை நகருக்கான சில புதிய கட்டமைப்பு திட்டங்களும் இந்த நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை தீவுத்திடலில் நகர்ப்புற பொதுச் சதுக்கம் உருவாக்கப்படும். இங்கே திறந்தவெளி அரங்குகள், கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படும். கடற்கரையோரப் பகுதிகளை ஒட்டிய சாலைகள் மேம்படுத்தப்படும். சென்னை பூந்தமல்லிக்கு அருகில் அதிநவீன திரைப்பட நகரம் 150 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும். 500 கோடி ரூபாய் செலவில் இந்த நகரம் உருவாக்கப்படும். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிரில் மரபுசார் வடிவமைப்புடன் பத்து லட்சம் சதுர அடி பரப்பில் புதிய கட்டடம் கட்டப்படும். பிராட்வே பேருந்து நிலையத்தில் பன்முக வசதிகள் கொண்ட புதிய பேருந்து நிலையமும் அலுவலக வளாகமும் உருவாக்கப்படும்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு 20,198 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். புதிய புற்றுநோய் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும். அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை உயர்நிலை புற்றுநோய் கருவிகள் வழங்கப்பட்டு உயர்திறன் மையமாக தரம் உயர்த்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், காவிரி, வைகை, தாமிரபரணி, நொய்யல் ஆகிய நதிகளை ஒட்டிய பகுதிகளைச் சீரமைக்கவும் பூங்காக்கள் அமைக்கவும் நதிகள் சீரமைப்புக்கான திட்ட அறிக்கையைத் தயாரிக்க ஐந்து கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

கல்வியில் தமிழ் புதல்வன் திட்டம் மட்டுமல்லாமல் வேறு சில அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. புதுமைப் பெண் திட்டத்தால் உயர்கல்வி சேரும் மாணவிகள் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தத் திட்டம் வரும் கல்வி ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் தமிழ்வழியில் படிக்கும் மாணவிகளுக்கும் வழங்கப்படும். 370 கோடி ரூபாய் இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கோவையில் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி பெயரில் மிகப் பெரிய நூலகம் அமைக்கப்படும்.

 
தமிழ்நாடு பட்ஜெட்

பட மூலாதாரம்,TN GOVT

மேலும் தொழில்துறை சார்ந்து இந்த நிதிநிலை அறிக்கையில் வெளிவந்துள்ள அறிவிப்புகள்:

தஞ்சை மண்டலத்தில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க ரூ. 120 கோடி செலவில் 300 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.

பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவருக்கு 500 பேருக்கு மேல் நேரடி வேலை வாய்ப்பு வழங்கும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அவர்களின் ஊதியத்தில் 10 சதவீதத்தை இரண்டு ஆண்டுகளுக்கு அரசு வழங்கும்.

தமிழ்நாட்டில் அமையும் புதிய உலகளாவிய திறன் மேம்பாட்டு மையங்களில் ஒரு லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட மாத ஊதியத்துடன் உருவாக்கப்படும் உயர்திறன் மிக்க வேலைகளுக்கு முதலாம் ஆண்டு 30 சதவீதமும் இரண்டாம் ஆண்டு 20 சதவீதமும் மூன்றாம் ஆண்டு 10 சதவீதமும் மானியமாக வழங்கப்படும்.

உலகின் முன்னணி புத்தொழில் நிறுவனங்களும் இளம் தொழில் முனைவோரும் கலந்துகொள்ளும் வகையில் Global Startup Summit 2025 ஜனவரியில் சென்னையில் நடத்தப்படும். பெரியார் சமூக நீதி புத்தொழில் மையம் - Periyar Social Justice Venture Lab - உருவாக்கப்படும். விளிம்புநிலையில் வாழும் மக்கள், பட்டியலின, பழங்குடியினரால் தொடங்கி நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு இந்த மையம் முன்னுரிமை அளிக்கும்.

விண்வெளி சார்ந்த தொழிற்சாலைகளை ஊக்குவிக்கும் விதமாக 2,000 ஏக்கர் பரப்பளவில் ஒரு புதிய விண்வெளி தொழில் மற்றும் உந்துசக்தி பூங்காவை டிட்கோ அமைக்கும். தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு குறித்த கொள்கையை வகுக்க தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் ஏற்படுத்தப்படும்.

 

இவை மட்டுமல்லாமல், இந்த நிதிநிலை அறிக்கையின் வேறு சில முக்கிய அம்சங்களும் உள்ளன.

2030ஆம் ஆண்டிற்குள் 100 பில்லியன் யூனிட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உருவாக்க திட்டம் வகுக்கப்படும்.

லண்டன் க்யூ கார்டன் நிறுவனத்தின் உதவியோடு 345 கோடி ரூபாய் செலவில் செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் மாபெரும் பல்லுயிர் பூங்கா அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

இந்த நிதியாண்டில் புதிதாக 3,000 பேருந்துகள் வாங்கப்படும். சிற்றுந்துத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

தொல்குடி என்ற புதிய திட்டத்தின் கீழ் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். பழங்குடியின இளைஞர்களுக்கு தொழில்பயிற்சிகள் அளிக்கப்படும்.

பள்ளிவாசல், தர்காக்களை சீரமைக்க, பழுதுபார்க்க பத்து கோடி ரூபாய் நிதியுதவி செய்யப்படும். பழமையான தேவாலயங்கள் புதுப்பிக்கப்படும்.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோவில்களில் திருப்பணிகள் செய்திட இந்த ஆண்டு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தெரு நாய்கள் பெருகியிருப்பதால், அவற்றின் இனப்பெருக்கத்தைத் தடைசெய்யும் மையங்களை உருவாக்க 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சர்வதேச கண்காட்சிகள், மாநாட்டுக் கூட்டங்கள் நடத்திடும் வகையில், கலைஞர் மாநாட்டு அரங்கம் (Kalaignar Convention Centre) கிழக்கு கடற்கரைச் சாலையில் முட்டுக்காடு பகுதியில் மூன்று லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படும்.

இலங்கைத் தமிழர்களுக்கு என அறிவிக்கப்பட்ட 3,510 வீடுகளில் 1,591 வீடுகளுக்கான பணிகள் முடிவடைந்துள்ளன.

 

இந்த அறிவிப்புகள் தவிர, மாநில நிதிநிலை குறித்த சில தகவல்களையும் நிதியமைச்சர் வெளியிட்டார்.

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் இருப்பதால் முழுச் செலவையும் மாநில அரசே செய்கிறது. இதனால், 9,000 கோடி ரூபாய் கூடுதலாக செலவு ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி இழப்பீடு நிறுத்தப்பட்டுள்ளதால், 20,000 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு இரண்டு மிகப் பெரிய இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்தபோதும் மத்திய அரசு எவ்வித நிவாரண நிதியையும் தரவில்லை.

2023-24ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை மதிப்பீடு 3,08,056 கோடி ரூபாயாக இருந்தது. திருத்த மதிப்பீட்டில் 3,37,484 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 1,81,182 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட மாநிலத்தின் வரி வருவாய் திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் 1,70,147 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

2023-24 ஆம் ஆண்டிற்காண பட்ஜெட்டில் 37,540 கோடி ரூபாயாக இருந்த வருவாய் பற்றாக்குறை திருத்த மதிப்பீடுகளில் 44,907 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. நிதி பற்றாக்குறையைப் பொறுத்தவரை 92,075 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் நிதிப் பற்றாக்குறை 94,060 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனத்தின் வருவாய் பற்றாக்குறை 36,017 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. ஆனால், திருத்தப்பட்ட மதிப்பீட்டில் அது 27,790 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை 1,08,690 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.44 சதவீதமாக இருக்கும்.

தமிழ்நாட்டின் வேளாண் நிதி நிலை அறிக்கை பிப்ரவரி 20ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.

https://www.bbc.com/tamil/articles/ce4epq0v3p5o

2024-25ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்

1 month 1 week ago
தமிழ்நாடு பட்ஜெட்: கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் உள்பட 10 முக்கிய அம்சங்கள் பட மூலாதாரம்,TN GOVT கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 19 பிப்ரவரி 2024, 09:46 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாடு அரசின் 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவால் தாக்கல் செய்யப்பட்டது. தி.மு.க. அரசின் இதற்கு முந்தைய 3 நிதி நிலை அறிக்கைகளை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த நிதிநிலை அறிக்கையை தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த முதல் நிதி நிலை அறிக்கை இது. இந்த நிதிநிலை அறிக்கையை காலை பத்து மணியளவில் தாக்கல் செய்தார் தங்கம் தென்னரசு. அறிக்கையின் துவக்கப் பகுதியில், இதற்கு முன்பாக இருந்த அரசுகள் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்களை நிதியமைச்சர் பட்டியலிட்டார். நிதி நெருக்கடி, இயற்கைப் பேரிடர், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படும் மத்திய அரசு ஆகியவற்றுக்கு நடுவில் இந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதாக நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. சமூக நீதி, கடைக்கோடி தமிழர் நலன், உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், மகளிர் நலன்காக்கும் சமத்துவப் பாதை, பசுமை வழிப் பயணம், தாய்த்தமிழும் பண்பாடும் ஆகிய ஏழு அம்சங்களை மனதில் வைத்து இந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு பட்ஜெட்டின் முக்கிய 10 அம்சங்கள் உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம் பெண்களின் உயர்கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால் இத்திட்டத்தை விரிவுப்படுத்துவதாக அரசு அறிவித்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திட , தமிழ் புதல்வன் என்ற திட்டம் செயல்படுத்தப்படும். ஆறு முதல் 12 வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்படும். இதில் 3,00,000 மாணவர்கள் பயனடையாவர்கள். இதற்கு ரூ. 360 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழே வசிப்பவர்களின் விகிதம் 2.2 சதவீதமாக உள்ளது. மிகவும் வறிய நிலையில் உள்ள ஐந்து லட்சம் குடும்பங்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை ஒருங்கிணைந்து வழங்கி, அவர்கள் வறுமையிலிருந்து மீட்டெடுக்கப்படுவார்கள். முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் என இது அழைக்கப்படும். காலை உணவுத் திட்டம் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-5ஆம் வகுப்புவரை விரிவுபடுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்திற்காக இந்த ஆண்டு 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்காக இந்த ஆண்டு 13,720 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். பெண்களின் இலவசப் பயணத் திட்டத்திற்காக இந்த ஆண்டு ரூ. 3,050 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மகளிர் இலவச பேருந்து திட்டம் மலைப்பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் 25 இந்திய, உலக மொழிகளில் மொழிபெயர்க்க 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு. உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ்நூல்களை உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் இடம்பெறச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதற்கு இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். பட மூலாதாரம்,TN GOVT 6. 2030ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்க்ரீட் வீடுகள் கட்டித்தரப்படும். 24-25 ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும். சொந்த மனைகள் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை ஒதுக்கீடு செய்யப்படும். கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். 7. உயர்கல்வியை தொடர விரும்பும் மூன்றாம் பாலினத்தவரின் கல்விக்கட்டணம் மற்றும் விடுதி கட்டணத்தை அரசே ஏற்கும். வரும் நிதியாண்டில் இந்த திட்டத்துக்கு 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 8. மதுரையில் 26,500 சதுர அடி பரப்பளவில் தொழில் புத்தாக்க மையம் 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். மதுரை, திருச்சியில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தஞ்சாவூர், சேலம், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் புதிய தொழிற்பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கோவை விளாங்குறிச்சியில் 1,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20,00,000 சதுர அடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா (ஐ.டி. பார்க்) அமைக்கப்படும். 9. 2024-25ல் கீழடி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை, திருமலாபுரம், சென்னானூர் உள்ளிடட் எட்டு இடங்களில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படும். மஸ்தி, பாலூர், முசிறி உள்ளிட்ட பகுதிகளிலும் அகழாய்வு மேற்கொள்ளப்படும். இந்த அகழாய்வுப் பணிகளுக்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கீழடி அகழாய்வு பணிகளில் வெளிவந்த செங்கல்கட்டுமானம், கிணறு, பிற கட்டுமானங்களை அனைவரும் பார்க்கும் வகையில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும். இதற்காக 17 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். 10. கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களைத் தொடங்குவதற்கான விரிவான அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் துவங்கப்படும். சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயிலை நீடிக்க திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்படும். சென்னை பூந்தமல்லி முதல் கோடம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடம் அடுத்த ஆண்டு டிசம்பரில் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும். பட மூலாதாரம்,TN GOVT இவை தவிர இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில் தமிழ் மொழி மற்றும் தமிழர் மரபு சார்ந்த முக்கிய அம்சங்கள் : தமிழின் அரிய நூல்களை மின்நூலாக மாற்றும் பணிக்கு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழர்களின் மரபணுத் தொன்மை, வேளாண்மை, இடப்பெயர்வு ஆகியவற்றை ஆய்ந்தறிய காமராசர் பல்கலைக்கழகத்தில் செயல்படும் மரபியல் துறையில் தொல்மரபணுவியல் ஆய்வகத்திற்கு 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். சிந்துவெளி நூற்றாண்டு பன்னாட்டு கருத்தரங்கம் சென்னையில் நடத்தப்படும். சென்னை நகருக்கான சில புதிய கட்டமைப்பு திட்டங்களும் இந்த நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை தீவுத்திடலில் நகர்ப்புற பொதுச் சதுக்கம் உருவாக்கப்படும். இங்கே திறந்தவெளி அரங்குகள், கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படும். கடற்கரையோரப் பகுதிகளை ஒட்டிய சாலைகள் மேம்படுத்தப்படும். சென்னை பூந்தமல்லிக்கு அருகில் அதிநவீன திரைப்பட நகரம் 150 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும். 500 கோடி ரூபாய் செலவில் இந்த நகரம் உருவாக்கப்படும். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிரில் மரபுசார் வடிவமைப்புடன் பத்து லட்சம் சதுர அடி பரப்பில் புதிய கட்டடம் கட்டப்படும். பிராட்வே பேருந்து நிலையத்தில் பன்முக வசதிகள் கொண்ட புதிய பேருந்து நிலையமும் அலுவலக வளாகமும் உருவாக்கப்படும். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு 20,198 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். புதிய புற்றுநோய் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும். அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை உயர்நிலை புற்றுநோய் கருவிகள் வழங்கப்பட்டு உயர்திறன் மையமாக தரம் உயர்த்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், காவிரி, வைகை, தாமிரபரணி, நொய்யல் ஆகிய நதிகளை ஒட்டிய பகுதிகளைச் சீரமைக்கவும் பூங்காக்கள் அமைக்கவும் நதிகள் சீரமைப்புக்கான திட்ட அறிக்கையைத் தயாரிக்க ஐந்து கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கல்வியில் தமிழ் புதல்வன் திட்டம் மட்டுமல்லாமல் வேறு சில அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. புதுமைப் பெண் திட்டத்தால் உயர்கல்வி சேரும் மாணவிகள் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தத் திட்டம் வரும் கல்வி ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் தமிழ்வழியில் படிக்கும் மாணவிகளுக்கும் வழங்கப்படும். 370 கோடி ரூபாய் இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கோவையில் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி பெயரில் மிகப் பெரிய நூலகம் அமைக்கப்படும். பட மூலாதாரம்,TN GOVT மேலும் தொழில்துறை சார்ந்து இந்த நிதிநிலை அறிக்கையில் வெளிவந்துள்ள அறிவிப்புகள்: தஞ்சை மண்டலத்தில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க ரூ. 120 கோடி செலவில் 300 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும். பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவருக்கு 500 பேருக்கு மேல் நேரடி வேலை வாய்ப்பு வழங்கும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அவர்களின் ஊதியத்தில் 10 சதவீதத்தை இரண்டு ஆண்டுகளுக்கு அரசு வழங்கும். தமிழ்நாட்டில் அமையும் புதிய உலகளாவிய திறன் மேம்பாட்டு மையங்களில் ஒரு லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட மாத ஊதியத்துடன் உருவாக்கப்படும் உயர்திறன் மிக்க வேலைகளுக்கு முதலாம் ஆண்டு 30 சதவீதமும் இரண்டாம் ஆண்டு 20 சதவீதமும் மூன்றாம் ஆண்டு 10 சதவீதமும் மானியமாக வழங்கப்படும். உலகின் முன்னணி புத்தொழில் நிறுவனங்களும் இளம் தொழில் முனைவோரும் கலந்துகொள்ளும் வகையில் Global Startup Summit 2025 ஜனவரியில் சென்னையில் நடத்தப்படும். பெரியார் சமூக நீதி புத்தொழில் மையம் - Periyar Social Justice Venture Lab - உருவாக்கப்படும். விளிம்புநிலையில் வாழும் மக்கள், பட்டியலின, பழங்குடியினரால் தொடங்கி நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு இந்த மையம் முன்னுரிமை அளிக்கும். விண்வெளி சார்ந்த தொழிற்சாலைகளை ஊக்குவிக்கும் விதமாக 2,000 ஏக்கர் பரப்பளவில் ஒரு புதிய விண்வெளி தொழில் மற்றும் உந்துசக்தி பூங்காவை டிட்கோ அமைக்கும். தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு குறித்த கொள்கையை வகுக்க தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் ஏற்படுத்தப்படும். இவை மட்டுமல்லாமல், இந்த நிதிநிலை அறிக்கையின் வேறு சில முக்கிய அம்சங்களும் உள்ளன. 2030ஆம் ஆண்டிற்குள் 100 பில்லியன் யூனிட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உருவாக்க திட்டம் வகுக்கப்படும். லண்டன் க்யூ கார்டன் நிறுவனத்தின் உதவியோடு 345 கோடி ரூபாய் செலவில் செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் மாபெரும் பல்லுயிர் பூங்கா அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த நிதியாண்டில் புதிதாக 3,000 பேருந்துகள் வாங்கப்படும். சிற்றுந்துத் திட்டம் விரிவுபடுத்தப்படும். தொல்குடி என்ற புதிய திட்டத்தின் கீழ் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். பழங்குடியின இளைஞர்களுக்கு தொழில்பயிற்சிகள் அளிக்கப்படும். பள்ளிவாசல், தர்காக்களை சீரமைக்க, பழுதுபார்க்க பத்து கோடி ரூபாய் நிதியுதவி செய்யப்படும். பழமையான தேவாலயங்கள் புதுப்பிக்கப்படும். ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோவில்களில் திருப்பணிகள் செய்திட இந்த ஆண்டு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தெரு நாய்கள் பெருகியிருப்பதால், அவற்றின் இனப்பெருக்கத்தைத் தடைசெய்யும் மையங்களை உருவாக்க 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சர்வதேச கண்காட்சிகள், மாநாட்டுக் கூட்டங்கள் நடத்திடும் வகையில், கலைஞர் மாநாட்டு அரங்கம் (Kalaignar Convention Centre) கிழக்கு கடற்கரைச் சாலையில் முட்டுக்காடு பகுதியில் மூன்று லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படும். இலங்கைத் தமிழர்களுக்கு என அறிவிக்கப்பட்ட 3,510 வீடுகளில் 1,591 வீடுகளுக்கான பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த அறிவிப்புகள் தவிர, மாநில நிதிநிலை குறித்த சில தகவல்களையும் நிதியமைச்சர் வெளியிட்டார். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் இருப்பதால் முழுச் செலவையும் மாநில அரசே செய்கிறது. இதனால், 9,000 கோடி ரூபாய் கூடுதலாக செலவு ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி இழப்பீடு நிறுத்தப்பட்டுள்ளதால், 20,000 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு இரண்டு மிகப் பெரிய இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்தபோதும் மத்திய அரசு எவ்வித நிவாரண நிதியையும் தரவில்லை. 2023-24ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை மதிப்பீடு 3,08,056 கோடி ரூபாயாக இருந்தது. திருத்த மதிப்பீட்டில் 3,37,484 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 1,81,182 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட மாநிலத்தின் வரி வருவாய் திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் 1,70,147 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டிற்காண பட்ஜெட்டில் 37,540 கோடி ரூபாயாக இருந்த வருவாய் பற்றாக்குறை திருத்த மதிப்பீடுகளில் 44,907 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. நிதி பற்றாக்குறையைப் பொறுத்தவரை 92,075 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் நிதிப் பற்றாக்குறை 94,060 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனத்தின் வருவாய் பற்றாக்குறை 36,017 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. ஆனால், திருத்தப்பட்ட மதிப்பீட்டில் அது 27,790 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை 1,08,690 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.44 சதவீதமாக இருக்கும். தமிழ்நாட்டின் வேளாண் நிதி நிலை அறிக்கை பிப்ரவரி 20ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. https://www.bbc.com/tamil/articles/ce4epq0v3p5o

ரஷ்யாவுக்கு எதிராக, இங்கிலாந்துக்கு சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை நகர்த்துகிறதா அமெரிக்கா?

1 month 1 week ago
அமெரிக்கா vs ரஷ்யா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், மாட் பிரேசி
  • பதவி, பிபிசி நியூஸ், சஃபோல்க்
  • 30 நிமிடங்களுக்கு முன்னர்

இங்கிலாந்தின் சஃபோல்க்கில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்திற்கு மீண்டும் அணு ஆயுதங்களை அமெரிக்கா அனுப்பப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 15 ஆண்டுகளுக்குப் முன் சஃபோல்க் தளத்தில் இருந்து அனைத்து அணு ஆயுதங்களையும் திரும்பப் பெற்றுக் கொண்டது அமெரிக்கா.

இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட 'லிட்டில் பாய்' என்ற அணுகுண்டை விட பன்மடங்கு சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கான வசதிகள் சஃபோல்க்கின் ஆர்ஏஎப் லேகன்ஹீத் (RAF Lakenheath) தளத்தில் உருவாக்கப்பட்டு வருவதாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

அமெரிக்காவின் திட்டங்கள்
அணு ஆயுதங்களை இங்கிலாந்திற்கு அனுப்பும் அமெரிக்கா

பட மூலாதாரம்,GOOGLE EARTH

படக்குறிப்பு,

அமெரிக்க விமானப்படையால் மட்டுமே பயன்படுத்தப்படும் லேகன்ஹீத் தளம் மீண்டும் அணு ஆயுதங்களை சேமிக்க தயாராகி வருவதாக அமெரிக்க அரசாங்க ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

ஆர்ஏஎப் லேகன்ஹீத் தளத்தில் தற்போது 48வது ஃபைட்டர் விங் எனும் அமெரிக்க விமானப்படைப் பிரிவு உள்ளது. இந்தப் பிரிவு லிபர்ட்டி விங் என்றும் அழைக்கப்படுகிறது. F-35A லைட்னிங் II எனும் அதிநவீன போர் விமானங்கள் இங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

ஐக்கிய அமெரிக்க விமானப்படை (United States Air Force- யுஎஸ்ஏஎப்) அறிக்கைப்படி, போர்க்களத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, குறுகிய தூர இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட ஆயுதமான B61-12 தெர்மோநியூக்ளியர் குண்டை இந்த போர் விமானங்கள் மூலம் எடுத்துச் செல்ல வெற்றிகரமாக சோதனைகள் செய்யப்பட்டன.

ஆர்ஏஎப் லேகன்ஹீத்தின் 'எதிர்கால அணுசக்தி திட்டத்திற்கு' தேவையான பாதுகாப்பான தங்குமிடங்களை கட்டுவதற்கான ஒப்பந்தம் குறித்து விவரிக்கும் ஆவணங்கள் அமெரிக்க பாதுகாப்புத் துறையால் வெளியிடப்பட்டன. பின்னர் அவை திரும்பப் பெறப்பட்டன .

இந்த விமானப்படைத் தளத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்களுக்கான தங்குமிடங்கள் கட்டுவதற்கான ஒப்பந்தங்கள் அவை.

கூடுதலாக, அமெரிக்க இராணுவத் துறை பட்ஜெட் ஆவணத்தின்படி , இந்த சஃபோல்க் தளத்தின் அடித்தளத்தில் 'ஷுரிட்டி டார்மிட்டரி' (surety dormitory) எனப்படும் வசதியை உருவாக்க லட்சக்கணக்கான டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது. இவை அணு ஆயுதங்களுக்கான சேமிப்பு வசதிகள் என கூறப்படுகிறது.

ஆர்ஏஎப் தளம் 1941இல் லேகன்ஹீத்தில் திறக்கப்பட்டு, இரண்டாம் உலகப் போரின் போது செயல்பட்டது.

நேட்டோவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையிலான பனிப்போர் தீவிரமடைந்ததால், அமெரிக்க விமானப்படை 1951இல் தளத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டது .

தளத்தில் 4,000 அமெரிக்க இராணுவ வீரர்களும் மேலும் 1,500 பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க சிவிலியன் ஊழியர்களும் உள்ளனர்.

ஆயுதங்கள் சஃபோல்க்கிற்கு கொண்டு வரப்படுமா?
அணு ஆயுதங்களை இங்கிலாந்திற்கு அனுப்பும் அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பேராசிரியர் சர் லாரன்ஸ் ஃப்ரீட்மேன்

லண்டன் கிங்ஸ் கல்லூரியின் போர் ஆய்வுகள் துறையின் பேராசிரியரான சர் லாரன்ஸ் ஃப்ரீட்மேன், "இந்த திட்டங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக இருக்கலாம்" என கூறினார்.

"ஒருவேளை ஐரோப்பாவில் உள்ள தளங்களில் இருந்து மற்ற ஆயுதங்கள் அகற்றப்பட்டால், தங்குமிடங்கள் கூடுதல் திறன் கொண்டதாக இருக்கலாம்" என்கிறார் அவர்.

"சேமிப்பு வசதியை உருவாக்குவது ஒரு விஷயம் என்றால், அமெரிக்க ஆயுதங்கள் பிரிட்டனில் இருக்கப் போகிறது என்ற உண்மையை மறைப்பது மற்றொரு விஷயம். எனவே இந்த நடவடிக்கை என்பது நாடுகளுக்கிடையேயான ஆயுதப் போட்டியில் ஏதோ ஒரு பெரிய மாற்றமாக இல்லாமல், ஒரு சாதாரணமான நடவடிக்கையாகவும் கூட இருக்கலாம்" என அவர் கூறினார்.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் அணு ஆயுதங்கள் இருப்பதை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ கூடாது என்ற கொள்கையை நீண்ட காலமாக இங்கிலாந்து மற்றும் நேட்டோ கடைபிடித்து வருகிறது.

 
ரஷ்யாவுக்கு பதிலடியாக அமெரிக்கா நடவடிக்கையா?
அணு ஆயுதங்களை இங்கிலாந்திற்கு அனுப்பும் அமெரிக்கா

பட மூலாதாரம்,USAF

படக்குறிப்பு,

B61-12 தெர்மோநியூக்ளியர் வெடிகுண்டு மிசோரியில் உள்ள வைட்மேன் விமானப்படை தளத்தின் விமானத்தில் ஏற்றப்படுகிறது

அமெரிக்கா vs ரஷ்யா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் F-35A லைட்னிங் II எனும் அதிநவீன விமானம்

"இந்த திட்டங்கள் யுக்ரேனில் நிலவும் சூழ்நிலையுடன் தொடர்புடையவை என்று நான் நினைக்கவில்லை" என்கிறார் சர் லாரன்ஸ்.

"ரஷ்யாவுடன் அதிகரித்து வரும் பதற்றத்தின் காரணமாக இது இருக்கலாம்," என்று அவர் கூறினார்.

ஆனால் நேட்டோவின் முன்னாள் மூத்த அதிகாரியான வில்லியம் அல்பர்கி கூறுகையில், "ரஷ்யாவின் நடவடிக்கைகளால் ஐரோப்பா முழுவதும் அதிகரித்து வரும் ஆபத்தான அச்சுறுத்தல் சூழலுக்கு இது ஒரு பதிலடி" என்கிறார். இவர் இப்போது சர்வதேச மூலோபாய ஆய்வுகள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

பெலாரஸில் ரஷ்ய அணுசக்தி படைகள் நிலைநிறுத்தப்பட்டது, உக்ரைன் மீதான படையெடுப்பு மற்றும் விளாடிமிர் புதின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அச்சுறுத்தல்கள் பெருமளவில் அதிகரித்தது போன்றவற்றை அவர் மேற்கோள் காட்டினார்.

அணு ஆயுதங்களை இங்கிலாந்திற்கு அனுப்பும் அமெரிக்கா

பட மூலாதாரம்,WILLIAM ALBERQUE

படக்குறிப்பு,

முன்னாள் மூத்த நேட்டோ அதிகாரி வில்லியம் அல்பர்கியின் கூற்றுப்படி, ஆர்ஏஎப் லேகன்ஹீத் தளம் ஏற்கனவே ரஷ்ய இலக்காக மாறிவுள்ளது

'இந்த தளம் ரஷ்யாவின் இலக்காக மாறும்'
அணு ஆயுதங்களை இங்கிலாந்திற்கு அனுப்பும் அமெரிக்கா

பட மூலாதாரம்,HANS KRISTENSEN

படக்குறிப்பு,

அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த ஹான்ஸ் கிறிஸ்டென்சன் ஆர்ஏஎப் லேகன்ஹீத் தளத்திற்கான அமெரிக்க பாதுகாப்புத் துறையின் திட்டங்களைக் கண்காணித்து வருகிறார்.

அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டமைப்பைச் சேர்ந்தவர் ஹான்ஸ் கிறிஸ்டென்சன். அணு ஆயுதங்கள் ஆர்ஏஎப் லேகன்ஹீத் தளத்திற்கு மீண்டும் கொண்டு வரப்படுவதற்கான சாத்தியங்கள் குறித்து குரல் எழுப்பிய முதல் நபர்களில் இவரும ஒருவர்.

"ஒரு தளத்தில் அணு ஆயுதங்கள் இருந்தால், அந்த தளம் ரஷ்யாவுடனான அணுசக்தி மோதலில் இலக்காகக் கூடும் என்பதில் சந்தேகமில்லை" என்று அவர் கூறினார்.

"ஒரு நாடு அணு ஆயுதங்களை வைத்திருந்தால், பின் அது ஒரு வித்தியாசமான போர் விளையாட்டாக மாறும் என்பதில் சந்தேகமில்லை" என்றும் கிறிஸ்டென்சன் கூறுகிறார்.

ஆனால், "இந்த தளம் இப்போதே ரஷ்யாவின் இலக்காக மாறியிருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன" என்று அல்பர்கி கூறினார்.

"நான் ஒரு ரஷ்ய இராணுவத்தைச் சேர்ந்த திட்டமிடும் நிபுணராக இருந்தால், இந்த தளத்தை தாக்க முன்பே முடிவு செய்திருப்பேன். நீங்கள் ரஷ்ய தொலைக்காட்சிகளைப் பார்த்தால், இங்கிலாந்தைப் பற்றியும் இங்கிலாந்தைத் தாக்குவது பற்றியும் அதிகம் பேசுகிறார்கள்" என்கிறார் அவர்.

இங்கிலாந்திற்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அங்கீகாரம் அளிப்பார் என்று அல்பர்கி நம்புகிறார்.

மேலும், "அவர் திறமையானவர் என்று சொல்வது மிகையாக இருக்கும். பிரச்னைக்கான தீர்வு இல்லை என்றோ அல்லது பின்விளைவுகள் வராது என நினைத்தாலோ, அவர் இதைச் செய்வார் என்று நினைக்கிறேன்" என்று கூறினார்.

 
அடுத்து என்ன நடக்கும்?
அணு ஆயுதங்களை இங்கிலாந்திற்கு அனுப்பும் அமெரிக்கா

பட மூலாதாரம்,JOHN FAIRHALL/BBC

படக்குறிப்பு,

அணு ஆயுதக் குறைப்புக்கான பிரசார அமைப்பைச் சேர்ந்த கேட் ஹட்சன், சஃபோல்க்கில் அணு ஆயுதங்கள் நிலை நிறுத்தப்படக்கூடாது என விரும்புகிறார்

அணு ஆயுதக் குறைப்புக்கான பிரசார அமைப்பு (Campaign for Nuclear Disarmament- சிஎன்டி) ஆர்ஏஎப் லேகன்ஹீத் தளத்திற்கு வெளியே போராட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்தது.

சிஎன்டி பொதுச் செயலாளர் கேட் ஹட்சன் பேசுகையில், "இங்கே அணு ஆயுதங்கள் கொண்டு வரப்பட்டால், நாங்கள் அதை அகற்ற வலியுறுத்துவோம்." என்றார்.

'ஷுரிட்டி டார்மிட்டரி' தங்குமிடத்தை கட்டுவது சட்டப்பூர்வமானதா என்பதை ஆராய சட்ட நிறுவனமான லீ டேக்கு (Leigh Day) இந்த அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

வழக்கறிஞர் ரிக்கார்டோ காமா இதுகுறித்து பேசுகையில், "லேகன்ஹீத் தளத்தில் அணுகுண்டுகளை சேமிப்பது குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் விளைவுகளை ஏற்படுத்தாது என்று இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது. ஆனால், அந்த முடிவை எடுப்பதற்கு முன்னர் விமானப்படை தளத்தில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவதன் சாத்தியமான சுற்றுச்சூழல் விளைவுகளை அவர்கள் புறக்கணித்ததாக வாதிடுகின்றனர் சிஎன்டி அமைப்பினர். அணுசக்தி விபத்து ஏற்படுவதற்கான சாத்தியம் உட்பட" என்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/cw540x9nkl5o

ரஷ்யாவுக்கு எதிராக, இங்கிலாந்துக்கு சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை நகர்த்துகிறதா அமெரிக்கா?

1 month 1 week ago
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மாட் பிரேசி பதவி, பிபிசி நியூஸ், சஃபோல்க் 30 நிமிடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தின் சஃபோல்க்கில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்திற்கு மீண்டும் அணு ஆயுதங்களை அமெரிக்கா அனுப்பப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 15 ஆண்டுகளுக்குப் முன் சஃபோல்க் தளத்தில் இருந்து அனைத்து அணு ஆயுதங்களையும் திரும்பப் பெற்றுக் கொண்டது அமெரிக்கா. இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட 'லிட்டில் பாய்' என்ற அணுகுண்டை விட பன்மடங்கு சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கான வசதிகள் சஃபோல்க்கின் ஆர்ஏஎப் லேகன்ஹீத் (RAF Lakenheath) தளத்தில் உருவாக்கப்பட்டு வருவதாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. அமெரிக்காவின் திட்டங்கள் பட மூலாதாரம்,GOOGLE EARTH படக்குறிப்பு, அமெரிக்க விமானப்படையால் மட்டுமே பயன்படுத்தப்படும் லேகன்ஹீத் தளம் மீண்டும் அணு ஆயுதங்களை சேமிக்க தயாராகி வருவதாக அமெரிக்க அரசாங்க ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. ஆர்ஏஎப் லேகன்ஹீத் தளத்தில் தற்போது 48வது ஃபைட்டர் விங் எனும் அமெரிக்க விமானப்படைப் பிரிவு உள்ளது. இந்தப் பிரிவு லிபர்ட்டி விங் என்றும் அழைக்கப்படுகிறது. F-35A லைட்னிங் II எனும் அதிநவீன போர் விமானங்கள் இங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளன. ஐக்கிய அமெரிக்க விமானப்படை (United States Air Force- யுஎஸ்ஏஎப்) அறிக்கைப்படி, போர்க்களத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, குறுகிய தூர இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட ஆயுதமான B61-12 தெர்மோநியூக்ளியர் குண்டை இந்த போர் விமானங்கள் மூலம் எடுத்துச் செல்ல வெற்றிகரமாக சோதனைகள் செய்யப்பட்டன. ஆர்ஏஎப் லேகன்ஹீத்தின் 'எதிர்கால அணுசக்தி திட்டத்திற்கு' தேவையான பாதுகாப்பான தங்குமிடங்களை கட்டுவதற்கான ஒப்பந்தம் குறித்து விவரிக்கும் ஆவணங்கள் அமெரிக்க பாதுகாப்புத் துறையால் வெளியிடப்பட்டன. பின்னர் அவை திரும்பப் பெறப்பட்டன . இந்த விமானப்படைத் தளத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்களுக்கான தங்குமிடங்கள் கட்டுவதற்கான ஒப்பந்தங்கள் அவை. கூடுதலாக, அமெரிக்க இராணுவத் துறை பட்ஜெட் ஆவணத்தின்படி , இந்த சஃபோல்க் தளத்தின் அடித்தளத்தில் 'ஷுரிட்டி டார்மிட்டரி' (surety dormitory) எனப்படும் வசதியை உருவாக்க லட்சக்கணக்கான டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது. இவை அணு ஆயுதங்களுக்கான சேமிப்பு வசதிகள் என கூறப்படுகிறது. ஆர்ஏஎப் தளம் 1941இல் லேகன்ஹீத்தில் திறக்கப்பட்டு, இரண்டாம் உலகப் போரின் போது செயல்பட்டது. நேட்டோவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையிலான பனிப்போர் தீவிரமடைந்ததால், அமெரிக்க விமானப்படை 1951இல் தளத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டது . தளத்தில் 4,000 அமெரிக்க இராணுவ வீரர்களும் மேலும் 1,500 பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க சிவிலியன் ஊழியர்களும் உள்ளனர். ஆயுதங்கள் சஃபோல்க்கிற்கு கொண்டு வரப்படுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பேராசிரியர் சர் லாரன்ஸ் ஃப்ரீட்மேன் லண்டன் கிங்ஸ் கல்லூரியின் போர் ஆய்வுகள் துறையின் பேராசிரியரான சர் லாரன்ஸ் ஃப்ரீட்மேன், "இந்த திட்டங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக இருக்கலாம்" என கூறினார். "ஒருவேளை ஐரோப்பாவில் உள்ள தளங்களில் இருந்து மற்ற ஆயுதங்கள் அகற்றப்பட்டால், தங்குமிடங்கள் கூடுதல் திறன் கொண்டதாக இருக்கலாம்" என்கிறார் அவர். "சேமிப்பு வசதியை உருவாக்குவது ஒரு விஷயம் என்றால், அமெரிக்க ஆயுதங்கள் பிரிட்டனில் இருக்கப் போகிறது என்ற உண்மையை மறைப்பது மற்றொரு விஷயம். எனவே இந்த நடவடிக்கை என்பது நாடுகளுக்கிடையேயான ஆயுதப் போட்டியில் ஏதோ ஒரு பெரிய மாற்றமாக இல்லாமல், ஒரு சாதாரணமான நடவடிக்கையாகவும் கூட இருக்கலாம்" என அவர் கூறினார். ஒரு குறிப்பிட்ட இடத்தில் அணு ஆயுதங்கள் இருப்பதை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ கூடாது என்ற கொள்கையை நீண்ட காலமாக இங்கிலாந்து மற்றும் நேட்டோ கடைபிடித்து வருகிறது. ரஷ்யாவுக்கு பதிலடியாக அமெரிக்கா நடவடிக்கையா? பட மூலாதாரம்,USAF படக்குறிப்பு, B61-12 தெர்மோநியூக்ளியர் வெடிகுண்டு மிசோரியில் உள்ள வைட்மேன் விமானப்படை தளத்தின் விமானத்தில் ஏற்றப்படுகிறது பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் F-35A லைட்னிங் II எனும் அதிநவீன விமானம் "இந்த திட்டங்கள் யுக்ரேனில் நிலவும் சூழ்நிலையுடன் தொடர்புடையவை என்று நான் நினைக்கவில்லை" என்கிறார் சர் லாரன்ஸ். "ரஷ்யாவுடன் அதிகரித்து வரும் பதற்றத்தின் காரணமாக இது இருக்கலாம்," என்று அவர் கூறினார். ஆனால் நேட்டோவின் முன்னாள் மூத்த அதிகாரியான வில்லியம் அல்பர்கி கூறுகையில், "ரஷ்யாவின் நடவடிக்கைகளால் ஐரோப்பா முழுவதும் அதிகரித்து வரும் ஆபத்தான அச்சுறுத்தல் சூழலுக்கு இது ஒரு பதிலடி" என்கிறார். இவர் இப்போது சர்வதேச மூலோபாய ஆய்வுகள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பெலாரஸில் ரஷ்ய அணுசக்தி படைகள் நிலைநிறுத்தப்பட்டது, உக்ரைன் மீதான படையெடுப்பு மற்றும் விளாடிமிர் புதின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அச்சுறுத்தல்கள் பெருமளவில் அதிகரித்தது போன்றவற்றை அவர் மேற்கோள் காட்டினார். பட மூலாதாரம்,WILLIAM ALBERQUE படக்குறிப்பு, முன்னாள் மூத்த நேட்டோ அதிகாரி வில்லியம் அல்பர்கியின் கூற்றுப்படி, ஆர்ஏஎப் லேகன்ஹீத் தளம் ஏற்கனவே ரஷ்ய இலக்காக மாறிவுள்ளது 'இந்த தளம் ரஷ்யாவின் இலக்காக மாறும்' பட மூலாதாரம்,HANS KRISTENSEN படக்குறிப்பு, அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த ஹான்ஸ் கிறிஸ்டென்சன் ஆர்ஏஎப் லேகன்ஹீத் தளத்திற்கான அமெரிக்க பாதுகாப்புத் துறையின் திட்டங்களைக் கண்காணித்து வருகிறார். அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டமைப்பைச் சேர்ந்தவர் ஹான்ஸ் கிறிஸ்டென்சன். அணு ஆயுதங்கள் ஆர்ஏஎப் லேகன்ஹீத் தளத்திற்கு மீண்டும் கொண்டு வரப்படுவதற்கான சாத்தியங்கள் குறித்து குரல் எழுப்பிய முதல் நபர்களில் இவரும ஒருவர். "ஒரு தளத்தில் அணு ஆயுதங்கள் இருந்தால், அந்த தளம் ரஷ்யாவுடனான அணுசக்தி மோதலில் இலக்காகக் கூடும் என்பதில் சந்தேகமில்லை" என்று அவர் கூறினார். "ஒரு நாடு அணு ஆயுதங்களை வைத்திருந்தால், பின் அது ஒரு வித்தியாசமான போர் விளையாட்டாக மாறும் என்பதில் சந்தேகமில்லை" என்றும் கிறிஸ்டென்சன் கூறுகிறார். ஆனால், "இந்த தளம் இப்போதே ரஷ்யாவின் இலக்காக மாறியிருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன" என்று அல்பர்கி கூறினார். "நான் ஒரு ரஷ்ய இராணுவத்தைச் சேர்ந்த திட்டமிடும் நிபுணராக இருந்தால், இந்த தளத்தை தாக்க முன்பே முடிவு செய்திருப்பேன். நீங்கள் ரஷ்ய தொலைக்காட்சிகளைப் பார்த்தால், இங்கிலாந்தைப் பற்றியும் இங்கிலாந்தைத் தாக்குவது பற்றியும் அதிகம் பேசுகிறார்கள்" என்கிறார் அவர். இங்கிலாந்திற்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அங்கீகாரம் அளிப்பார் என்று அல்பர்கி நம்புகிறார். மேலும், "அவர் திறமையானவர் என்று சொல்வது மிகையாக இருக்கும். பிரச்னைக்கான தீர்வு இல்லை என்றோ அல்லது பின்விளைவுகள் வராது என நினைத்தாலோ, அவர் இதைச் செய்வார் என்று நினைக்கிறேன்" என்று கூறினார். அடுத்து என்ன நடக்கும்? பட மூலாதாரம்,JOHN FAIRHALL/BBC படக்குறிப்பு, அணு ஆயுதக் குறைப்புக்கான பிரசார அமைப்பைச் சேர்ந்த கேட் ஹட்சன், சஃபோல்க்கில் அணு ஆயுதங்கள் நிலை நிறுத்தப்படக்கூடாது என விரும்புகிறார் அணு ஆயுதக் குறைப்புக்கான பிரசார அமைப்பு (Campaign for Nuclear Disarmament- சிஎன்டி) ஆர்ஏஎப் லேகன்ஹீத் தளத்திற்கு வெளியே போராட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்தது. சிஎன்டி பொதுச் செயலாளர் கேட் ஹட்சன் பேசுகையில், "இங்கே அணு ஆயுதங்கள் கொண்டு வரப்பட்டால், நாங்கள் அதை அகற்ற வலியுறுத்துவோம்." என்றார். 'ஷுரிட்டி டார்மிட்டரி' தங்குமிடத்தை கட்டுவது சட்டப்பூர்வமானதா என்பதை ஆராய சட்ட நிறுவனமான லீ டேக்கு (Leigh Day) இந்த அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. வழக்கறிஞர் ரிக்கார்டோ காமா இதுகுறித்து பேசுகையில், "லேகன்ஹீத் தளத்தில் அணுகுண்டுகளை சேமிப்பது குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் விளைவுகளை ஏற்படுத்தாது என்று இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது. ஆனால், அந்த முடிவை எடுப்பதற்கு முன்னர் விமானப்படை தளத்தில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவதன் சாத்தியமான சுற்றுச்சூழல் விளைவுகளை அவர்கள் புறக்கணித்ததாக வாதிடுகின்றனர் சிஎன்டி அமைப்பினர். அணுசக்தி விபத்து ஏற்படுவதற்கான சாத்தியம் உட்பட" என்கிறார். https://www.bbc.com/tamil/articles/cw540x9nkl5o

ரஷ்யாவுக்கு எதிராக, இங்கிலாந்துக்கு சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை நகர்த்துகிறதா அமெரிக்கா?

1 month 1 week ago
அமெரிக்கா vs ரஷ்யா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், மாட் பிரேசி
  • பதவி, பிபிசி நியூஸ், சஃபோல்க்
  • 30 நிமிடங்களுக்கு முன்னர்

இங்கிலாந்தின் சஃபோல்க்கில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்திற்கு மீண்டும் அணு ஆயுதங்களை அமெரிக்கா அனுப்பப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 15 ஆண்டுகளுக்குப் முன் சஃபோல்க் தளத்தில் இருந்து அனைத்து அணு ஆயுதங்களையும் திரும்பப் பெற்றுக் கொண்டது அமெரிக்கா.

இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட 'லிட்டில் பாய்' என்ற அணுகுண்டை விட பன்மடங்கு சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கான வசதிகள் சஃபோல்க்கின் ஆர்ஏஎப் லேகன்ஹீத் (RAF Lakenheath) தளத்தில் உருவாக்கப்பட்டு வருவதாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

அமெரிக்காவின் திட்டங்கள்
அணு ஆயுதங்களை இங்கிலாந்திற்கு அனுப்பும் அமெரிக்கா

பட மூலாதாரம்,GOOGLE EARTH

படக்குறிப்பு,

அமெரிக்க விமானப்படையால் மட்டுமே பயன்படுத்தப்படும் லேகன்ஹீத் தளம் மீண்டும் அணு ஆயுதங்களை சேமிக்க தயாராகி வருவதாக அமெரிக்க அரசாங்க ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

ஆர்ஏஎப் லேகன்ஹீத் தளத்தில் தற்போது 48வது ஃபைட்டர் விங் எனும் அமெரிக்க விமானப்படைப் பிரிவு உள்ளது. இந்தப் பிரிவு லிபர்ட்டி விங் என்றும் அழைக்கப்படுகிறது. F-35A லைட்னிங் II எனும் அதிநவீன போர் விமானங்கள் இங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

ஐக்கிய அமெரிக்க விமானப்படை (United States Air Force- யுஎஸ்ஏஎப்) அறிக்கைப்படி, போர்க்களத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, குறுகிய தூர இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட ஆயுதமான B61-12 தெர்மோநியூக்ளியர் குண்டை இந்த போர் விமானங்கள் மூலம் எடுத்துச் செல்ல வெற்றிகரமாக சோதனைகள் செய்யப்பட்டன.

ஆர்ஏஎப் லேகன்ஹீத்தின் 'எதிர்கால அணுசக்தி திட்டத்திற்கு' தேவையான பாதுகாப்பான தங்குமிடங்களை கட்டுவதற்கான ஒப்பந்தம் குறித்து விவரிக்கும் ஆவணங்கள் அமெரிக்க பாதுகாப்புத் துறையால் வெளியிடப்பட்டன. பின்னர் அவை திரும்பப் பெறப்பட்டன .

இந்த விமானப்படைத் தளத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்களுக்கான தங்குமிடங்கள் கட்டுவதற்கான ஒப்பந்தங்கள் அவை.

கூடுதலாக, அமெரிக்க இராணுவத் துறை பட்ஜெட் ஆவணத்தின்படி , இந்த சஃபோல்க் தளத்தின் அடித்தளத்தில் 'ஷுரிட்டி டார்மிட்டரி' (surety dormitory) எனப்படும் வசதியை உருவாக்க லட்சக்கணக்கான டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது. இவை அணு ஆயுதங்களுக்கான சேமிப்பு வசதிகள் என கூறப்படுகிறது.

ஆர்ஏஎப் தளம் 1941இல் லேகன்ஹீத்தில் திறக்கப்பட்டு, இரண்டாம் உலகப் போரின் போது செயல்பட்டது.

நேட்டோவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையிலான பனிப்போர் தீவிரமடைந்ததால், அமெரிக்க விமானப்படை 1951இல் தளத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டது .

தளத்தில் 4,000 அமெரிக்க இராணுவ வீரர்களும் மேலும் 1,500 பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க சிவிலியன் ஊழியர்களும் உள்ளனர்.

ஆயுதங்கள் சஃபோல்க்கிற்கு கொண்டு வரப்படுமா?
அணு ஆயுதங்களை இங்கிலாந்திற்கு அனுப்பும் அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பேராசிரியர் சர் லாரன்ஸ் ஃப்ரீட்மேன்

லண்டன் கிங்ஸ் கல்லூரியின் போர் ஆய்வுகள் துறையின் பேராசிரியரான சர் லாரன்ஸ் ஃப்ரீட்மேன், "இந்த திட்டங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக இருக்கலாம்" என கூறினார்.

"ஒருவேளை ஐரோப்பாவில் உள்ள தளங்களில் இருந்து மற்ற ஆயுதங்கள் அகற்றப்பட்டால், தங்குமிடங்கள் கூடுதல் திறன் கொண்டதாக இருக்கலாம்" என்கிறார் அவர்.

"சேமிப்பு வசதியை உருவாக்குவது ஒரு விஷயம் என்றால், அமெரிக்க ஆயுதங்கள் பிரிட்டனில் இருக்கப் போகிறது என்ற உண்மையை மறைப்பது மற்றொரு விஷயம். எனவே இந்த நடவடிக்கை என்பது நாடுகளுக்கிடையேயான ஆயுதப் போட்டியில் ஏதோ ஒரு பெரிய மாற்றமாக இல்லாமல், ஒரு சாதாரணமான நடவடிக்கையாகவும் கூட இருக்கலாம்" என அவர் கூறினார்.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் அணு ஆயுதங்கள் இருப்பதை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ கூடாது என்ற கொள்கையை நீண்ட காலமாக இங்கிலாந்து மற்றும் நேட்டோ கடைபிடித்து வருகிறது.

 
ரஷ்யாவுக்கு பதிலடியாக அமெரிக்கா நடவடிக்கையா?
அணு ஆயுதங்களை இங்கிலாந்திற்கு அனுப்பும் அமெரிக்கா

பட மூலாதாரம்,USAF

படக்குறிப்பு,

B61-12 தெர்மோநியூக்ளியர் வெடிகுண்டு மிசோரியில் உள்ள வைட்மேன் விமானப்படை தளத்தின் விமானத்தில் ஏற்றப்படுகிறது

அமெரிக்கா vs ரஷ்யா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் F-35A லைட்னிங் II எனும் அதிநவீன விமானம்

"இந்த திட்டங்கள் யுக்ரேனில் நிலவும் சூழ்நிலையுடன் தொடர்புடையவை என்று நான் நினைக்கவில்லை" என்கிறார் சர் லாரன்ஸ்.

"ரஷ்யாவுடன் அதிகரித்து வரும் பதற்றத்தின் காரணமாக இது இருக்கலாம்," என்று அவர் கூறினார்.

ஆனால் நேட்டோவின் முன்னாள் மூத்த அதிகாரியான வில்லியம் அல்பர்கி கூறுகையில், "ரஷ்யாவின் நடவடிக்கைகளால் ஐரோப்பா முழுவதும் அதிகரித்து வரும் ஆபத்தான அச்சுறுத்தல் சூழலுக்கு இது ஒரு பதிலடி" என்கிறார். இவர் இப்போது சர்வதேச மூலோபாய ஆய்வுகள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

பெலாரஸில் ரஷ்ய அணுசக்தி படைகள் நிலைநிறுத்தப்பட்டது, உக்ரைன் மீதான படையெடுப்பு மற்றும் விளாடிமிர் புதின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அச்சுறுத்தல்கள் பெருமளவில் அதிகரித்தது போன்றவற்றை அவர் மேற்கோள் காட்டினார்.

அணு ஆயுதங்களை இங்கிலாந்திற்கு அனுப்பும் அமெரிக்கா

பட மூலாதாரம்,WILLIAM ALBERQUE

படக்குறிப்பு,

முன்னாள் மூத்த நேட்டோ அதிகாரி வில்லியம் அல்பர்கியின் கூற்றுப்படி, ஆர்ஏஎப் லேகன்ஹீத் தளம் ஏற்கனவே ரஷ்ய இலக்காக மாறிவுள்ளது

'இந்த தளம் ரஷ்யாவின் இலக்காக மாறும்'
அணு ஆயுதங்களை இங்கிலாந்திற்கு அனுப்பும் அமெரிக்கா

பட மூலாதாரம்,HANS KRISTENSEN

படக்குறிப்பு,

அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த ஹான்ஸ் கிறிஸ்டென்சன் ஆர்ஏஎப் லேகன்ஹீத் தளத்திற்கான அமெரிக்க பாதுகாப்புத் துறையின் திட்டங்களைக் கண்காணித்து வருகிறார்.

அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டமைப்பைச் சேர்ந்தவர் ஹான்ஸ் கிறிஸ்டென்சன். அணு ஆயுதங்கள் ஆர்ஏஎப் லேகன்ஹீத் தளத்திற்கு மீண்டும் கொண்டு வரப்படுவதற்கான சாத்தியங்கள் குறித்து குரல் எழுப்பிய முதல் நபர்களில் இவரும ஒருவர்.

"ஒரு தளத்தில் அணு ஆயுதங்கள் இருந்தால், அந்த தளம் ரஷ்யாவுடனான அணுசக்தி மோதலில் இலக்காகக் கூடும் என்பதில் சந்தேகமில்லை" என்று அவர் கூறினார்.

"ஒரு நாடு அணு ஆயுதங்களை வைத்திருந்தால், பின் அது ஒரு வித்தியாசமான போர் விளையாட்டாக மாறும் என்பதில் சந்தேகமில்லை" என்றும் கிறிஸ்டென்சன் கூறுகிறார்.

ஆனால், "இந்த தளம் இப்போதே ரஷ்யாவின் இலக்காக மாறியிருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன" என்று அல்பர்கி கூறினார்.

"நான் ஒரு ரஷ்ய இராணுவத்தைச் சேர்ந்த திட்டமிடும் நிபுணராக இருந்தால், இந்த தளத்தை தாக்க முன்பே முடிவு செய்திருப்பேன். நீங்கள் ரஷ்ய தொலைக்காட்சிகளைப் பார்த்தால், இங்கிலாந்தைப் பற்றியும் இங்கிலாந்தைத் தாக்குவது பற்றியும் அதிகம் பேசுகிறார்கள்" என்கிறார் அவர்.

இங்கிலாந்திற்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அங்கீகாரம் அளிப்பார் என்று அல்பர்கி நம்புகிறார்.

மேலும், "அவர் திறமையானவர் என்று சொல்வது மிகையாக இருக்கும். பிரச்னைக்கான தீர்வு இல்லை என்றோ அல்லது பின்விளைவுகள் வராது என நினைத்தாலோ, அவர் இதைச் செய்வார் என்று நினைக்கிறேன்" என்று கூறினார்.

 
அடுத்து என்ன நடக்கும்?
அணு ஆயுதங்களை இங்கிலாந்திற்கு அனுப்பும் அமெரிக்கா

பட மூலாதாரம்,JOHN FAIRHALL/BBC

படக்குறிப்பு,

அணு ஆயுதக் குறைப்புக்கான பிரசார அமைப்பைச் சேர்ந்த கேட் ஹட்சன், சஃபோல்க்கில் அணு ஆயுதங்கள் நிலை நிறுத்தப்படக்கூடாது என விரும்புகிறார்

அணு ஆயுதக் குறைப்புக்கான பிரசார அமைப்பு (Campaign for Nuclear Disarmament- சிஎன்டி) ஆர்ஏஎப் லேகன்ஹீத் தளத்திற்கு வெளியே போராட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்தது.

சிஎன்டி பொதுச் செயலாளர் கேட் ஹட்சன் பேசுகையில், "இங்கே அணு ஆயுதங்கள் கொண்டு வரப்பட்டால், நாங்கள் அதை அகற்ற வலியுறுத்துவோம்." என்றார்.

'ஷுரிட்டி டார்மிட்டரி' தங்குமிடத்தை கட்டுவது சட்டப்பூர்வமானதா என்பதை ஆராய சட்ட நிறுவனமான லீ டேக்கு (Leigh Day) இந்த அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

வழக்கறிஞர் ரிக்கார்டோ காமா இதுகுறித்து பேசுகையில், "லேகன்ஹீத் தளத்தில் அணுகுண்டுகளை சேமிப்பது குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் விளைவுகளை ஏற்படுத்தாது என்று இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது. ஆனால், அந்த முடிவை எடுப்பதற்கு முன்னர் விமானப்படை தளத்தில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவதன் சாத்தியமான சுற்றுச்சூழல் விளைவுகளை அவர்கள் புறக்கணித்ததாக வாதிடுகின்றனர் சிஎன்டி அமைப்பினர். அணுசக்தி விபத்து ஏற்படுவதற்கான சாத்தியம் உட்பட" என்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/cw540x9nkl5o

மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் துப்பாக்கி சூடு; விவசாயி மயிரிழையில் உயிர் தப்பினார்

1 month 1 week ago
மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் துப்பாக்கி சூடு ; மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் Published By: DIGITAL DESK 3 19 FEB, 2024 | 04:29 PM மன்னார் - மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் - நொச்சிக்குளம் பகுதியில் இன்று திங்கட்கிழமை (19) நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், குறித்த கிராம மக்கள் குறித்த வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், இன்றைய தினம் காலை 8.30 மணியளவில் நொச்சி குளத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது கிராமத்தில் உள்ள தனது வயலில் நீர் பாய்ச்சிக் கொண்டு இருந்த வேளையில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் ஒரு ரி-56 ரக துப்பாக்கி மூலம் அந்த விவசாயி மீது சுட்ட போதும் அவர் மயிரிழையில் உயிர் தப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் கடந்த சில காலமாக இந்த கிராமத்து மக்களின் மீது ஒரு குழுவினர் தாக்குதல் நடத்தி இது வரை மூவர் உயிரிழந்துள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த கிராமத்துக்கு பொலிஸ் காவல் போடப்பட்டும் அதையும் மீறி குறித்த சம்பவம் தொடர்வதாகவும், இன்று இடம்பெற்ற சம்பவத்தை கண்டித்தும் நொச்சிக்குளம் கிராம மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த பதாதைகளில் 'கொலைகாரர்களுக்கு ஆயுதம் கொடுத்தது யார்?', 'எங்களை பாதுகாப்பது அரசின் கடமை', 'எங்கள் உயிருக்கு பாதுகாப்பு தாருங்கள்', எங்கள் மக்களுக்கு நீதி இல்லையா?', 'யார் தருவது' போன்ற வாசகங்கள் காணப்பட்டன. இத் துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் உடன் சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக மன்னார் மற்றும் உயிலங்குளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தொடர்ந்து இன்று காலை முதல் மன்னார் பிரதான பாலம் ஊடாக மன்னார் நகருக்கு வருகை தரும் அனைத்து வாகனங்களும்,பொலிஸாரினால் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்ட மை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/176780

மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் துப்பாக்கி சூடு; விவசாயி மயிரிழையில் உயிர் தப்பினார்

1 month 1 week ago
மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் துப்பாக்கி சூடு ; மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

Published By: DIGITAL DESK 3    19 FEB, 2024 | 04:29 PM

image

மன்னார் - மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் - நொச்சிக்குளம் பகுதியில் இன்று திங்கட்கிழமை (19) நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், குறித்த கிராம மக்கள் குறித்த வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

இன்றைய தினம் காலை 8.30 மணியளவில் நொச்சி குளத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது கிராமத்தில் உள்ள தனது வயலில் நீர் பாய்ச்சிக் கொண்டு இருந்த வேளையில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் ஒரு ரி-56 ரக  துப்பாக்கி மூலம் அந்த விவசாயி மீது சுட்ட போதும் அவர் மயிரிழையில் உயிர் தப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் கடந்த சில காலமாக இந்த கிராமத்து மக்களின் மீது ஒரு குழுவினர் தாக்குதல் நடத்தி இது வரை மூவர் உயிரிழந்துள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த கிராமத்துக்கு பொலிஸ் காவல் போடப்பட்டும் அதையும் மீறி  குறித்த சம்பவம் தொடர்வதாகவும், இன்று இடம்பெற்ற சம்பவத்தை கண்டித்தும் நொச்சிக்குளம் கிராம மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகள் ஏந்தி   போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பதாதைகளில்  'கொலைகாரர்களுக்கு ஆயுதம் கொடுத்தது யார்?', 'எங்களை பாதுகாப்பது அரசின் கடமை', 'எங்கள் உயிருக்கு பாதுகாப்பு தாருங்கள்', எங்கள் மக்களுக்கு நீதி இல்லையா?', 'யார் தருவது' போன்ற வாசகங்கள் காணப்பட்டன.

இத் துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன்   தொடர்புடைய  சந்தேக நபர்கள் உடன் சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக மன்னார் மற்றும்  உயிலங்குளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தொடர்ந்து இன்று காலை முதல் மன்னார் பிரதான பாலம் ஊடாக மன்னார் நகருக்கு வருகை தரும் அனைத்து வாகனங்களும்,பொலிஸாரினால் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்ட மை குறிப்பிடத்தக்கது.

WhatsApp_Image_2024-02-19_at_12.44.20_PM

WhatsApp_Image_2024-02-19_at_12.44.20_PM

WhatsApp_Image_2024-02-19_at_10.38.06_AM

https://www.virakesari.lk/article/176780

கொழும்பு துறைமுக நகரத்தில் தீர்வையற்ற கடை விரைவில் திறப்பு

1 month 1 week ago
ஏப்ரல் மாதம் கொழும்பு துறைமுக நகரத்தில் தீர்வையற்ற கடை திறப்பு Published By: DIGITAL DESK 3 19 FEB, 2024 | 04:45 PM எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கையில் முதல் முறையாக தீர்வையற்ற கடை கொழும்பு துறைமுக நகரத்தில் (Colombo Port City) திறக்கப்பட உள்ளது. இதனை, இலங்கையின் ஒரே மண்டலம் ஒரே பாதை திட்டம் அமைப்பு எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. அதில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் கொழும்பு துறைமுக நகரத்தில் தீர்வையற்ற கடை திறக்கப்படும் குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/176778