கவிதைக் களம்
உரையாடலின் அறுவடை
'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன்.
பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன.
இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.
நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது?
அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.
'....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல்
நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே
நம்மைவிட்டு விடுகிறது....' என்ற வரிகளில் அவர் தெரிந்தார்.
*************
உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்)
-------------------------
கேட்கும் கேள்விகளிலிருந்தும்
அளிக்கும் பதில்களிலிருந்தும்
கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும்
நமக்கிடையேயான தூரத்தை
நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம்
தொடர்ந்து எழுப்பும் கேள்விகள்
உடைத்து உடைத்து உள் பார்க்கிறது
தொடர்ந்து அளிக்கும் பதில்கள்
உள் திறந்து திறந்து காண்பிக்கிறது
தொடரும் மௌனம்
இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது
பூட்டினால் திறக்கவும்
திறந்தால் பூட்டவும்
கேள்வியும் பதிலுமற்ற உரையாடல்
நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே
நம்மைவிட்டு விடுகிறது
https://akazhonline.com/?p=6797
புரட்சியில் விழித்தோம்
நானும் ஒரு அடிவிட்டன்
நானும் ஒரு அடிவிட்டன்
எண்பத் தைந்துகளின் பிற்பகுதி
பள்ளிக்கூடக் காலத்தில்
கலக்கல் கோலி…
கொழும்பில் இருந்தாலும்
அவசர அழைப்பில்
அல்வாயில் நிற்கும் காலம்…
இறுதி ஆட்டமொன்று..
இறுக்கமான
இரண்டு குழுவும்…
இடையில் நடுவராக
உடுப்பிட்டியின்
உயர்ந்த ஜம்பாவான்….
ஆறடிக்கு மேல் உயரம்…
அதுதான் பரவாயில்லை..
பிரதம அதிதி.
பொலிசு அதிகாரி…
அம்பயரின்…மைத்துனரம்..
அதுவும் பெரும்பான்மை இனம்..
மோதும் அணி இரண்டும்
ஏலவே பிக்கல் புடுங்கல் உள்ளவை
நடத்தும்..அணியும்
நமக்கெதிரானதுதான்….
ஆட்டம் ஆரம்பம்….
அடி உதையும் நடக்குது….
முதல் கோல் நமக்கு…
அம்பயரோ…ஆஃப்சைடு என்கிறார்…. கோல்
அடித்தவனோ..இல்லை கோல்
அம்பயர் ..மறுக்க அடிதடி…
கோலிக்கு நின்ற எனக்கு
கோபத்தின் உச்சம்…
கோதாரி விழுந்தது..
கோலிக்கு நின்ற நான்
ஹோலி யாகமாறி..
ஆறடி அம்பயரின் பிடரியில்
அசத்தலான அடிவிட்டேன்..
ஆட்டமே அல்லோல கல்லோலம்
அம்பயர் சொன்னார்
ஆரடித்தாலும் பரவாயில்லை
அலிஷ்பாண்ட் போட்ட பிளேயர்
அடித்ததுதான் பொறுக்க முடியவில்லை..
அந்த பொலிசு அதிகாரியும்
அம்பயர்…என் மைத்துனன்
அவனை என் கண்முன்னால்
அடித்த அந்த பிளேயர்
ஆரென்றாராம்…
ஆரவாரம் இப்ப டி இருக்க..
ஆட்கள் என்னைப் பிடித்து
அலிஸ்பாண்டையும் பறித்து
ஆளையும் உருமாற்றி
அல்வாயுக்கு அனுப்பிய கதை..
அப்புறம் ஆறடி
அம்பயர் என்றால்..
அந்தப் பக்கமே
அடியேன் இல்லை…
கார்பன் வெளிச்சம்
வெள்ளிக்கிழமை வேலை
நீங்கள் என்னிடம் வேறு எதையோ எதிர்பார்க்கிறீர்கள்
டியூப் லைட் முதுகில் கட்டி
தலைகீழாகவும்
சைக்கிள் ஓட்டுவேன்
விண்ணில் கட்டியிருக்கும் அந்தரக்கயிற்றில்
இந்த துருவத்தில் இருந்து அந்த துருவத்திற்கு
சைக்கிள் ஓட்டுவது எனக்கு
தண்ணீரில் நீந்துவது போல
முன்சக்கரத்தில் நிறுத்தி பின்சக்கரத்தை
மேலுயர்த்தும் போது
மேளதாளங்கள்
முழங்கட்டும்
ஆனால் நீங்கள் வேறென்னவோ
கேட்கிறீர்கள்
கரகரக்கும் குரலில்
தகரத்தில் ஒலி கேட்கிறதா உங்களுக்கு
பதிலாக
அதனை உங்களுக்கு கேட்பதற்காகத் தான்
வைத்திருக்கிறேன்
வெறுப்பு!
வெறுப்பு!
***********
அரசமரக் கன்றுகளை
அழித்துக்கொண்டிருந்தான்
அந்தத்தேசத்து
மனிதனொருவன்
எத்தனையாண்டுகள்
வாழும் மரத்தை
ஏன்..
அழிக்கிறாய்யென்றான்
வழிப்போக்கன்.
எனக்கும் கவலைதான்
என்னசெய்வது
வருங்காலப் பிள்ளைகளும்
வாழவேண்டுமே என்று
பெரு மூச்சுவிட்டான்
அந்த மனிதன்.
அன்புடன் -பசுவூர்க்கோபி.
எச்சரிக்கை
எச்சரிக்கை
ஒரு கோப்பை தேநீர்
ஒரு வழிச் சாலை
இரண்டு வெண்தலைக் கழுகுகள்
மனிதம் செத்துவிட்ட மகாத்மாபூமி!
மனிதம் செத்துவிட்ட மகாத்மா பூமி!
*****************************************
வாசலை திறந்து கொண்டு-நீ
வருவாயென்றுதானே
ஏங்கிக் கிடந்தது
எம் தேசம்…
விடுதலை பெற்றபின்னும்
தூக்கு கயிறை மாட்டி
தூங்கவைத்து
அனுப்புமென்பது
யாருக்குத் தெரியும்.
😢
உன்னைப்போலவே
உன் அம்மாவும்
ஒவ்வொருநாளும்
செத்து செத்து..
உன்வரவுக்காகவே
காத்துக் கிடந்தாள்-எனி
அவளுக்கு ஆறுதல் சொல்ல
யாரால் முடியும்
இந்த பூமியில்.
ஆத்மார்த்த அஞ்சலிகள்🙏
பசுவூர்க்கோபி.
உயித் தமிழே நீ வாழ்வாய்.
அங்கே நான் உன்னை..#பழநிபாரதி
வாழ்வு தந்தவள் இவளே!
வாழ்வு தந்தவள் இவளே!
*****************************
எழில் கொஞ்சும் மலைகள் தந்தாய்
ஏர் பூட்ட வயல்கள் தந்தாய்
பயிர் வளர மழையும் தந்தாய்
பார் சிறக்க பல்லுயிர்கள் தந்தாய்.
அழகான அருவி தந்தாய்
அகிலம் சுற்றி கடலும் தந்தாய்
எரிகின்ற தீயும் தந்தாய்
இளவேனிற் காற்றும் தந்தாய்.
உயர்வான வானம் தந்தாய்
உருண்டோடும் மேகம் தந்தாய்
வளமான காடு தந்தாய்
வலிமைமிகு மரங்கள் தந்தாய்.
சூரியன்,மதியும் தந்தாய்
சுதந்திர பறவைகள் தந்தாய்
கடல் நிறைந்த உயிர்கள் தந்தாய்
கரையோரம் காட்சிகள் தந்தாய்.
கலர்,கலராய் மலர்கல் தந்தாய்
கண்குளிர பலவும் தந்தாய்
இரவு பகல் எமக்குத் தந்தாய்
எம் வாழ்வு சிறக்கத் தந்தாய்.
இத்தனையும் தந்த உன்னை
மறக்கலாமோ?
இடையில் வந்த பணத்தின்பின்
ஓடலாமோ?
செத்தபின்பும் செயற்கை
என்றும் வருவதில்லை
சிறந்த இந்த இயற்கை
எம்மைப் பிரிவதில்லை.
அன்புடன் -பசுவூர்க்கோபி.
17.01.2024
மாதங்களில் நான் மார்கழி.
மாதங்களில் நான் மார்கழி.
வீதியெங்கும் மாவிலைத் தோரணங்கள்
வாசலெல்லாம் வண்ணக் கோலங்கள்
பூசணிப் பூக்கள் மத்தியிலே
சாணியில் பிள்ளையார் பூவினிலே
மெல்லிய பனியுடன் மழைக்காலம்
வகை வகையாய் பறவைகள் இசைக்கோலம்
நிரை நிரையாய் எறும்புகள் ஊர்வலம்
அவசர கதியில் மாந்தர் நகர்வலம்
கோடை முடிந்தால் வந்திடும் மார்கழி
வாடைக்காற்றும் வந்து வாட்டிடும்
பீடை மாதமென்பார் பேதையர்
சாடையினால் தை பிறக்கட்டுமென்பர் சோதிடர்
பெருவிழாக்கள் குறைந்தாலும்
திருவிழாக்கள் களை கட்டும்
ஓதுவார் இறைபுகழ் ஓதிச் செல்ல
சாதுக்கள் பஜனையில் கூடிச்செல்வர்
அடிகளின் திருவெம்பாவை திக்கெட்டும் ஒலிக்க
கோதையின் திருப்பாவை காற்றினில் தவழுவதால்
மாதங்களில் நான் மார்கழி
என்றே பகல்கின்றான் மாதவனும் .......!
ஆக்கம் : சுவி ......!
காதல் ஓவியம்-பா.உதயன்