ஊர்ப்புதினம்

புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்க முடியாது - ஏறாவூர் பற்று பிரதேச சபையில் தீர்மானம்!

1 month 2 weeks ago

18 Sep, 2025 | 03:14 PM

image

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று புல்லு மலையில் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தண்ணீர் தொழிற்சாலைக்கு பிரதேச சபையின் கட்டிட அனுமதியோ வியாபார அனுமதியோ வழங்கப்படாது எனவும் குறித்த தண்ணீர் தொழிற்சாலைக்கு மாவட்ட அபிவிருத்திக் குழு அனுமதி வழங்கக் கூடாது என ஏறாவூர் பற்று பிரதேச சபையின் இன்றைய அமர்வில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏறாவூர் பற்று பிரதேச சபையின் அமர்வு இன்றைய தினம் நடைபெற்றபோது பெரிய புல்லுமலை வட்டார உறுப்பினர் சிவானந்தன் பெரிய புல்லு மலையில் அமைக்கப்படவுள்ள தண்ணீர் தொழிற்சாலையை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற பிரேரணையை சபைக்கு கொண்டுவந்ததன் பிரகாரம் அது குறித்த விவாதம் சபையில் நடைபெற்றது. 

இதன்போது சிரேஸ்ட ஊடகவியலாளரும் பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன் கூறுகையில்,

ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் உள்ள புல்லு மலை கிராமத்தில் அமைக்கப்படவுள்ள நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் மாகாண தொழிற்சாலைக்கு கடந்த 2018ஆம் ஆண்டே அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. 

இது குறித்து ஏறாவூர் பற்று பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் உள்ளது. இந்நிலையில் இன்று மீண்டும் இந்த தொழிற்சாலைக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. 

உண்மையில் புல்லுமலை கிராம மக்கள் தண்ணீர் இன்றி தவிக்கின்றனர். பிரதேச சபையில் இருந்து அந்த மக்களுக்கு தண்ணீர் வழங்கிய பவுசரை அரசாங்கம் கொண்டு சென்றுள்ளது. இதுவரை அந்த மக்களுக்கு தண்ணீர் கொடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசாங்கம் அந்த பகுதியில் உள்ள நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தொழிற்சாலைக்கு எப்படி அனுமதி வழங்க முடியும்.  

எனவே, குறித்த தண்ணீர் தொழிற்சாலைக்கான அனு ஆவணங்கள் எதுவும் இல்லை. தண்ணீர் தொழிற்சாலைக்கான கட்டட அனுமதி மற்றும் வியாபார அனுமதிக்கான ஆவணங்கள் பிரதேச சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டால் அனுமதி வழங்கக் கூடாது என சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என தெரிவித்தார். 

இது குறித்து அனைத்து உறுப்பினர்களும் கருத்து தெரிவித்தனர்.  

ஏறாவூர் பற்று புல்லு மலையில் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தண்ணீர் தொழிற்சாலைக்கு பிரதேச சபையின் கட்டிட அனுமதி, வியாபார அனுமதி வழங்கப்படாது எனவும் குறித்த தண்ணீர் தொழிற்சாலைக்கு மாவட்ட அபிவிருத்திக் குழு அனுமதி வழங்கக் கூடாது எனவும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

https://www.virakesari.lk/article/225419

மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு விசாரணை யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரிடம்!

1 month 2 weeks ago

18 Sep, 2025 | 11:47 AM

image

மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சடலங்கள் புதைக்கப்பட்டதாக  கூறப்படும் கிணறுகள் தொடர்பில் விசாரணை நடத்தி, அது தொடர்பான அறிக்கைகளை எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சடலங்கள் புதைக்கப்பட்ட கிணறுகளை அகழ்ந்து, அது தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் வழக்கினை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கு நேற்றைய தினம் புதன்கிழமை (17) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது, 

அதன்போது, ஊர்காவற்றுறை பொலிஸாரினால்  இவ்வழக்கு விசாரணைகளை முன்னெடுப்பதற்கான ஆளணி வசதிகள் உள்ளிட்ட வசதிகள் இல்லை என மன்றில் தெரிவித்தமையை அடுத்து, வழக்கு விசாரணைகளை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் பாரப்படுத்தி விசாரணைகளை முன்னெடுத்து, நவம்பர் 12ஆம் திகதி விசாரணை அறிக்கைகளை மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினத்திற்கு வழக்கினை திகதியிட்டார். 

பின்னணி 

1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25, 26ஆம் திகதிகளில் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின்போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளில் பாரிய மனிதப் படுகொலை நடத்தப்பட்டது. இதன்போது 80க்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களில் 45க்கும் அதிகமானவர்களின் உடலங்கள்  மண்டைதீவு 2ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள  கிணறு ஒன்றில் இருப்பதுடன் அதற்கான வாழும் சாட்சியங்கள் உறுதியாகவும் இருக்கின்றன. அதேபோன்று அதற்கு அயலில் உள்ள பாடசாலை கிணறு ஒன்றுக்குள்ளும் உடலங்கள் இருக்கின்றன.

எனவே குறித்த கிணற்றை அகழ்ந்து உடலங்களை வெளிக்கொணர்ந்து உண்மைகள் வெளி உலகுக்கு வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.  

https://www.virakesari.lk/article/225393

அருவருக்கத்தக்க அரசியலுக்காக தியாகி திலீபனைப் பயன்படுத்தும் முன்னணி - இளங்குமரன் எம்.பி குற்றச்சாட்டு!

1 month 2 weeks ago

Published By: Vishnu

18 Sep, 2025 | 02:56 AM

image

நினைவேந்தல்களை வைத்து தேர்தல் கணக்கு அரசியல் செய்யும் முன்னணியின் செயல் எப்போது நிறுத்தம் காணும் என நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தியாக தீபம் திலீபன் அண்ணனின் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்க வந்த அமைச்சர் சந்திரசேகருக்கு அஞ்சலி செலுத்தும் உரிமையைத் தடுப்பது, தமிழ்க் காங்கிரஸ் முன்னணியின் செயல் எனில் – அது அயோக்கியத்தனத்தின் உச்சமே ஆகும்.

யாரும் யாரையும் அஞ்சலிக்கலாம்; அதுதான் மனித மாண்பு. திலீபன் அண்ணன் போராடிய காலத்தில் அவருக்கு எதிராக நின்ற பலர் இன்று நினைவேந்தல்களில் பங்கேற்கின்றனர். அவர்களை முன்னணியே தேர்தல் அரசியலுக்காக அருகில் நிறுத்திக் கொள்கிறது. ஆனால், மற்றவர்களை அனுமதிக்க மறுப்பது எத்தகைய முரண்பாடு?

ஒரு மாவீரனின் – தியாகியின் நினைவேந்தலை வாக்குக் கணக்குப் பொருட்டு அரசியல் ஆக்கிரமிப்பு செய்வது ஒருபோதும் மன்னிக்க முடியாத குற்றமாகும். இது மனித மாண்புகளை மீறிய காட்டுமிராண்டித்தனமே தவிர வேறில்லை என குறிப்பிடப்பட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/225369

கெரவலபிட்டிய சொபாதனவி மின் உற்பத்தி நிலையம்; தேசிய கட்டமைப்பில் இணைப்பு

1 month 2 weeks ago

Published By: Vishnu

18 Sep, 2025 | 02:52 AM

image

மின்சக்தி சுயாதீனத்துவம் நாட்டின் வளர்ச்சிக்காக அத்தியாவசியமானது. மின்கட்டணத்தை குறைப்பதற்கு முன்னர் அதற்குரிய நிலையான மற்றும் சாத்தியமான திட்டங்களை செயற்படுத்த வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மெகாவோட் 350 கொள்ளவுடன் கூடிய கெரவலபிட்டிய சொபாதனவி  மின் உற்பத்தி நிலையமானது பிரதமர் தலைமையில் தேசிய கட்டமைப்பில் இணைக்கப்பட்டது. தற்போதைய மின்சாரத் தேவையின் 12 சதவீதத்தை பூர்த்தி செய்ய முடிந்துள்ளது.

இலங்கைப் பொறியியல் அறிவு, கட்டமைப்பு மற்றும் திறன்கள் சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 2030 ஆம் ஆண்டிற்குள் தேசிய தேவையின் 70 சதவீதம்  புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் பூர்த்தி செய்வதற்கான இலக்கிற்கு நேரடி பங்களிப்பு செய்யும்.

நாட்டின் ஆற்றல் துறையின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கான நோக்கில் கட்டியெழுப்பப்பட்ட 350 மெகாவாட் திறன் கொண்ட கெரவலப்பிட்டிய  திரவமயமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு  மின் நிலையத்தின் இரண்டாம் கட்டம் இன்று (17) திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை மின்சார சபையின் நீண்டகால மின் உற்பத்தி திட்டத்தில் பிரதானமானதாக விளங்கும் சோபாதனவி மின்நிலையம், தற்போதைய மின்சாரத் தேவையின் 12 சதவீத பங்கைக் பூர்த்தி செய்யக் கூடியதாகும்.

இதேபோன்று, இது இலங்கையின் மிகப்பெரியதும் மிகச் செயல்திறனும் கொண்ட கூட்டு சுழற்சி மின் நிலையமாகும். இந்த மின் நிலையம் அடுத்த 20 ஆண்டுகளுக்கான நாட்டின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யக்கூடியதாகும். இந்தத் திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டது.

முதல் கட்டமானது, 220 மெகாவாட் திறன் கொண்ட திறந்த சுழற்சி செயல்பாடு. இரண்டாம் கட்டமானது, நீராவி டர்பைன் ஒன்றை நிறுவுவதன் மூலம் மேலும் 130 மெகாவாட் திறனைச் சேர்த்து. மொத்த திறன் 350 மெகாவாட்டாக காணப்படுகிறது.

இங்கு உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சோபாதனவி மின்நிலையம் மூலம் தேசிய மின் அமைப்பிற்கு மேலும் 350 மெகாவாட் இணைக்கப்படுகிறது.

மின்சக்தித் துறையில் இடையறாத முறையில் மாறிக்கொண்டிருக்கும் நுகர்வோர் தேவைகள் மற்றும் கட்டுப்பாட்டு வடிவமைப்புகளுடன் ஒத்திசைவாக, நிலைத்தன்மை மற்றும் புதுமையை முன்னிறுத்திய மாற்றத்திற்குரிய ஒரு யுகத்தை உலகம் தற்போது கடந்து வருகிறது.

அதன்படி, உலகளாவிய போக்குகள் இவ்வாறு அமையும்போது, எங்கள் பிராந்தியத்தின் மின் கட்டணம் அதிகரித்த நாடுகளுக்குள் இலங்கை உயர் இடத்தில் இருப்பதைச் சொல்ல வேண்டும்.

நமது நாட்டில் பல தசாப்தங்களாக செயல்பட்ட தவறான பொருளாதார கொள்கையின் காரணமாக இப்போது நாடு பின்தங்கிய பொருளாதார பள்ளத்தாக்கிலிருந்து மீண்டு உற்பத்தி அடிப்படையிலான பொருளாதாரத்துக்குள் செல்வதற்கான முக்கிய தடையாக தாங்க முடியாத மின்சாரச் செலவினை குறிப்பிடலாம்.இதனை கருத்தில் கொண்டு, நாங்கள் மீள்சுழற்சி ஆற்றலுக்கு எங்கள் கவனத்தை திருப்பியுள்ளோம்.

இலங்கையை பிராந்தியத்தில் குறைந்த மின் விலை கொண்ட நாடாக மாற்றுவதற்காக, விலைமனு  மற்றும் விலை அழைப்புச் செயல்முறைகளை செயற்படுத்தி, பாரம்பரிய எரிபொருள் அடிப்படையிலான மின்சாரத்தை மீள்சுழற்சி ஆற்றல் கொண்ட மூலங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதே எங்கள் இலக்காகும்.அதற்காக எங்கள் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது  என்றார்.

https://www.virakesari.lk/article/225368

திருகோணமலைக்கு வடகிழக்கே கடற்பகுதியில் நிலநடுக்கம்!

1 month 2 weeks ago

திருகோணமலைக்கு வடகிழக்கே கடற்பகுதியில் நிலநடுக்கம்!

18 SEP, 2025 | 05:39 PM

image

திருகோணமலைக்கு வடகிழக்கே 60 கி.மீ தொலைவில் கடற்பகுதியில் இன்று வியாழக்கிழமை (18) பிற்பகல் 4.06 மணியளவில் 3.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 

இருப்பினும், இலங்கைக் கடற்கரைக்கு எந்தவிதமான சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் (GSMB) மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) ஆகியன தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/225445

சீனோர் பணிகள் ஆரம்பித்து வைப்பு

1 month 2 weeks ago

சீனோர் பணிகள் ஆரம்பித்து வைப்பு

adminSeptember 18, 2025

70402e01-1765-49ca-bcdf-4ced82a7038c.jpe

யாழ். காரைநகர் பகுதியில் சீ நோர் படகு திருத்துமிடத்தை அனைத்து வசதிகளுடனும் மீள இயங்க வைப்பதற்குரிய ஆரம்ப பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரின் பங்கேற்புடன் ஆரம்ப பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

சீ நோர் படகு திருத்துமிடம் நெடுநாளாக இயங்கா நிலையில் இருந்தது. இதனால் படகு திருத்த பணிகளை மேற்கொள்வதில் மீனவர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். இது தொடர்பில் அமைச்சர் சந்திரசேகரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே இலங்கை மற்றும் இந்திய அரசின் 330 மில்லியன் நிதி உதவியின் கீழ் இன்றைய தினம் அதன் ஆரம்ப பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.  நிகழ்வில்  வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கோலித்த கமல் ஜினதாச, தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் அதிகாரிகள், சீ நோர் நிறுவனத்தின் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

3fd16573-2d1f-4e94-af16-3f03e835bfd0.jpe06f8f4bc-a9b6-493e-99e2-278669b68ad9.jpebf98a685-66bf-4a4f-a5a5-66e6f90d92f3.jpe0a4db65a-faff-41d5-a365-7d7820c265b0.jpe4fc55b15-404d-4ba1-8081-a7cb4b3b85cd.jpe

https://globaltamilnews.net/2025/220534/

மாமனிதர் துரைராஜாவிற்கு உருவச் சிலை

1 month 2 weeks ago

மாமனிதர் துரைராஜாவிற்கு உருவச் சிலை

adminSeptember 18, 2025

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின்  முன்னாள் துணைவேந்தர் மாமனிதர் துரைராஜாவின் உருவச் சிலையினை திருநெல்வேலிச் சந்தியில் நிறுவுவதற்கு நல்லூர் பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மாமனிதர் பேராசிரியர் துரைராஜாவிற்கு சிலை ஒன்றினை அமைப்பதற்கு இடமொன்றினை ஒதுக்குவது தொடர்பில் இன்றைய தினம் வியாழக்கிழமை நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தில் தவிசாளர் ப. மயூரனால் அறிவிக்கப்பட்டது. அது தொடர்பில் தவிசாளர் சபையில் தெரிவிக்கையில்.,

போலிகள் மலிந்து விட்ட இன்றைய தேசத்தில் போலியின்றி வாழ்ந்து தேசப்பற்றோடும் மக்கள் மனித நேயத்தோடும் தமிழ் மண்ணுக்கு மக்களுக்கும் அவர் ஆற்றிய மகத்தான தன்னலமற்று பணியாற்றியவர்.

அவரது அறிவியல், பண்பியல், வாழ்வியல் என்பன இந்த மண்ணின் ஒரு வரலாறு அடையாளம்.
அவ்வாறனவர்கள் இந்த மண்ணில் வாழ்ந்தார்கள் என்பதனை எமது அடுத்த தலைமுறைக்கு சொல்லவேண்டியதும் இப்படியானவர்களை எமது இளைய தலைமுறையினர் தங்களது வாழ்வியலுக்கான வழிகாட்டியாக பின்பற்றவேண்டும் என்பதன் அடிப்படையில்  நல்லூர் பிரதேச சபை இவ் உயரிய பணியினை மேற்கொள்ளுகின்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த காரணத்தினால் யாழ்.பல்கலைக்கழக சூழலில் அவருடைய சிலையினை நிறுவுவதற்கான இடத்தினை ஒதுக்க  வேண்மென்பதன் அடிப்படையில் ஒரு பொருத்தமான இடத்தினை தெரிவு செய்யவேண்டும்.

அந்த வகையில் திருநெல்வேலிச் சந்தியில் நல்லூர் பிரதேச சபையினால் அமைக்கப்பட்ட மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் அல்லது யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்திற்கு முன்னால் உள்ள நடைபாதைக்கு அருகில் இச் சிலையினை நிறுவுவதற்கான இடமாக தெரிவு செய்யலாம் என தெரிவித்தார்.

அதன் போது, திருநெல்வேலிச் சந்தியில் நல்லூர் பிரதேச சபையினால் அமைக்கப்பட்ட மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் மாமனிதர் துரைராஜா அவர்களின் சிலையினை நிறுவுவதற்கான பொருத்தமான இடமென சபை ஏகமனதாக ஏற்றுக் கொண்டது

https://globaltamilnews.net/2025/220495/

செம்மணி புதைகுழி – மூன்றாம் கட்ட அகழ்வுக்கான பாதீடு மன்றில் சமர்ப்பிப்பு

1 month 2 weeks ago

செம்மணி புதைகுழி – மூன்றாம் கட்ட அகழ்வுக்கான பாதீடு மன்றில் சமர்ப்பிப்பு

adminSeptember 18, 2025

IMG-20250918-WA0036.jpg?fit=1170%2C658&s

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான பாதீடு இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ் , நீதவான் நீதிமன்றத்தில் , சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் சமர்ப்பித்துள்ளார்.

செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்றில் நடைபெற்றது.  அதன் போது, மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான செலவீன பாதீட்டை சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் மன்றில் சமர்ப்பித்தார்.  அதனை தொடர்ந்து வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 01ஆம் திகதிக்கு மன்று ஒத்திவைத்தது.

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் , முதல் கட்டமாக 09 நாட்களும் , இரண்டாம் கட்டமாக 45 நாட்களுமாக கட்டம் கட்டமாக 54 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் , அவற்றில் 239 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டு ,நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளின் போது மேற்கொள்ளப்பட்ட ஸ்கான் நடவடிக்கைகள் , மற்றும் பேராசிரியர் சோமதேவாவின் செய்மதி மூல அறிக்கை உள்ளிட்ட  அறிக்கைகளின் அடிப்படையில் மனித புதைகுழி காணப்படும் இடங்களுக்கு அண்மையில் மேலும் மனித புதைகுழிகள் காணப்படுவதற்கான சாத்திய கூறுகள் காணப்படுவதால் , மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக 08 வார கால அனுமதி வேண்டும் என சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் மன்றில் விண்ணப்பம் செய்ததை அடுத்து , அதற்கான செலவீன பாதீட்டை மன்றில் சமர்ப்பிக்குமாறு மன்று உத்தரவிட்டதை அடுத்தே இன்றைய தினம் பாதீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

IMG-20250918-WA0037.jpg?resize=800%2C450

https://globaltamilnews.net/2025/220511/

புலம்பெயர் தமிழர்களை குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது..! முன்னாள் கடற்படை பேச்சாளர் ஆதங்கம்

1 month 2 weeks ago

ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் எமக்கெதிராக புலம்பெயர் தமிழர்கள் செயற்படுவதென்பது ஏற்றுக் கொள்ள முடியாத காரணியாகும் என முன்னாள் கடற்படை பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்க தெரிவித்துள்ளார்.

இணையத்தள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து

அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டின் முழுமையான நோக்கம் ஐரோப்பாவின் ஆதிக்கத்தில் இலங்கையை உள்ளடக்க வேண்டும் என்பதாகும்.அதற்காக ஐரோப்பா பயன்படுத்தும் கருவியாக புலம்பெயர் தமிழர்கள் காணப்படுகிறார்கள்.

புலம்பெயர் தமிழர்களை குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது..! முன்னாள் கடற்படை பேச்சாளர் ஆதங்கம் | Geneva Human Rights Council

அதாவது இந்திய பெருங்கடலில் தங்களின் ஆதிக்கம் மேலோங்க இலங்கை ஒரு மர்மஸ்தானமாக இருப்பதாலாகும்.இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த 2009ஆம் ஆண்டு காலகட்டத்தில் அமெரிக்க காங்கிரஸுக்கு நிபுணர்கள் குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர்.

அது போருக்குப் பிறகு இலங்கையின் மறுசீரமைப்பு (recharcting of srilanka sfter war) ஆகும்.

அதில், இந்து சமுத்திர ஆதிக்கத்தில் இலங்கை முக்கிய புள்ளியாகும்.அதில் எமது பலத்தை நிலை நாட்ட எமக்குள்ள பலத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எமது நாட்டில் தேசிய ஒருமைப்பாடு இல்லை என்பது பொய்யான கருத்தாகும்.யுத்தம் நிறைவடைந்த சில காலத்தில் நாம் அனைவரையும் மீள  குடியமர்த்தினோம்.

தேசிய ஒருமைப்பாடு

சிங்களவர், தமிழர் முரண்பாடுகள் ஊதி பெருப்பிக்கப்பட்டதாகும். நாட்டில் தேசிய ஒருமைப்பாடு நிலைப்பது சர்வதேச தரப்பில் விரும்பப்படாத ஒன்றாகும். அவர்களுக்கு இவை ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.எங்கள் நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தி.எமக்கிருக்கும் குறைந்தளவான வளங்களையும் சூறையாடிக் கொள்வதாகும்.

அதற்காக எம்மிடையே பிரிவினையை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கமாகும்.அப்போது எமக்கிருக்கும் வளங்களை பிரித்து கொள்வதற்கு எமது நாட்டில் நடக்கும் சண்டையில் அவர்கள் பலன் அடைவதே  நோக்கமாகும்.

புலம்பெயர் தமிழர்களை குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது..! முன்னாள் கடற்படை பேச்சாளர் ஆதங்கம் | Geneva Human Rights Council

அதாவது "Responsibility to Protect" (R2P) என்ற சாசனத்தின் படி ஒரு நாட்டுக்கு தனது மக்களை பாதுகாக்க முடியாவிட்டால் ஐ.நாவின் பங்கேற்பில் அவர்களை பாதுகாப்பதற்காக தலையிட முடியும்.

அவ்வாறான ஒரு நிலைக்கு எமது நாட்டை கொண்டுவரவே முயற்சிக்கின்றனர். அல்லது தமிழர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுக்கவோ அல்லது புலம்பெயர் தமிழர்களின் அன்புக்காகவல்ல.

ஐரோப்பிய நாடுகளின் பிரதான குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்வதற்கே இவ்வாறான முன்னெடுப்புகள் செய்யப்படுகின்றன. இலங்கை அரசியல்வாதிகள் கூச்சலிடும் புலம் பெயர் தமிழர்கள் அல்ல.

அவர்களையும் சர்வதேசம் தங்கள் பக்கம் சார்ந்து வைத்து கொண்டே தங்களில் குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்ள மேற்கொள்ளும் பிரயத்தனமாகும். உங்களின் வாக்குகள் எமக்கு தேவை, உழைப்பு எங்களுக்கு முக்கியமானது என கூறும் ஐரோப்பியா தமிழர்களுக்கான தனி நாடு அவசியம் என கருத்துகள் புலம்பெயர் தமிழர்களுடாக இலங்கையில் பரப்பப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

https://tamilwin.com/

யாழின் அத்திப்பட்டி கிராமம்! 35 வருடங்களின் பின் அம்பலமாகும் உண்மைகள் - கிணற்றுக்குள் மனிதப்புதைகுழி

1 month 2 weeks ago

செம்மணி மனிதபுதைக்குழி விவகாரம் பேசுபொருளாகியுள்ள நிலையில், மண்டைதீவு மனிதபுதைக்குழி விவகாரமும் துளிர்விட ஆரம்பித்துள்ளது.

1990களில் மண்டைதீவு பகுதியில் மிகப்பெரிய பேரவலம் அரங்கேறியுள்ளது.

50ற்கும் மேற்பட்பட்டோர் புதைக்கபட்ட மண்டைதீவு செம்பாட்டு தோட்டம் கிழக்கு தெருவில் அமைந்திருக்ககூடிய ஒரு கிணற்றின் ஊடாகத்தான் பல செய்திகள் வெளிவர காத்திருக்கின்றன.

யாழ்.தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள மண்டைதீவானது 1990களின் பின்னர் இலங்கையின் உள்நாட்டு போரின் இருண்ட சாட்சியமாக மாறியுள்ளது.

போர்ச்சூழல் காரணமாக மண்டைதீவு விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கும் இலங்கை இராணுவத்திற்குமிடையில் அடிக்கடி கைமாறியுள்ளது.

மண்டைதீவு பல தசாப்தங்களாக நடந்த போர் மற்றும் அரசியல் வன்முறையின் சோக கதைகளில் ஒன்றாக உள்ளது.

https://tamilwin.com/a

விரைவில் சுமோவுக்கு நிரந்தர ஓய்வு...!

1 month 2 weeks ago

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் அவரது கும்பலுக்கு விரைவில் நிரந்தர ஓய்வு கிடைக்கும் என மட்டக்களப்பு கல்குடா தொகுதியின் தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் திலீப்குமார் தெரிவித்துள்ளார். 

அநுர அரசுக்கு ஆரம்பத்தில் வாக்களித்த மக்கள் இன்று பிழையானவர்களைத் தெரிவு செய்துவிட்டோம் என வருத்தப்படுவதாக சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் இட்ட முகநூல் பதிவிலேயே திலீப்குமார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த முகநூல் பதிவில் மேலும்,

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் இனிக் கிடையாது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரியில்லா வாகன இறக்குமதி அனுமதி பத்திரம் கிடையாது.

நிரந்தர அரசியல் ஓய்வு

சிங்கள பௌத்த பேரினவாத அரசியலை அநுர அரசு செய்வதில்லை என்பதால் தமிழ்த் தேசிய அழிவு அரசியலை வைத்து பிச்சை எடுக்க முடியாத நிலைமை.

விரைவில் சுமோவுக்கு நிரந்தர ஓய்வு...! | Sumanthiran Will Soon Receive Permanent Retirement

தென்னிலங்கையில் ரணில், ராஜபக்ச, பண்டாரநாயக்க குடும்பங்கள் நிரந்தர அரசியல் ஓய்வுக்கு செல்வது போல் விரைவில் சுமோ கும்பலுக்கும் ஓய்வு கிடைக்கும்.

விரைவில் சுமோவுக்கு நிரந்தர ஓய்வு...! | Sumanthiran Will Soon Receive Permanent Retirement

ஆனால், எந்தவொரு அரசு கொடுப்பனவுகளும் கிடைக்காது. அஸ்வெசுமவுக்கு மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் - என குறிப்பிடப்பட்டுள்ளது. 

https://tamilwin.com/

நாளை சுற்றுப்பாதையில் ஏவப்படவுள்ள இலங்கையின் மூன்றாவது செயற்கைக்கோள்!

1 month 2 weeks ago

New-Project-249.jpg?resize=750%2C375&ssl

நாளை சுற்றுப்பாதையில் ஏவப்படவுள்ள இலங்கையின் மூன்றாவது செயற்கைக்கோள்!

உள்ளூர் பொறியாளர்களின் தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் உருவாக்கப்பட்ட இலங்கையின் மூன்றாவது சிறிய செயற்கைக்கோள் நாளை (19) சுற்றுப்பாதையில் ஏவப்பட உள்ளதாக மொரட்டுவையில் உள்ள ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது.

‘BIRDS-X Dragonfly’ என்று பெயரிடப்பட்ட இந்த செயற்கைக்கோள், ஆகஸ்ட் 24 அன்று நாசாவால் ஏவப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ்-33 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) கொண்டு செல்லப்பட்டது.

முன்னதாக, 2019 ஆம் ஆண்டில், இலங்கை தனது முதல் சிறிய-செயற்கைக்கோளான ‘ராவணன்-1’ ஐ வெற்றிகரமாக ஏவியது.

மேலும் 2022 ஆம் ஆண்டில், ஐந்து சர்வதேச கூட்டாளர்களை உள்ளடக்கிய பன்னாட்டு தொழில்நுட்ப ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக ‘கிட்சூன்’ செயற்கைக்கோள் ஏவப்பட்டது.

அதன்படி, BIRDS-X டிராகன்ஃபிளை சிறிய செயற்கைக்கோள் நாளை பிற்பகல் 2:15 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து அதன் நியமிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது இலங்கையின் விண்வெளி தொழில்நுட்ப பயணத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க படியை குறிக்கிறது.

BIRDS-X 2U Cube Satellite Project – A C C I M T

https://athavannews.com/2025/1447577

ஹெரோயினுடன் பிக்கு உள்ளிட்ட மூவர் கைது!

1 month 2 weeks ago

Dl0V7PuU4AEu7Ik.jpg?resize=650%2C375&ssl

ஹெரோயினுடன் பிக்கு உள்ளிட்ட மூவர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை மாத்தளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இதன்போது அவரிடம் இருந்து 10.3 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிக்கு அலவ்வ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விகாரையொன்றில் சேவையாற்றிய 38 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

அவருடன் கைதான ஏனைய இரண்டு பேரும் 29 மற்றும் 31 வயதுடையவர்கள் எனவும் அவர்களிடம் இருந்து 17 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கைதான மூன்று சந்தேக நபர்களும் நேற்று பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மினுவாங்கொடையைச் சேர்ந்த “நேவி தினேஷ்” என்ற நபரால் இயக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.

https://athavannews.com/2025/1447589

மகிந்தவுக்கு கொழும்பில் சொந்த வீடு..! வெளியான இரகசியத் தகவல்

1 month 2 weeks ago

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மிரிஹான, கல்வல வீதியில் ஒரு வீடு இருப்பதாக அவரது உறவினரும் ரஷ்யாவிற்கான முன்னாள் தூதருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த வீட்டை மகிந்த ராஜபக்ச, 1980ஆம் ஆண்டு வாங்கியதாக உதயங்க வீரதுங்க தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து உதயங்க வீரதுங்கவின் முகநூல் பதிவில் மேலும் குறிப்பிடுகையில்,

“முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதம் சட்டம் கொண்டுவரப்பட்டு, விஜேராம மாவத்தை, எண். 117 இல் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு மஹிந்த ராஜபக்ச செல்லும் கடைசி நாள்.

செப்டம்பர் 10ஆம் திகதி ஆகும். அன்று, முன்னாள் ஜனாதிபதியுடன் விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் இரவு விருந்தில் கலந்து கொண்ட ஒரே நபர் நான்தான். உண்மையில், விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற அவருக்கு மனமில்லை.

கொழும்பில் வாங்கிய முதல் வீடு

ஆனால் மிரிஹானவில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல முடியாதது குறித்து அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசியதை நான் கவனித்தேன். 1980 ஆம் ஆண்டு மிரிஹான, கல்வல வீதியில் தனது முதல் வீட்டை வாங்கியதை மஹிந்த அண்ணன் நினைவு கூர்ந்தார்.

மகிந்தவுக்கு கொழும்பில் சொந்த வீடு..! வெளியான இரகசியத் தகவல் | Mahinda Has A House In Mirihana

அங்கிருந்து தான் நான் நாளந்தா கல்லூரிக்குச் சென்றேன். பின்னர், ரஷ்யாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்க வெளிநாடு சென்றேன். அந்த வீடு மிகவும் அதிர்ஷ்டமான வீடு என்று நாங்கள் இன்னும் நம்புகிறோம். அந்த வீட்டிற்கு வந்த பிறகு மஹிந்த அண்ணன் திருமணம் செய்து கொண்டார்.

அதேபோல், டட்லி அண்ணன், பிரீத்தி அக்கா, கந்தானி அக்கா, கோட்டா அண்ணன் ஆகியோர் அந்த வீட்டிற்கு வந்த பிறகு திருமணம் செய்து கொண்டனர். அந்த நேரத்தில், ஜெயந்தி அக்கா மற்றும் பசில் அண்ணனும் அந்த வீட்டிற்கு அருகிலுள்ள காணியில் தங்கள் முதல் வீட்டை கட்ட முடிவு செய்தனர்.

மகிந்தவுக்கு கொழும்பில் சொந்த வீடு..! வெளியான இரகசியத் தகவல் | Mahinda Has A House In Mirihana

அதனால்தான் எனது முதல் வீடும் 1991இல் மிரிஹான பொலிஸ் பிரிவில் கட்டப்பட்டது. அரசாங்க உத்தியோகபூர்வ குடியிருப்புகள் இல்லாத நேரத்தில் மெதமுலனவில் இருந்து கொழும்புக்கு வந்து ஒரு வீட்டை வாங்கிய எங்கள் அண்ணன் மகிந்த, இன்று முன்னாள் ஜனாதிபதியாக தனது ஓய்வு நேரத்தைக் கழிக்க கொழும்பில் வீட்டுவசதிப் பிரச்சினை இருக்காது என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

https://tamilwin.com/

ஜனாதிபதி முறைமையில் பாரிய மாற்றம்! அநுரவுக்கு பின்னர் எவருக்கும் இடமில்லை

1 month 2 weeks ago

அரசியலமைப்பு மாற்றத்தில் சர்வாதிகார ஜனாதிபதி முறைமை(நிறைவேற்று அதிகாரம் கொண்ட) ஒழிக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறும் புதிய முறைமை உருவாக்கப்படும் என பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க கூறியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஐந்து வருடகால திட்டத்தில் குறித்த அரசியலமைப்பு மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் உரையாற்றிய அவர்,

தேர்தல் விஞ்ஞாபனம்

"எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்து விடயங்களையும் ஐந்து வருடங்களுக்குள் நிறைவேற்ற உள்ளோம்.

ஜனாதிபதி முறைமையில் பாரிய மாற்றம்! அநுரவுக்கு பின்னர் எவருக்கும் இடமில்லை | Major Change In The Presidential System

அதில் அரசியலமைப்பு மாற்றமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு மாற்றத்தில் சர்வாதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறும் புதிய முறைமை உருவாக்கப்படும்.

2029ஆம் ஆண்டுக்கு முன் புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும். ஜனாதிபதி அநுரவுக்கு பின்னர் ஜனாதிபதி யாரும் இருக்க மாட்டார்கள்.

நாங்கள் சமர்ப்பித்துள்ள சொத்து விபரங்கள் தொடர்பில் பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதற்கு முன்னர் இவ்வாறு நடந்துள்ளதா என நினைத்து பாருங்கள்.

இதை நேர்மறையாக நோக்குங்கள். ஒரு நாடு என்ற வகையில் சாதகமான விடயமாகும். நாங்கள் அரசியலுக்கு வரும் போது எவ்வளவு சொத்து இருந்தது. விட்டுச் செல்லும்போது எவ்வாறு என்று மக்கள் தெரிந்து கொள்ளலாம்.

இதற்கு முன்னர் இருந்த அரசியல்வாதிகள் வரும் போது இருந்த சொத்தின் மதிப்பும் பின்னரும் எவ்வாறு அதிகரித்தது என்பதில் எமக்கிடையில் ஒரு உரையாடல் மட்டுமே இருந்தது. நாங்கள் வெளிப்படை தன்மையுடன் செயற்படுகிறோம்” என குறிப்பிட்டுள்ளார். 

https://www.virakesari.lk/article/225321

ஐஸ் போதைப்பொருளுடன் தேரர்கள் இருவர் கைது!

1 month 2 weeks ago

17 Sep, 2025 | 03:53 PM

image

கண்டி, கெலிஓயா, பிட்டவலவத்த பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் தேரர்கள் இருவர் கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் திங்கட்கிழமை (15) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தேரர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

25 வயதுடைய தேரர்கள் இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட தேரர்கள் இருவரும் கண்டி பிரதான நீதவான் நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை (16) ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்களை பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/225321

வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத மணல் அகழ்வு - நடவடிக்கை எடுக்காத பொலிஸார்!

1 month 2 weeks ago

17 Sep, 2025 | 06:14 PM

image

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு தாளையடியில் அமைந்துள்ள கடல் நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலைய வளாகத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

சட்டவிரோத மணல் அகழ்வினை மேற்கொண்டு வரும் கும்பலொன்று தினமும் பல டிப்பர்களில் மண்ணை செம்பியன் பற்று தாளையடி கடற்கரை வீதி வழியாக ஏற்றிச்சென்று விற்பனையில் ஈடுபடுகிறது.

இது தொடர்பாக பல ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த மணல் அகழப்படும் பிரதேசத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மருதங்கேணி பொலிஸ் நிலையம் அமைந்துள்ளது. ஆனாலும் மணல் அகழ்வு விடயத்தில் இதுவரை எந்த சந்தேக நபரும் கைது செய்யப்படவில்லை.

தொடர்ச்சியாக இடம்பெறும் மணல் அகழ்வால் வடமராட்சி கிழக்கின் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது மட்டுமன்றி, மக்கள் குடியிருக்க முடியாதளவுக்கு கடல் நீர் உட்புகக்கூடிய நிலைமையும் தோன்றியுள்ளது.

1000807226.jpg

1000807225.jpg

1000807223.jpg

1000807224.jpg

https://www.virakesari.lk/article/225316

பிரதமர் மோடியின் 75ஆவது ஜனன தினம்; கீரிமலையில் விசேட பூசை வழிபாடுகள்!

1 month 2 weeks ago

பிரதமர் மோடியின் 75ஆவது ஜனன தினம்; கீரிமலையில் விசேட பூசை வழிபாடுகள்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 75 ஆவது ஜனன தினத்தினை முன்னிட்டு இன்று (17) காலை யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் நகுலேஸ்வர பெருமானுக்கு விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றதோடு சகஷ்டலிங்க விசேட அபிசேக பூஜை வழிபாடுகளும் நடைபெற்றன. 

யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் ஆதின பிரதம குரு நகுலேஸ்வர குருக்கள் சிறிரங்கநாதக் குருக்கள் தலைமையில் நடைபெற்ற பூசை வழிபாடுகளில் ஆலயத்தொண்டர்கள் பக்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2015 ஆம் ஆண்டு இலங்கை விஐயத்தின் போது யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் சந்நிதானத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடியின் 75ஆவது ஜனன தினம்; கீரிமலையில் விசேட பூசை வழிபாடுகள்!

தண்டிக்கப்படாத இலங்கையின் கடந்தகால மீறல்கள் காஸாவில் நிகழும் இன்றைய மீறல்களுக்கான முன்னோடி - மனித உரிமைகள் கண்காணிப்பகம்

1 month 2 weeks ago

17 Sep, 2025 | 06:17 PM

image

(நா.தனுஜா)

இலங்கையில் 16 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்து, இன்னமும் தண்டிக்கப்படாமல் உள்ள இச்சம்பவங்கள், இன்றளவிலே காஸாவில் நிகழ்த்தப்படும் மீறல்களுக்கும், அங்கு பிரயோகிக்கப்படும் உத்திகளுக்குமான முன்னோடியாக உள்ளன.

இத்தகைய பின்னணியில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம் இன்றியமையாததாகும். அது இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு மாத்திரமன்றி, உலகெங்கிலும் தொடரும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை சவாலுக்கு உட்படுத்துவதற்கு மிக அவசியம் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப்பிராந்திய பிரதிப்பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவரால் எழுதப்பட்டிருக்கும் கட்டுரையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

உலகளாவிய ரீதியில் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய பல அட்டூழியங்கள் குறித்த ஞாபகங்கள், சில வருடங்களில் வேறு புதிய மீறல் சம்பவங்களால் மாற்றி எழுதப்படும். ஆனால் மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் அதனால் ஏற்பட்ட துயரம் என்பது முடிவற்றதாகும். தீர்வளிக்கப்படாத குற்றங்கள் அதனையொத்த எதிர்கால மீறல்களுக்கான முன்மாதிரியாகத் திகழ்கின்றன.

இலங்கை அரசாங்கத்தினால் 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டது. அதன்விளைவாக ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஐக்கிய நாடுகள் சபையினால் கண்டறியப்பட்டதன் பிரகாரம் அப்போரில் ஈடுபட்ட இருதரப்பினராலும் சட்டங்களுக்குப் புறம்பான விதத்தில் மனிதகுலத்துக்கு எதிராக மிகமோசமான குற்றங்கள் இழைக்கப்பட்டன. இருப்பினும் அவை இன்றளவிலே இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் சிலரால் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த காலங்களில் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களுக்கான எந்தவொரு எதிர்விளைவும் இல்லாததன் காரணமாக இது சாத்தியமாகியிருக்கின்றது.  

இலங்கையில் இதுவரை ஆட்சிபீடமேறிய அரசாங்கங்கள் சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்துவதாக வாக்குறுதியளித்துவிட்டு, அதிலிருந்து விலகிச் செயற்பட்டுவந்திருப்பதன் மூலம், எதனைச் செய்தாலும் பின்விளைவுகளின்றி மீண்டுவிடலாம் என்பதைக் காண்பித்துவந்திருக்கின்றன. ஆகையினாலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை பொறுப்புக்கூறலைத் தொடர்ந்து வலியுறுத்துவதுடன் இலங்கையினால் நிகழ்த்தப்பட்ட சர்வதேசக் குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டுவதற்குரிய ஆணையை இம்மாதம் ஜெனிவாவில் நடைபெற்றுவரும் 60 ஆவது கூட்டத்தொடரில் மீளப்புதுப்பிக்கவேண்டும்.

இலங்கையில் சுமார் 26 வருடகாலமாக நீடித்த உள்நாட்டுப்போரின்போது பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், சட்டவிரோத படுகொலைகள், வலிந்து காணாமலாக்கப்படல்கள் என்பன உள்ளடங்கலாக இருதரப்பினராலும் மிகமோசமான மீறல் குற்றங்கள் இழைக்கப்பட்டன. இறுதிக்கட்டப்போர் இடம்பெற்ற சில மாதங்களில் எஞ்சியிருந்த விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களும், தமிழ் பொதுமக்களும் இலங்கை இராணுவத்தினால் மிகக்குறுகிய பகுதிக்குள் சுற்றிவளைக்கப்பட்டனர்.

விடுதலைப்புலிகள் பொதுமக்களை மனிதக்கேடயங்களாகப் பயன்படுத்திய அதேவேளை, இலங்கை இராணுவம் மனிதாபிமான உதவிகள் உட்செல்வதைத் தடுத்ததுடன் குறித்த சில பகுதிகள்மீது வான் மற்றும் ஆட்டிலறி தாக்குதல்களை நடாத்துவதற்கு முன்னர் அவற்றை 'யுத்த சூனிய வலயங்களாக' அறிவித்தன. மருத்துவ சேவை வழங்கல்கள் தொடர்ந்து இலக்குவைக்கப்பட்டன. இலங்கையில் 16 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்து, இன்னமும் தண்டிக்கப்படாமல் உள்ள இச்சம்பவங்கள், இன்றளவிலே காஸாவில் நிகழ்த்தப்படும் மீறல்களுக்கும், அங்கு பிரயோகிக்கப்படும் உத்திகளுக்குமான முன்னோடியாக உள்ளன.

ஜே.வி.பி எழுச்சி மற்றும் விடுதலைப்புலிகள் இயக்கத்துடனான யுத்தம் என்பவற்றுடன் தொடர்புபட்ட விதத்தில் நாடளாவிய ரீதியில் இதுவரை சுமார் 20 மனிதப்புதைகுழிகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் வேறு பணிகளின்போது தற்செயலாகவே கண்டறியப்பட்டன. அண்மையில் அடையாளம் காணப்பட்ட செம்மணி மனிதப்புதைகுழியில் 1990 களில் இராணுவக்காவலின்கீழ் கொல்லப்பட்டிருக்கக்கூடும் என நம்பப்படும் 200 க்கும் மேற்பட்டோரின் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இருப்பினும் போதிய தொழில்நுட்ப வசதிகள் இன்மை மற்றும் அரசியல் தன்முனைப்பு இன்மை போன்ற காரணங்களால் இதுவரையில் இலங்கையில் எந்தவொரு மனிதப்புதைகுழி தொடர்பிலும் விசாரணைகள் வெற்றிகரமான முறையில் முன்னெடுக்கப்படவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம் இன்றியமையாததாகும். அது இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு மாத்திரமன்றி, உலகெங்கிலும் தொடரும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை சவாலுக்கு உட்படுத்துவதற்கு அவசியமாகும் என வலியுறுத்தியுள்ளார். 

தண்டிக்கப்படாத இலங்கையின் கடந்தகால மீறல்கள் காஸாவில் நிகழும் இன்றைய மீறல்களுக்கான முன்னோடி - மனித உரிமைகள் கண்காணிப்பகம் | Virakesari.lk

கறுப்பு இராச்சியமாக செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள குழுக்களை முழுமையாக இல்லாதொழிப்பேன் - ஜனாதிபதி

1 month 2 weeks ago

17 Sep, 2025 | 06:19 PM

image

(இராஜதுரை ஹஷான்)

கறுப்பு இராச்சியமாக செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள குழுக்களை முழுமையாக இல்லாதொழிப்பேன். இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு கடுமையாக தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது.இலஞ்ச ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் அரச நிர்வாகத்தில் ஒருசிலர் பழைய பழக்கத்திலேயே இன்றும் உள்ளார்கள்.பழைய பழக்கத்தை திருத்திக் கொள்ள வேண்டும் இல்லையேல் அவர்கள் பதவி நீக்கப்படுவார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

கடவத்த –மீரிகம மத்திய அதிவேக நெடுஞ்சாலை அபிவிருத்தி பணிகளை புதன்கிழமை (17)ஆரம்பித்து வைத்ததன் பின்னர் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றியாற்றியதாவது,

இரண்டாண்டுகளுக்கு முன்னர் நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக வீழ்ச்சிடைந்தது. பொருளாதார பாதிப்பினால் ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது.பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடையும் நாடு ஒரு தசாப்த காலத்தை இழக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுவார்கள்.பொருளாதார நெருக்கடிக்கு குறுகிய காலத்தில் தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

பொருளாதார வீழ்ச்சியினால் பல அபிவிருத்தி பணிகள் இடைநிறுத்தப்பட்டன.கடவத்த –மீரிகம அதிவேக நெடுஞ்சாலையின் அபிவிருத்தி பணிகள் அவ்வாறே இடைநிறுத்தப்பட்டது.இதனால் பல நெருக்கடிகள் சமூக கட்டமைப்பிலும், பொருளாதார கட்டமைப்பிலும் ஏற்பட்டன.

கடந்த ஜனவரி மாதம் சீனாவுக்கு உத்தியோகபூர்வ அரசமுறை விஜயத்தை மேற்கொண்டிருந்த போது சீன முதலீட்டுடன் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு, பொருளாதார பாதிப்பினால் இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி கருத்திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்குமாறு சீன ஜனாதிபதியிடம் வலியுறுத்தினேன்.எமது வலியுறுத்தலுக்கு மதிப்பளித்து அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதியுதவியளிக்க சீன ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.ஆகவே இலங்கை மக்கள் சார்பில் சீன ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். டொலர் அலகில் அல்லாமல் யுவான் அலகில் கடன் வழங்கவும், 2.5 -3.5 சதவீத வட்டி அடிப்படையில் கடன் வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்குரிய நடவடிக்கைகள் குறித்து விசேட கவனம் செலுத்தும் போது பொருளாதார நெருக்கடி எவ்வாறு தோற்றம் பெற்றது என்பது குறித்தும் ஆராய வேண்டும்.2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியின் பொருளாதார நெருக்கடி மற்றும் அதனால் ஏற்பட்ட சமூகமட்ட பாதிப்புக்கள் இயற்கையாகவே தோற்றம் பெற்றதல்ல,

பொருளாதார நெருக்கடியுடன் தொடர்புடைய பல காரணிகள் உள்ளன.பொருளாதார நெருக்கடியின் உரிமையாளர்களாகவே ஒட்டுமொத்த மக்களும் உள்ளார்கள்.இலங்கையில் மீண்டும் அவ்வாறானதொரு நிலை ஏற்படாது என்பதை மக்களுக்கு உறுதியாக குறிப்பிட்டுக்கொள்கிறேன்.

பொருளாதார மீட்சிக்குரிய சகல திட்டங்களையும் சிறந்த முறையில் செயற்படுத்த வேண்டும்.நாட்டில் சட்டவாட்சியை உறுதியாக செயற்படுத்தினால் பொருளாதார மீட்சிக்குரிய திட்டங்களை சிறந்த முறையில் செயற்படுத்தலாம்.நாட்டில் கடந்த காலங்களில் பெரிய மீன்கள் தப்பித்துக் கொள்வதும் நெத்தலி மீன்கள் அகப்பட்டுக்கொள்ளும் சட்டமே இருந்தது.இந்நிலைமை இன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற எண்ணக்கருவுக்கு உயிர்கொடுத்துள்ளோம்.ஆகவே எவரும் எதிர்பார்க்காத இடங்களில் சட்டம் சென்றுள்ளது.சட்டத்துக்கு மேற்பட்டவர்களாக இருந்தவர்கள் பலர் இன்று சட்டத்துக்குள் உட்பட்டுள்ளார்கள்.

ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள குழுக்களின் செயற்பாடு ஆயுதமேந்திய குழுக்களாகவும்,கறுப்பு இராச்சியமாகவும் காணப்படுகிறது.அதிகாரமிக்க இராணுவத்தினரால் பாதாள குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன.அவர்களின் போதைப்பொருட்களை பொலிஸார் விநியோகித்துள்ளார்கள்.பாதாள குழுக்களுக்கு அரசியல்வாதிகளும்,அரச அதிகாரிகளும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள்.இதன் விளைவே இன்று பாரிய நெருக்கடியாக தோற்றம் பெற்றுள்ளது.

கறுப்பு இராச்சியமாக செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள குழுக்களை முழுமையாக இல்லாதொழிப்பேன். இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு கடுமையாக தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது.

நாட்டில் புற்றுநோய் போன்று காணப்படும் இலஞ்சம் மற்றும் ஊழல் நாட்டின் அபிவிருத்திக்கு பாரியதொரு தடையாக உள்ளது.கடந்த கால ஊழல் மோசடிகள் முறையாக விசாரிக்கப்படுகிறது. உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஊழல் மோசடியற்ற அரச நிர்வாகத்தை ஸ்தாபித்துள்ளேன்.இருப்பினும் ஒருசிலர் இன்றும் பழைய பழக்கத்தில் உள்ளார்கள்.

ஒன்று பழைய பழக்கத்தை திருத்திக் கொள்ள வேண்டும்.இல்லையேல் சேவையில் இருந்து விலக வேண்டும்.இல்லாவிடின் நாங்கள் அவர்களை பதவி விலக்குவோம்.இலஞ்சம் மற்றும் ஊழல் மோடியற்ற கலாசாரத்தை உருவாக்க அரச அதிகாரிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.சட்டத்துக்கு அமைய செயற்படுங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன் என்றார்.

கறுப்பு இராச்சியமாக செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள குழுக்களை முழுமையாக இல்லாதொழிப்பேன் - ஜனாதிபதி | Virakesari.lk

Checked
Sun, 11/02/2025 - 20:38
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr