3 months ago
நானும் புதுவருடம் பிறந்த அன்று பார்த்தேன். மிகவும் சவாலான சூழலிலும் மனிதர் தம்மைக் காத்துக்கொள்ள போராடுவர் என்பதும் நண்பர்களுக்காக எதையும் செய்யும் குணம் உள்ளவர்கள் என்பதும் தத்ரூபமாகக் காட்டப்ப்டிருந்தது.
60 நாள்வரை தாக்குப்பிடித்த நூமா இறந்தது கொடிய தருணம். நரமாமிசம் உண்ணமாட்டேன் என்று இறுதிவரை இருந்தார். முன்னர் ஏற்பட்ட காயத்தின் தொற்றினால் இறந்தார். அவரின் இறப்பு எஞ்சியோருக்கு மேலும் ஓர்மத்தைக் கொடுத்து இருவர் பத்து நாட்கள் மிகவும் சவாலான பனிமலையைக் கடந்து, 60 km க்கு மேல் உறைபனிக்குள் நடந்து சிலி நாட்டுக்குள் மனிதர்களை ஓர் ஆருக்கு எதிர்ப்பக்கம் சந்திக்கின்றார்கள். அது எஞ்சியோரை மீட்க உதவுகின்றது.
கட்டாயம் பார்க்கவேண்டிய ஒரு படம்.
3 months ago
3 months ago
இவரும் சிரிக்கிறார் (இணையவன் சிரித்து பார்த்ததில்லை 😂)
இவருடன் சேர்ந்து இன்னும் இருவர் சிரிக்கிறார்கள். நாம் என்ன பண்ணும்? 😅
3 months ago
தமிழ் மக்களின் கவனத்தை பெறாத தமிழரசுக்கட்சியின் தேர்தல் | அரசியல் களம் | ஆய்வாளர் அருஸ் | இலக்கு
3 months ago
இத்தகவலை நான் 10/07/1990 அன்று விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியினால் மாகாணசபையை நிராகரித்து பிரமதாசாவிற்கு விடுக்கப்பட்ட அலுவல்சார் அறிக்கையில் இருந்தே எடுத்தேன்.
இவ்வறிக்கையானது 11/07/1990 அன்று வெளியான உதயன் மற்றும் ஈழநாதம் (https://noolaham.net/project/229/22830/22830.pdf) நாளேடுகளில் உள்ளது. இவ்வறிக்கையின் இறுதியில் தான் இம்முன்மொழிவு உள்ளது.
நான் அரத்தின சுருக்கமாக எழுதியிருந்த "சுயநிர்ணயத்துடன் கூடிய தன்னாட்சியை" என்பதன் முழு விரிப்பு: "தமிழீழ மக்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்து, முழுமையான அரசியல் அதிகாரங்கள் உடைய மாநில தன்னாட்சி"
விடுதலைப் புலிகள் இவ்வாறான திட்டம் ஒன்றை சிங்கள அரசு தமிழருக்கு வழங்குமானால் தாம் அதை பரிசீலிக்கத் தயார் என்று அறிவித்திருந்தனர்.
அதாவது தாமே ஒரு அதிகாரம் தொடர்பான சுருக்கமான திட்ட முன்மொழிவை முன்மொழிந்து அதே போன்ற அல்லது கூடிய ஒன்றை எமக்கு சிங்களம் வழங்கினால் தாம் (தமிழர் தரப்பு) அதை பரிசீலிக்கத் தயார் என்று கூறியிருந்தார்கள். அதையே நானும் முன்மொழிந்தார்கள் என்று கூறியிருந்தேன். இதை முழுமையான வரைபாக வழங்கினார்கள் என்று நான் எங்கும் கூறவில்லை. 2003 இல் தான் ஒரு முழுமையான முன்மொழிவிற்கான வரைபை சமர்ப்பித்தனர்.
இந்த முன்மொழிவை விட மேம்பட்டது தான் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை. மாநில தன்னாட்சியை விட இ.த.அ.ச. மேம்பட்டதே!
3 months ago
நாம் குறுகிய காலம் பாவித்துவிட்டு மாற்றும் கைத்தொலைபேசிகள் ஆபிரிக்காவில் மனிதர்கள் வெறும் ஒருசில டொலர்கள் சம்பளத்தில் இரத்தம் சிந்தி உயிரைக் கொடுத்துச் சுரங்கங்களிலிருந்து எடுத்துத் தரும் கனிமப் பொருட்களைக் கொண்டுள்ளன.
நான் தற்போது பாவிக்கும் iPhone 6s 2016 ஜனவரியில் மகளுக்கு வாங்கியது. 2020 மீள்மெருகேற்றப்பட்ட iPhone X ஒன்றை வாங்கிக் கொடுத்துவிட்டு iPhone 6s இனை எனதாக்கிக் கொண்டேன். இதன் பற்றியை மட்டும் மாற்றினேன். இது பாவிக்க முடியாமல் போகும் போது மகளின் iPhone X இனை நான் எடுத்துக் கொள்வேன்.
பொதுவாக அப்பிள் மென்பொருள் மீள் பதிவுகளை (system security update) 7 வருடங்களுக்கு மேல் செய்துகொள்ள முடியும். Google Pixel தவிர்ந்த ஏனைய Android கைத் தொலைபேசிகளில் பொதுவாக 4 வருடங்களே இதன் ஆயுட்காலம்.
நான் 25 வருடங்களாகப் பாவிக்கும் கணணிகளும் அப்பிள்தான். வீட்டில் நான் பாவித்த iMac (ஏற்கனவே பாவித்த ஒருவரிடமிருந்து 2011 இல் வாங்கியது) தற்போது எனது மாமனார் ytube பார்ப்பதற்காகப் பாவிக்கிறார். 2013 இல் வாங்கிய iMac 21 தற்போது பாவிக்கிறேன். இதன் Disk வேகம் முறைந்தது என்பதாலும் வேலையில் மடிக்கணணி தந்துள்ளதாலும் இதனைப் பாவிப்பது இப்போது மிகக் குறைவு. அப்பிள் பொருட்கள் விலை அதிகமானாலும் அவற்றைப் பாவிக்கும் காலம் அதிகமானதாலும் பழுதுகள் வருவது முறைவு என்பதாலும் தொடர்ந்து அவற்றையே பாவிக்கிறேன்.
3 months ago
3 months ago
உங்கள் நாட்டில் சுதந்திரமாக வாழ முடியும் என்று யாரோ தவறான தகவல் தந்துள்ளனர். ஜனநாயகம் இல்லாத மேற்கு நாடுலளில் எவ்வாறு மனிதர்கள் சுதந்திரமாக வாழ முடியும் ? போலி ஜனநாயகம், நீதி நியாயமற்ற வெளிநாட்டுக் கொள்கை, உண்மைத் தகவல்களை மூடி மறைத்துத் தங்களுக்குத் தேவையானபடி செய்திகளைப் பரப்பி மக்களை முட்டாளாக்குதல், ஆயுத வியாபாரத்துக்காக உலகில் போர்களைத் தூண்டுதல் போன்ற இன்னும் எண்ணற்ற அராஜகங்கள் செய்யும் மேற்கு நாடுகளில் நிற்கும் ஒவ்வொரு வினாடியும் உங்கள் கால்கள் கூச வேண்டும். 🤣
அதுமட்டுமல்ல, உணவு முழுவது மருந்து கலப்பவர்கள், அநாவசியமான மருந்துகளைச் சாதாரண வியாதிகளுக்குத் தருபவர்கள், மருந்து விற்பதற்காகவே வியாதிகளை உருவாக்குபவர்கள் என்று உங்களைச் சுற்றி ஏராளமான சதிகள் நடந்துகொண்டிருக்கும் மேற்கு நாட்டில் மனிதன் எவ்வாறு சுதந்திரமாக வாழ முடியும் ? 🤣
3 months ago
நீங்கள் கூறியது தகவல் தவறு மட்டுமல்ல, ஒட்டு மொத்தமாக இடைக்கால நிர்வாக அலகு சமர்பிக்கப்பட்ட காரணத்தைக்கூட உங்கள் சுய இன்பத்துக்கக வசதிகேற்ப மாற்றும் முயற்சி.
2003 ஒக்ரோபரில் இடைக்கால நிர்வாக அலகு வரைபு சமர்பிக்கப்பட்டது. சுனாமி நடந்தது 2004 டிசம்பரில். இதை யாரும் உறுதிப்படுத்தவேண்டிய அவசியம் இல்லை. அல்பேர்ட் அயன்ஸ்ரைனின் பொது சார்பியல் கோட்பாட்டின்படி ரைம் ரவல்ஸ் செய்தாலும் நடந்த உண்மை தேதிகளை உங்கள் வசதிக்காக மாற்ற முடியாது. அது என்னாலும் முடியாது.
நான் கூறியது நடந்த உண்மைகள் மட்டுமே. உண்மைகள் உங்களுக்கு கசந்தால் அதற்கு என்னால் ஒன்றும் செய்ய முடியாது.
3 months ago
தகவல்கள் தவறு என்றால் அல்லது திகதிகளில் தவறு இருந்தால் திருத்துங்கள். அதை என்றும் வரவேற்பேன்.
சுனாமியை தொடர்ந்து கேட்கப்பட்டது தான் இடைக்கால நிர்வாக அலகு. மற்றவர்களும் இதனை உறுதிப்படுத்தட்டும்.
ஆனால் அதையே வைத்து உங்கள் சொந்த சுய இன்பங்களை இங்கே திணித்து மகிழ்வதை மட்டுமே எதிர்க்கிறேன் எதிர்ப்பேன்.
இனி உங்களிடம் பேச எதுவும் இல்லை. முடிந்தால் மற்றவர்கள் பேசட்டும்.
3 months ago
நன்றி ISLAND.
தற்போது(தான்) இந்தத் திரி சற்று ஆக்கபூர்வமான பக்கத்திற்கு நகர்கிறதுபோலத் தெரிகிறது.
3 months ago
கருத்துக்கு நன்றி.
வரலாற்றில் நடந்த சம்பவங்களையே மட்டுமே நான் இங்கு தெரிவித்தேன். வரலாற்று சம்பவங்களை சிலர் மாற்ற தவறான தகவல்களை சொல்ல முற்படுகையில் அதை கூறும் போது போராட்ட வரலாற்றில் இருந்த விடுதலைப்புலிகளைப் பற்றி கூறாமல் தவிர்க்க முடியாது. உதாரணமாக விடுதலைப்புலிகள் 1990 ல் இருந்து பல வேறு அரசங்களுடன் பேசிய போதிலும் எந்த முன்மொழிவுகளையும் மேற்கொள்ள வில்லை. 2003 ஒகரோபர் மாதத்தில் அவர்கள் தயாரித்த வரைபே அவர்களால் முதன் முதலாக சமர்ப்பிக்கப்பட்ட வரைபு என்ற உண்மை அன்று பத்திரிகைகளில் கூட வந்திருந்தது. இந்நிலையில் 1990 ல் பிரேமதாசாவிடம் முன் மொழிந்ததை விட மேம்பட்ட ஒன்றையே 2003 ல் முன்மொழிந்ததாக இங்கு தவறான தகவல் தெரிவிக்கப்பட்டது. பிரேமதாசா அரசுடனோ சந்திரிக்கா அரசுடனோ அவர்கள் பேச்சு நடத்தினார்களே தவிர எந்த முன் மொழிவையும் அன்று முன் வைத்திருக்கவில்லை என்பது தான் உண்மை.
3 months ago
இதற்கான பதில் கீழே நன்னிச் சோழனின் எழுத்தில் உள்ளது 👇
3 months ago
விபு க்களை இங்கே கொண்டுவருவதை முடிந்த அளவு தவிர்க்கலாம். அது தேவையற்ற விமர்சனங்களுக்கும் குழப்பங்களுக்கும் வழிவகுக்கலாம் என்பது என் கருத்து.
3 months ago
புத்திஜீவிகளும் புலிகள் இயக்கமும்
நிர்மலா தன்னுடன் சேர்ந்து பணியாற்றப்போகிறார் என்று பிரபாகரன் கூறியபோது அடேல் பாலசிங்கம் மகிழ்ச்சியடைந்தார். விடுதலை வேட்கை எனும் புத்தகத்தில் எழுதிய அடேல், ஆங்கிலம் பேசத் தெரிந்த, பெண்ணியம் சார்ந்த அறிவுஜீவி ஒருவர் தன்னுடன் பணிபுரியப்போவதாக அறிந்தபோது மிக்க மகிழ்ச்சியடைந்தேன் என்று எழுதுகிறார். நிர்மலாவை புலிகளின் பெண்போராளிகளின் அணிக்குத் தலைவராக நியமிக்கலாமே என்று அடேல் பிரபாகரனிடம் வினவியிருக்கிறார். ஆனால், அடேலின் ஆலோசனையினை பிரபாகரன் ஏற்கவில்லை. நிர்மலாவைப் பொறுத்தவரை பெண்விடுதலை என்பது மேற்கத்தைய சமூகத்தினை அடிப்படையாகக் கொண்டது என்றும், தமிழீழப் பெண்களின் விடுதலை தொடர்பான தனித்தன்மையினை நிர்மலாவின் கொள்கைகள் எடுத்தியம்பவில்லை என்றும் பிரபாகரன் கூறியிருக்கிறார். தமிழீழப் பெண்களின் விடுதலை எனும் கருதுகோள் மேற்கத்தைய பாணியிலும் இருந்து வேறுபட்டது என்று அவர் கூறினார். தமிழீழப் பெண்கள் தம்மை சமூகத்தின் முக்கிய பாத்திரமாக அடையாளப்படுத்தி, அதனை தம்முள் உணர்ந்துகொள்ளும் விதமாக தமிழீழப் பெண்களின் விடுதலை அமையவேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
தனது புத்தகத்தில் தொடர்ந்து எழுதும் அடேல் பிரபாகரன் கூறியது சரியானது என்பதை தான் உணர்ந்துகொண்டதாக எழுதுகிறார். "நிர்மலாவின் அதிதீவிர பெண்விடுதலைக் கொள்கைகளை எம்முடன் இருந்த பெண்போராளிகள் புரிந்துகொள்ளச் சிரமப்பட்டனர். தமது தாயகத்தின் விடுதலைக்காகப் போராட வந்திருந்த பெண்களுக்கும் நிர்மலா அமைத்துக்கொள்ள முயன்ற பெண்விடுதலைக்கும் இடையே பாரிய வேறுபாடு இருப்பதை அறிந்துகொண்டேன். அப்பெண்களைப் பொறுத்தவரை நிர்மலாவின் பெண்விடுதலை தொடர்பான புரிதலோ அல்லது அதற்கான அவசியமோ இருந்ததாக நான் கருதவில்லை" என்று அடேல் எழுதுகிறார்.
அடேலின் வேண்டுகோலினை பிரபாகரன் நிராகரித்தமைக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. பிரபாகரனைப் பொறுத்தவரை அறிவுஜீவிகள் ஆயுதப் போராட்டத்தின் அங்கமாக தம்மை இணைத்துக்கொள்வது சாத்தியமற்றது என்று நம்பினார். ஏனென்றால், அவர்கள் தம்மைப் பற்றியே மட்டும் சிந்திக்கும் தன்மை கொண்டவர்கள். அனைத்தும் தமக்குத் தெரியும் என்கிற மனோநிலையில் வாழ்பவர்கள். தனித்துச் சுதந்திரமாக இயங்கவேண்டும் என்று எண்ணுபவர்கள். கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது என்பது அவர்களால் முடியாத காரியம். விவாதிப்பதிலும், தலைமைக்கெதிராகப் புரட்சி செய்வதிலும் காலத்தைச் செலவிடுபவர்கள். தமது கருத்துக்களால் தம்மைச் சுற்றியிருப்போர் தமது பணிகளைப் புரிய இடைஞ்சலாக இருப்பவர்கள். இப்படியானவர்கள் அனுதாபிகளாகவும், ஆதரவாளர்களாகவும் இருக்கலாமேயன்றி, ஒருபோது ஆயுதப் போராட்ட அமைப்பிற்குள் நேரடியாக பங்களிப்புச் செய்ய முடியாதவர்கள் என்று பிரபாகரன் நம்பினார்.
புத்திஜீவிகளும், இடைநடுவில் போராட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டவர்களும் போரிடும் அணிகளுக்குள் இணைத்துக்கொள்ளப்படமுடியாதவர்கள் என்று பிரபாகரன் நம்பினார். இராணுவ அணிகளுக்கு வெளியிலேயே அவர்களுக்கான பணிகள் கொடுக்கப்படவேண்டும் என்று அவர் விரும்பினார். ஆகவேதான் நித்தியானந்தன் விடுதலைப் புலிகள் சஞ்சிகையின் ஆசிரியராக பிரபாகரனால் நியமிக்கப்பட்டார். அவர் எழுதும் ஆக்கங்களை பேபி சுப்பிரமணியத்திடம் காண்பித்து அவரின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்று அவர் கேட்கப்பட்டார். இதனை ஏற்றுக்கொள்ளாத நித்தியானந்தன் தனது மனைவியான நிர்மலாவையும் கூட்டிக்கொண்டு 1984 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறினார். கிராமப்புறங்களில் இருந்து போராட வந்திருந்த பெண்களுடன் தன்னால் பணியாற்ற முடியாது என்று நிர்மலா சொல்லியிருந்தார். இப்பெண்கள் பற்றிக் கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைக்கத் தொடங்கினார்.
தனது நிலைப்பாட்டில் உறுதியாகவிருந்த பிரபாகரன் ஈரோஸ் அமைப்பினைக் கலைத்துவிட்டு அதன் தலைவர் பாலகுமாரும்,உதவித்தலைவர் பரா எனப்படும் பரராஜசிங்கமும் புலிகள் இயக்கத்திடம் வந்தபோது அவர்களை இராணுவ அணிகளுக்குள் உள்வாங்கவில்லை. அவர்களுக்கு பொது நிர்வாகச் சேவைகளிலேயே பணியாற்ற வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. திட்டமிடல்த் துறைக்குப்பொறுப்பாக பாலகுமாரும் நீதித்துறைக்குப் பொறுப்பாக பராவும் நியமிக்கப்பட்டனர்.
புலிகள் தமது நடவடிக்கைகளில் புதிய கட்டத்தை அடைந்துவிட்டார்கள் என்பதனை மட்டக்களப்புச் சிறைச்சாலையின் இரண்டாவது உடைப்புக் காட்டியது. இது நடைபெற்று ஐந்துநாட்களுக்குப் பின்னர், காரைநகர் கடற்படை முகாமுக்கு விஜயம் செய்துவிட்டு கொழும்பு திரும்புவதற்காக கடற்படைத் தளபதி பாவித்த சீபிளேன் ரக விமானத்தை அவர்கள் எரியூட்டினார்கள். காரைநகரிலிருந்து புறப்பட்டு சில நிமிடங்களிலேயே இயந்திரக் கோளாறு காரணமாக விமானியால் பருத்தியடைப்புப் பகுதியில் திடீரென்று விமானம் தரையிறக்கப்பட்டது. காரைநகர் முகாமிலிருந்து 8 கிலோமீட்டர்கள் தூரத்தில் விமானம் தரையிறங்கியிருக்க, கடற்படைத் தளபதி முகாமிற்கு நடந்துசெல்ல, நான்கு கடற்படை வீரர்கள் விமானத்திற்குக் காவல்காத்து நின்றனர். அப்பகுதிக்கு வந்த புலிகள் காவலுக்கு நின்ற கடற்படை வீரர்களைத் துரத்திவிட்டு விமானத்திற்குத் தீமூட்டிச் சென்றனர்.
அதேநாள் இரு ஈ.பி.ஆர்.எல்.எப் போராளிகள் துணிகரமான நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டார்கள். வீதியால் சென்ற பாரவூர்தியொன்றினை ஆயுதமுனையில் கடத்திச் சென்று, நேரே வந்துகொண்டிருந்த பொலீஸ் வாகனம் ஒன்றுடன் மோதி அதில் பயணம் செய்த உதவிப் பொலீஸ் பரிசோதகர் ஒருவரையும் மூன்று கொன்ஸ்டபிள்களையும் காயப்படுத்தினர். இரு நாட்களுக்குப் பின்னர் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த வீதி வரைபடங்களை நான்கு ஆயுதம் தரித்த இளைஞர்கள் எடுத்துச் சென்றனர்.
தேசியப் பந்தோபஸ்த்து அமைச்சரான லலித் அதுலத் முதலியைக் கொல்லும் முயற்சியுடன் ஆனி மாதம் முடிவிற்கு வந்தது. காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பாதுகாப்பு ஊழியராகக் கடமையாற்றும் அதிகாரியொருவர் மறைத்துவைக்கப்பட்டிருந்த பாரிய குண்டைக் கண்டுபிடித்தார். ஏழாவது மாடியில் அமைந்திருக்கும் அலுவலகத்திற்கு பந்தோபஸ்த்து அமைச்சர் வரவிருந்த வேளையில் இறுதிநேர பாதுகாப்புச் சோதனைகளில் ஈடுபட்ட ஊழியரே இக்குண்டைக் கண்டுபிடித்தார். ஐந்தாவது மாடிக்கும் ஆறாவது மாடிக்கும் இடையில் இருந்த சேமிப்பு அறையிலேயே இக்குண்டு மறைத்துவைக்கப்பட்டிருந்தது. குண்டைக் கண்டுபிடித்தபின்னர், அதனை வெடிக்கவைக்கும் அழுத்தியை அகற்றியெடுத்து, தனது மேலதிகாரியிடம் கொண்டுசென்று காண்பித்தார் அவர்.
பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ராஜாங்க அமைச்சின் செயலாளர், "அதிஷ்ட்டவசமாக அது சரியான நேரத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இலங்கையில் இதுவரையில் கண்டெடுக்கப்பட்ட பாரிய குண்டு இதுதான். இதற்குள் 45 ஜெலிக்னைட் குச்சிகள் அடுக்கப்பட்டிருந்தன. இக்குண்டு வெடித்திருந்தால் 14 மாடிகள் கொண்ட இக்கட்டிடம் முற்றாக இடிந்து வீழ்ந்திருக்கும்" என்று கூறினார்.
மேலும், "இக்குண்டு லலித்தின் அலுவலகத்திற்கு நேர் கீழே பொறுத்தப்பட்டிருக்கிறது. லலித் ஏழாவது மற்றும் எட்டாவது மாடிகளையே அதிகம் பயன்படுத்துவார்" என்றும் அவர் கூறினார்.
ஆடி மாதம் முழுவதிலும் சிறு சிறு தாக்குதல்ச் சம்பவங்கள் இடம்பெற்றன. இவற்றுடன் சுற்றிவளைப்புக்களும், சமூக விரோதிகளுக்கான தண்டனைகளும் வழங்கப்பட்டன. இம்மாதத்தில் ஒரேயொரு இராணுவ வீரர் மட்டுமே கொல்லப்பட்டிருந்தார். பூநகரிப் பகுதியில் காட்டிற்குள் விறகெடுக்கச் சென்றவேளை கட்டுத் துப்பாக்கி ஒன்றில் அகப்பட்டு அவர் கொல்லப்பட்டார்.
3 months ago
3 months ago
தகவலுக்கு நன்றி @நிழலி
3 months ago
உதிரத்தை உறைய வைக்கும் உதிரம் .......நன்றாக எடுத்திருக்கிறார்கள்......! 😴
3 months ago
அநுர இப்போ தான் கோமாவில் இருந்து எழும்பி உள்ளார்.
3 months ago
வரலாறை மாற்றி பொய்யுரைக்கலாம் என்று எண்ணுவது தாங்கள் தான் என்பதற்கு உங்கள் கருத்திலேயே ஆதாரம் உள்ளது.
இடைக்கால வரைபு சமர்ப்பிக்கப்பட்டது 2003 ஓக்ரொபர் மாதத்தில். சுனாமி வந்தது 2004 டிசம்பர் மாதத்தில். “சுனாமியைத் தொடர்ந்த ஒரு இடை ஏற்பாடே இடைக்கால வரைபு” என்று வரலாற்றை மாற்றி சுய இன்பம் அடைய எழுதுவது நீங்களே.
திரு அன்ரன் பாலசிங்கள் அந்த வரைபில் சம்பந்தப்படவில்லை அவர் ஓய்விஇல் இருந்தார் என்பது உங்களுக்கும் தெரியும். எனக்கும் தெரியும். அனைவருக்கும் தெரியும். இந்த உண்மையை எவராலும் மாற்ற முடியாது
Checked
Wed, 04/17/2024 - 20:28
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed